Pages

Monday, July 11, 2011

இது ஸ்டேடஸ் - 19

"எத்தனையோ இரவுகளிலும் சூரியனைக் கண்டுகொண்ட போதும்,
பகல்களும் காயம் செய்கிறது இருண்டுகொண்டு இந்நாட்களில்"

"கொஞ்சம் மின்னல்
கொஞ்சம் காற்று,
கொஞ்சும் மழை,
கெஞ்சும் சுகம்,
இடைநிறுத்தப்படுகிறது
தொடர்பு சாதனம்."

"பேராசான் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு எமது இதய அஞ்சலி!.
இறுதி நீண்ட நித்திரைக்கு தமிழ் வணக்கம்."

"ஓரங்குல சந்தோசத்துக்காக ஒரு முழம் கஸ்டப்படவேண்டிக்கிடக்கு. ##ஊர்க் கோயில் திருவிழாவும் குடும்பமும்.##"

"நட்புக்குண்டோ அடைக்கும் தாழ்.... நான் நினைக்கவேயில்லை. ஆனால் அதுவாய் ஆனது. உணர்வின் உரசல்களில் சிக்கிய இதயங்கள் நட்பில் சிறப்பே.."

"எல்லா வலிகளுக்கும் மருந்து கிடைப்பதில்லை.
காயங்கள் காய்ந்து போகாமல்..."

"உனக்கான கடமையில் நான் தவறேன். காத்திரு அந்தத்திருநாளை கண்குளிர கொண்டுவருவேன். இந்த நாளும் கடந்துதான் போகும்.
கனமான தம்பி நான் பாரங்களை குறைத்துவிடும் வல்லமை என்னிடமே. மலர்ந்துவிடு... இன்றைய பொழுதும் உனக்கு வெற்றிப்பொழுதாக அமையட்டும்.
இனிய பிறந்தநன்நாள் வாழ்த்துக்கள் சோதரியே..."

"மற்றவர்களின் தோல்விகளும் வெற்றிகளும் நம்மளை(எங்களை) வறுத்தெடுக்கும் போது நமது கவலைகளும் திருப்பதிகளும் போதும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும்."

"பல்வேறுதிறமைகளிலிருந்தும் ஒரு சில பலவீனமான தன்மையை உணர்ந்துகொள்ளுதலே முன்னேற்றத்துக்கு தடையாகிவிடும்
சிலவேளை அவற்றைக்கண்டு பலவீனமாக்குவதால் வெற்றியும் கிடைக்கும்"

"இல்லை இல்லை என்றபோது நமக்கு உண்டு என்று ஆகியது.
இன்று நீ இல்லை என்று சொன்ன போதே
நான் உண்டு இல்லை ஆகிறேன்..
- நண்பனுக்காக --."

"நீண்ட நாளைக்குப்பிறகு அண்ணன்மார்களோடு சங்கமம் பார்லி வித்துக்களின் விளைபொருளில்"

"ஒருமாதிரியா முறையாக திட்டமிடப்படாத ஒரு வேலை திருப்தியாக முடிச்சாச்சு...
எதையும் பிளான் பண்ணணும் இல்லையேல் வேலைப்பளுவும் மன அழுத்தமும் அதிகம்."

"எத்தனையோ எவற்றையோ மறைத்தும் மழுப்பியும் வாழும் வாழ்க்கையில் பல அன்புகளை முலாம்பூசிக்கொள்ள நேரிடும்.."

"ஒவ்வொரு இரவும் நாளைய நாள் எப்படி அமையும் என்ற கேள்வியோடும், இப்படி இருக்கணும் என்ற கற்பனையோடும் கழிகிறது. நாளையையும் நலமாக்கும் வண்ணம் எண்ணத்தை ஏற்றிக்கொள்ளமுனைகிறேன்.."

"தெரிந்து ஒரு தவறு செய்துகொண்டு இருப்பது கஸ்டமாகவே அமைகிறது. வேண்டுமென்றே தவறைத்தூண்டுகிறது. என்னசெய்வதென்று அறியாமல் நான்.."

"இப்போதைய நாட்கள் கொஞ்சமும் பிடிக்காமல் போவதாய் ஏனோ தானோ என நகருகிறது.. நானும் நகர்த்திக்கொண்டு ஏனோ போகிறது"

"அரசாங்கம் காணொளியை பயங்கரவாதிகளாக பார்க்கும் எண்ணமே ஆக மக்கள் பற்றிய சிந்தனையை மறைத்து மழுப்புவதையும் அதற்காக பயங்கரவாதிகளை அழித்ததாகவும் அழிப்பதற்கு உதவியநாடுகளுடன் சேர்ந்து ஆதரவுதிரட்டுவதையும் மட்டுமே கொண்டிருப்பதையே வலுவாகக்கொண்டிருக்கிறது.
மக்கள் பற்றிய ஜனநாயக எண்ணமோ அக்கறையோ எப்போதும் வெளிக்காட்டாத அரசியலில் தமிழ்மக்கள் என்றாலே பயங்கரவாதிகளாகவே பார்த்து தட்டிக்கழிப்புப்போக்கினையே காட்டுகின்றனர்.
இன்னும் ஏதோ நல்லது மக்களுக்கு நடந்தாகணும் என்ற எண்ணம் மட்டுமே."


"நேற்றிரவு கஸ்டப்பட்டு பார்த்தேன் முழுமையாக அல்ல. ஆனால் நான் அழுதுவிடுவேன் என என் அக்கா அப்பா சொன்னபோதும் அவர்களும் அழுதுவிடவே.. ஓரமாய் அம்மா கண்களைக்கசக்கி இனி நீ பாத்துவிடாதே என்றது இன்னும் அதைவிட்டு விலகமுடியாத நிலைமை. இது இப்படித்தான் இருக்கும் என எண்ணியிருந்தாலும் கொஞ்சம் அதிகமாகவே கனத்துவிட்டது இதயம்."


"சிலநேரம் " நான் நலமாக இருக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே பலவற்றை மறைக்கவேண்டிவருகிறது மற்றவர்களுக்காக... மற்றவர்களுக்கு வலிக்கக்கூடாதென்று வலித்துக்கொண்டு.."

இன்றைய படங்கள்.

எனது மருகள் ஊஞ்சலாடுகையில்

கடந்த ஞாயிறன்று, அவளுக்கு கோயிலில் மொட்டை போட்ட பின்னர் அவளது தலைமுடிக்காக அவள் ஏங்கிய தருணம் இனிமேல் முடிவழிப்பதில்லை என்ற உணர்வைக்கூட்டிச்சென்றது.

Thursday, July 7, 2011

களுதாவளைப் பிள்ளையார் ஆலய திருவிழா

தகவல்: காண்க


படம் பார்க்க:



ஒரு பூசையின் சில வினாடிகள்

இங்கு காண்க



இறுதி நாள் இரவு பவனி வந்த பறவைக்காவடி நேர்த்தியின் காட்சி.


தீர்த்தோற்சவப் பெருவிழாவின் படங்கள்.


தீர்த்த உற்சவம்



வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு