Pages

Wednesday, December 15, 2010

பிரிகின்ற உரிமையோடு உறவு வேண்டும்

இருவரும்
பல தடவைகளில்
நாம்

'நீ'
'நான்'
உரிமையாய்
ஒருமைப்பட்டுக்கொண்டது
வார்த்தைகள்

செல்போனிலும்
சில்மிசங்களாய்
நீண்டுகொண்ட
வாழ்க்கை
'குறுஞ்செய்திகளாய்'

இதுவரை யாருக்கும்
அறிமுகப்படுத்த முடியாமல்
நட்பும் காதலும்
உரிமைப் போராட்டம்
நடத்திக்கொண்டது

நானும் நீயும் மறுத்தாலும்
ஈரப்பொழுதுகளின்
இருட்டு போர்வையில்
கண்கள் உதிர்த்த
வெப்பத்துளிகளுக்கும்
மூச்சுகுழல்வாயில்
முட்டி மோதிய
காதல்காற்றுக்களுக்கும்
சொல்லிவிட்டுப்போ
பிரிகின்ற நேரம்
உரிமையோடு
என்ன
உறவென்று

பிரிந்துவிடு
நீயாக
பிரித்துவிட்டு போகாதே
தானாக

நானும் காதலும்
வாழ்வோம்
இப்போதும்
நாம்

10 comments:

Bavan said...

ஓஹோ..:D

Chitra said...

தலைப்பே கவிதைதான்.

ஹேமா said...

றமேஸ்...ஏன் வரிகளில் இத்தனை வலி,ஏக்கம்.பிரிவதற்கும் பிரிப்பதற்குமான உணர்வை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் !

vanathy said...

very nice.

கவி அழகன் said...

அழகான வலிகள் காதலில் மட்டும் தான்

Jana said...

//பிரிந்துவிடு
நீயாக
பிரித்துவிட்டு போகாதே//

"பிரிகின்ற உரிமையோடு உறவு வேண்டும்"

-ரணத்தோடு என்றும் வாழும் காதல் இது.

ஈரோடு கதிர் said...

தலைப்பே அருமை றமேஷ்

Ramesh said...

@@Bavan said...
நன்றி பவன்
@@Chitra said...
தலைப்புக்கு சொந்தக்காரர் எங்க மதுவர்மன் "நா" http://n-aa.blogspot.com/ இவர் தனது முகப்புத்தகத்தில் இட்ட ஸ்டேடஸ்

@@தமிழ் திரட்டி said...
நன்றி இணைக்கிறோம் இனி
@@ஹேமா said...
நன்றி ஹேமா..
@@vanathy said...
நன்றி வானதி
@@யாதவன் said...
நன்றி யாதவ்
@@Jana said...
நன்றி அண்ண
@@ஈரோடு கதிர்
நன்றி அண்ணா

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

நான் மதுவதனன் எனது அண்ணன்தான் மதுவர்மன் :D

Ramesh said...

மன்னிக்க
மது.
வதனா
எப்படி

இருக்கீங்க..

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு