Pages

Showing posts with label காதல் இனிமை / வலி. Show all posts
Showing posts with label காதல் இனிமை / வலி. Show all posts

Thursday, December 8, 2011

பின் இருக்கையில் நான்


அழகிய புகைப்படங்கள்
நழுவி நழுவி
அழகிய ஓவியங்கள்
விலகி விலகி

பேருந்தில் நீ
யன்னல் ஓரம்
முன்னிருக்கையில்

எத்தனை அவஸ்தையிலும்
சிறதறடிக்கும்
அழகிய கூந்தல்

சிக்கிய தலைமுடி
கண்ணுக்குள்

அத்தனை வேகங்களை
விசிறியடிக்கும்
நான்
துள்ளி எழுந்து
இருந்துகொண்டு



அவளா நீ
அவளாய்த்தான் இருக்கணும்
நீ

உரசி உரசிக்கொள்ளும்
உதிரம் கொதித்துக்கொள்ளும்

ஒரு திரும்பல் வேண்டும்
தவநிலையின்
ஒற்றைக்காலில்
நான்
பின்னிருக்கையில்






Friday, October 8, 2010

வேயப்படும் கனவு

சீனியில்
மொய்க்கும் ஈக்களாய்
உணர்வுகள்

தின்னப்படுகிறது

கட்டிக்கொண்டது
கற்றுத்தரவில்லை

மொய்க்கும்
ஈக்களாய்
பச்சக்காயம்
காயம்
காயப்பட்ட வடு

வலிக்கப்படுகிறது

ஒட்டிக்கொண்டது
ஒடிந்துகொள்ளவில்லை

பூமிக்குள் பூகம்பம்
கனவுகள்
வேயப்படுகிறது

எரிமலைக்குழம்பு
கண்ணீர்
குமுறிக்கொள்கிறது

கூரையில்
ஓட்டைகள்
ஒட்டடைகள்
நிலவின் வெளிச்சம்
வட்டமாய்
கண்ணுக்குள்

Monday, September 20, 2010

பாடலும் அவஸ்தையும்


இசை எப்படி ரசனையாகிறது என்பது சொல்லித் தெரிவதில்லை. இசையின் தாக்கம் இதயத்தில் இசையும் என்பது இயற்கை. நான் என்ன விதிவிலக்கா இசைக்கு. இதனாலேயே ஒவ்வொரு இசையையின் ரசனையில் உழன்று என்ன என்ன மனசுக்குப் பிடிக்கிறது என தேடிக்கொள்ளும் சராசரி மனிதனில் நானும் ஒருவன்.
ஆனாலும் இசை என்னும் போது காலையின் காட்சியை அலங்கரிக்கும் இயற்கையை துயிலெழுப்பும் அனைத்து கிராமத்து இசையையும் சுவைத்து ரசனை எனும் தண்ணீரில் மூழ்கிவிடும் ரசிகன் நான். இதனை எழுத்துக்களில் கொணர்வது முட்டாள் தனம் என நினைக்கிறேன்.

"ரசியுங்கள்
கேளுங்கள்
இதயத்தின் சுவர்களில்
இதயம் தன்னை
அடயாளப்படுத்திக்கொள்ளும்
இசையின் எழுச்சிகளால்"

இந்தப்பாடல் நான் பதினொருவயதுகளில் எனது காதுகளை துளைத்து நெழித்த பாடல் "காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே"
ஒவ்வொரு இதயத்திலும் இந்தப் பாடல் இசைத்துவிடும் இசை விதைத்துவிடும் ரசனையை. இல்லை என்று மறுப்பதற்கு நெஞ்சம் மறுத்துவிடும் வைரமுத்தான வரிகள். காதலின் அவஸ்த்தையை ஒரு ஆணின் காதலை கண்ணீரில் எவ்வாறு படம் பிடித்துக்காட்டப்படுகிறது என்பது மெய்மறப்பது என்றால் இது என்பதை ஒருமுறைசொல்லிவிட்டும் போகும்.
என் நினைவில் நீ இருப்பதால் நெஞ்சை விட்டு எவ்வாறு பிரிந்துகொள்ள முடியும் உன்னால் காதலியே நீ இல்லாத கணங்கள் கண்ணீர்ப் பூக்களைச் சொரிகிறது என்பதை அழகாகா

"கண்ணுக்குள் நீதான் , கண்ணீரில் நீதான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ எதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே , எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே"

உன்னுடன் இருந்த நினைவுகள் எல்லாம் என்னைக் கொல்லுவதாய் உணருகிறேன். இயற்கையை வெறுக்கணும் போல இருக்கு என்பதை படம் போட்டுக்காட்டும் இந்தவரிகள் காதலித்த உணர்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன.உரசல்கள் உயிரை மூச்சடைய வைத்த பார்வைகள் என்று காதலையும் இயற்கையையும்..

"தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்"

வாழ்க்கையை வார்த்தைகளுடன் சேர்த்துவிடும் தன்மை அற்புதம்

"வாயில்லாமல் போனால் வாதையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே"

தான் படும் வேதனையை முத்தங்கள் தந்த சுகங்கள் இல்லாமல் தவிக்கும் தருணத்தை

"முள்ளோடு தான் முத்தங்களா சொல்! சொல்!!

இயற்கையே உன்னைக் காதல் செய்யவேண்டுமென்றால் காதலியுடன் தான் ரசிக்கமுடியும் என்பதை

"வீசுகின்ற தென்றலே ,
வேலையில்லை நின்று போ!
பேசுகின்ற வெண்ணிலா ,
பெண்மயில்லை ஓய்ந்து போ!
பூ வளர்த்த தோட்டமே ,
கூந்தலில்லை தீர்ந்து போ!
பூமி பார்க்கும் வானமே ,
புள்ளியாக தேய்ந்து போ!"

என்னிடம் நண்பனொருவன் பகிர்ந்துகொண்ட கதை (அவனும் அறிந்த விடயங்களைப் அடிக்கடி பகிர்வதுண்டு என்னிடம்)

ஒரு காதல் ஜோடி. இருவருக்குள்ளும் மிகவும் நல்லதொரு புரிந்துணர்வு. காதலில் இணைந்திருக்கும் இருவரும் ரசனையானவர்கள். ஒரு விசேட தினம். இருவருக்குள்ளும் பரிசுப்பொருள் பகிர்ந்துகொள்ள வேண்டிய தேவை. அவன் எப்போதும் நல்லதொரு அழகிய கைக்கடிகாரம் கட்டிக்கொள்ளுவான். ஆனால் அதன் பட்டி ரசிக்கும் படியாகவோ இல்லை. அவள் தனது நீண்ட கூந்தலை தலைமுடிவெட்டி அதை வாங்கும் நிலையத்துக்குக் கொண்டு வெட்டிக்கொடுத்து விற்று அதிலிருந்து பெற்ற பணத்தைக் கொண்டு அவள் காதலனுக்குப் கைக்கடிகாரப் பட்டியை வாங்கிப் பரிசுப்பொருளாக்கிக் கொண்டு அவனிடம் நீட்டினாள்.
அவனும் அதைப் பெளவியமாக ஏற்றுக்கொண்டு மறைத்திருந்த அந்தப்பொருளைப்பார்க்கும் முன் தனது பரிசை நீட்டினான். அவளும் அன்பாக அதை ஏற்றுக்கொண்டு இருவரும் இதயத்தால் பிணைந்து பிரித்துப்பார்க்க அவள் காதலன் அவள் எத்தனை அழகாகவும் அடிக்கடி எத்தனையோ வாசனைத்திரவியங்களால் அடிக்கடி பாதுகாத்தக்கொள்ளும் அந்த அழகிய கார்வண்ணத்து நிள் கூந்தலுக்குரிய அந்த அடர்த்தியான கூந்தலை சோத்து மேலும் அழகுறச்செய்யும் சீமாட்டியை வாங்கிக் கொண்டுவந்திருந்தான் அவன் மணிக்கூட்டை விற்றுவிட்டு......

இதுக்குப்பின் அவனால் என்ன பாடமுடியும்

"பாவயில்லை பாவை ,தேவையென்ன தேவை?
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை?

முள்ளோடு தான் முத்தங்களா சொல்! சொல்!!"

கண்ணீர் வழியும் கண்களுடன் உசிரு போகத்தானே வேணும். காதலின் தேவை காதலர்கள் தங்களுக்கிடையில் எவ்வாறு எவ்வளவு அதிகளவு அன்பு செலுத்துவது யார் பக்கம் அந்த காதல் எடுத்துக்காட்டப்படுகிறது என்று பரீட்சித்துப்பார்ப்பார்கள். காதலர்களாலே அதிக பாடல் வரிகள் வாசிக்கப்படும். இசை ரசிக்கப்படும். இங்கு இசையும் காதலும் என்பதில் காதலில் நான் உள்ளேனா என்பதை அடிக்கடி கேட்டுப்பார்க்கும். காதலின் அவஸ்த்தைகளை காதலி (அருகில்) இல்லாவிட்டால் இசையோடுதான் மனம் பயணிக்கும் என்பது வெளிப்படையானது. இருந்தாலும் தேவைகளோடு முற்றுப்புள்ளிகாண்பது காதலின் பக்குவப்படாத தன்மை என்பது மனவேதனைக்குரிய விடயம்.

Sunday, September 12, 2010

காதல் சாதல்

ஒரு ஆணாய்:
பதின்மவயது அந்தா இந்தா என்று ஆணாய் இருந்து அர்த்தம் தேடும் பருவம். காதல் என்றால் என்ன என்று விழுந்து புரள எண்ணும் மனது. காதல் பாடல்கள் பிடிக்கும் ஐட்டம் அல்லது பிகருகள் என்று எதிர்ப்பால் தேடும் பருவம்.

"பருவம் படர்ந்து
பார்வைகளில் சிதைந்து
காதல் மொழி
எதுவென தேடும் மனது"

எங்கோ பார்த்த அவளை இன்னும் எப்படி இந்த மனதால் வைத்திருக்க முடிகிறது கண்களுக்கு தான் எத்தனை மெமரி காட்டுக்கள். இப்படியெல்லாம் ஏங்கித் தவியாய் தவித்து காலம் கரையும் வாலிபர்களே!

ஒரு பெண்ணைப் பார்த்தால் காதல் வருகிறதென்கிறார்களே. அப்படி என்றால் பார்வைப்புலனற்றவர்களுக்கு காதல் எப்படி இருக்கும் என்று பார்த்தால் நாம் அந்த வயதுகளில் கொண்டது ஒரு மயக்கம் அல்லது மோகம் இதையும் விட சொல்லப்போனால் கண்மூடித்தனமான அன்பு (Infatuation).
காதல் என்பது
"இரு மனம்
எம் மனம்
என் மனம்
என தடுமாறும் வரம்"

(படம் முகநூல் நண்பர் Syed Tareq Rahman's Photos - Drawing இலிருந்து)

இந்தநிலை ஏற்பட வேண்டுமெனில் உணர்வு உள்ளம் வெள்ளமாய் பழகிப்பாருங்கள். இருவருக்கிடையில் இயைந்து போகும் பல இடங்கள் தெரிந்து கொள்ளப்படும். ஒன்றாய் இசைந்து பாடும் ஒரு சந்தம் தெரியும். இது பழகலும் பேசுதலும் உணரப்படும் இனிய பொழுது.

ஆக வெறுமனே பார்த்தால் அவளைக்காதலிக்க முடிகிறது என்றால் கண்ணில் தெரிந்தது காதல் என்பதை விட காமம் அல்லது தீவிர மோகம் என்றே சொல்லத்தோன்றுது. கேட்கலாம் காதல் என்பதன் அர்த்தப்படுத்தல் காமம் என்று. தவறு. காதல் என்பதன் ஒரு விளைபொருள் காதலில் காமம் அதாவது புணர்ச்சி இன்பம். காதலுக்கு முதல் எண்ணும் இதை காதல் எச்சரிக்கும்.
பல காதல்கள் கண்ணீரின் ஊர்வலத்தில் இருப்பதற்கு இதுவே முதன்மை பெறுகிறது.
காதல் பல புரிந்துணர்வுகளில் விட்டுக்கொடுப்புக்களில் வலம்வர வேண்டியது தவிர காவியத்துக்காகவும் கல்லறைகளுக்காகவும் இருப்பதற்கல்ல. காதலிப்பதற்காகவே காதல்.

இப்போதைய நமது பாரம்பரியங்களில் காதல் என்பதை விட வேண்டும் தவிருங்கள் என்றும் ஒரு பொதுவாக எல்லாப் பெற்றோர்களாலும் வெறுக்கப்படக் காரணங்கள் கல்யாணத்துக்கு முன்னான காதல் என்ற போர்வையில் கலைக்கப்பட்ட சிசுக்களின் சாபங்களே. அனேக காதல் கல்யாணங்கள் கல்யாண வாழ்க்கையில் தித்திக்காததும் இதற்கு காரணங்களே.
கல்யாணத்துக்கு முன்னரே இருவரும் ஒருவருக்கொருவர் முழுமையாக உணர்ந்த ??? பிறகு காதலில் கரைந்த பிறகு கல்யாண வாழ்க்கையில் அவர்களால் வாழ முடிவதில்லை என்பது பல அனுபவசாலிகளின் கருத்து. என்னைப் பொறுத்தவரையில் இவர்களிடையே சரியான புரிந்துணர்வு முறையாக கட்டிஎழுப்பப்படாததே அல்லது தொடர்பாடலில் எழும் தீர்க்கப்படாத சிக்கல் நிலைமையுமே காரணமாக இருக்கிறன எனலாம். காதலின் பெறுமதி உணரப்படாமல் மனித இனத்தின் எச்சம் நீடித்த தன்மை என்பதை விளங்காமல் காதலின் அர்த்தம் அறியாமல் இருப்பவர்களால் காதல் என்பது விரும்பப்படாமலும் ஆதரிக்கமுடியாமலும் இருக்கிறது என்பது உண்மையே.

கற்றுக்கொள்க
காதலை
சாதலுக்கு அல்ல
வாழ்வதற்கு
என்று பகர்க உலகே

உணர்வுகளின் எழுச்சிகளில் காதல் வாழ்கிறது என்பது உண்மையே. அது

உயிர்களின் ஆழத்தேடல்
பரிணாமத்தின் பருவத்தேடல்
இதயத்தின் இன்பத்தேடல்

என்பதை உணர்க உள்ளங்களில் தேக்கி நுகர்க.

தேவைகள் தீர்ந்த பிறகு உயிர் என்பது உடல் ஆகும். காதல் தீர்ந்த பிறகு(கல்யாண) வாழ்க்கை நரகமாகும். காதல் சாதல் வரை கொள்க. இறுதி மூச்சும் இனி காதல் மூச்சாகட்டும். கல்யாணம் ஆனால் காதல் சாவது இல்லை. இன்னும் வளர்க்கப்பட வேண்டியதே.

(தொடரும் இனமத மொழிகள் கொண்டு)

Saturday, June 12, 2010

காதல் கிறுக்கன்

உன்னிப்பாக இருக்கிறேன்
உன்னுதடுகள்
எப்போதாவது
அதைச் சொல்லும் என்று

என் செல்போன்
அதிகளவு எழுதிய
அந்த வரிகளை

என் நெஞ்சின் மீது
ஆழமாய்ப் பதிந்த
அது

வார்த்தைகளில்
இல்லாவிடினும்
வரிகளில் மிளிருமெண்டு
அடிக்கடி நானும்
எஸ் எம் எஸ்
வந்திருக்கா எண்டு

பல மணிநேரம்
பஸ் பயணத்திலும்
எதை எதையோ
தேவைக்கில்லாமல் பேசி
தவம் கிடந்த
அந்த வார்த்தை
வராதா என்று

உன்னிப்பாக இருக்கிறேன்
உன்னுதடுகளில்
எப்போதாவது
முணுமுணுப்பாய் என்று

இன்னும் எனக்கு
அந்த சந்தேகம்
நான் காத்திருப்பது
காதலுக்காகவா
காதல்
வார்த்தைகளுக்காகவா

ஆனாலும்
உதடுகளின் உச்சரிப்பில்
உயிர்வாழ்கிறேன்

நன்றி மது

Saturday, April 10, 2010

தாகம்........

கால்கடுக்க
நடந்து நடந்து
வெயில் தெறிக்கத்
தேடித்தேடி
வெடிப்பு விழுந்த
பாறையில்
வீசிய சாரல் மழை
நனைந்தும் நனையாமல்
மண்படையில்
நான்கு
கால்தடங்கள்
இப்போது
எந்தப்புள்ளியில்
என் இருப்பிடம்??

நான்
தொலைந்தது
நெஞ்சை உசுப்பிய
பார்வையிலா
அந்த
ஈரவிழியின்
உள்ளத்திலா

வீணாய் கழித்த நாட்களுக்கு
ஒரு மரம்
நட்டிருந்தால்
இருவரும் சேர்ந்து
காதல் காற்றையாவது...
காதல் மழையிலாவது....

Saturday, March 20, 2010

வருகிறாய் தொலைகிறேன்

காற்றுப்
பெருவழியில்
தூசு
அந்தக்
கண்விழியில்
காதல்
நான்
மூடவா
திறக்கவா??

நினைவுகள்
மணித்தியாலங்களில்
நிஜங்கள்
வினாடிகளில்
நீ மட்டும்
என்னோடு

என்
பயணங்களில்
முகமாலை
பனைமரமாய்
இப்போது
காதல்....

Friday, March 19, 2010

காதல் வேலைக்காகாது

வட்டமிட்டு
உன்னை
வட்ட மண்டபத்தில்
வட்டமிட்டு
உக்காந்து அந்த
சங்கீதப் பயணத்தில்..
என்
காதல்
மனசுக்குள்
ஸ்வரங்களில்.....

ஏழிஸ்வரம் தெரிந்த
உனக்கு என்
காதல் சுரம்
புரியவில்லை

நீ விடுதி தாண்டி
வருகையில்
நான்
வி்ண்ணைத்தாண்டுகிறேன்

நீ தகதிமி தாளமிட
மனசுக்குள்
ஜதிபாடும்
'காதல்'

நான்
கறுப்பன் தான்
காதல்
கிறுக்கனும் கூட...
காதல் நிறம்பார்க்கும்
என்று தெரிந்திருந்தால்
நான் கருப்பையில்
இருக்கும்போது
குங்குமப்பூ கொடுத்திருப்பேன்
என் அம்மாவுக்கு

என் உதடோரம்
சூடேற்றும்
நுரையீரலை புண்படுத்தும்
சிகரெட்டை நிறுத்திவிட்டேன்
என் "காதல்
வேலைக்காவாது" என்று
நீ
சொன்ன கணத்திலிருந்து....

காதல்
தூர்ந்து போயிற்று


(இது ஒரு சங்கீத நண்பனும் அவன் நடனக்காதலியும்.... யாழ் பயணத்தில் கிடைத்த தகவல்)

Thursday, March 11, 2010

இங்கு நீ இல்லை

காதல்
கவிதை

ஆல்
கு
இன்
அது
'நீ'தான்

கவிதையும்
நானும் ஒன்றென்று
சொல்லியதும்
நீ தான்

உயிர் சேராத
மெய் எழுத்தாய்
இப்பொழுது
கவிதை

நீ
விலகியதாலே.......

Tuesday, March 9, 2010

பெயர்மாற்றம்

எனக்கு
நீ
உனக்கு
நான்

தேவைகள்
தீரும் வரை
"வாழ்க்கை"

தேடல்கள்
தீர்ந்த பிறகு
உயிர்
உடல்

Saturday, February 13, 2010

அவன் + அவள் + காதல்

அவன்:

காதல்
அவள் மனதில்
கர்ப்பம் தரிக்க
மறுத்துவிட்டது

இல்லை

என் காதல்
கருக்கலைப்பு
அவள் காதல்
கருப்பையில்

அவள்:

கண்ணால்
கவிதையால்
கனவாய்
காதல் தந்த காதலா
கற்பனையாய் மட்டும்
ஆகிவிட்டாய்

காதல்
அனாதையானது
கண்ணீர் மட்டும்
என்னைக்
கட்டிக்கொண்டது

காதல்:

என்னைக்
கட்டிக்கொள்ளுங்கள்
கடைசிவரை
காப்பாற்றிக்கொள்ளுங்கள்
என்னையல்ல
உங்கள்
மகுடம் கலையாமல்
பார்த்துக்கொள்ளுங்கள்

காகிதத்திலும்
கல்லறையிலும் மட்டும்
நான்
இன்னும்....

Monday, December 21, 2009

தவறிய காதலும் எழுதும் கவிதைகளும்

நாம்
காதலைப் பேசிக்கொள்ளாத
அந்தக்கணங்கள்
இப்போது
கவலைப்படுகின்றன
கலைந்துபோன
கருக்கொண்ட மேகங்கள்
உருக்குலைய
மறந்துவிட்டன என்று

அன்றைய
காதல் தவறி
இப்போது
காகிதத்தில்
விழுந்துவிட்டது



அப்போது
நமது கண்கள்
முட்டிக்கொண்ட போது
எனது கவிதைகளை
உன்னிடம் நான்
கொட்டியிருந்தால்
சிலவேளை
இப்போது
என்னோடு பந்தத்தில்
இணைந்திருப்பாய்

நீ விட்டுப்போனதால்
என் மனக்காகிதத்தில்
பல கவிதைகள்
பிரசவம்

நன்றி சொல்லுது
என் மனது
இப்போது
காதல் கொண்டு
தமிழ் வளர்க்கிறேன்
காதலை தமிழுக்கு
காணிக்கையாக்குகிறேன்



அன்று
நீ என்
காதல் கதாநாயகி
உன்னால் இன்று
எழுத்து, இயக்கம்,
தயாரிப்பு என்று
காதல் திரைப்படம்
என் கவிதைகளில்.....

Saturday, December 19, 2009

இது ஒரு நண்பனின் காதல்..

அவனும் அவளும்
அந்த நெடுஞ்சாலையில்

அவசர நெருக்கடியில்
அற்புத சந்திப்பு அவர்களுக்கு

அவன் :
"மனசில தித்திப்பு
மறுபடி பார்க்கத் துடிக்குது"

அவள் :
"பேசிக்கொள்ளலாமே
இந்தா
என் தொலைபேசி
இலக்கம்"

சுவீப் ரிக்கட்டுப்
பரிசு விழுந்தவனாய்
அவன்
அசடுவழிய
பேசிப்பேசி
எஸ்.எம்.எஸ், ரீலோட்
என்று
காசு கரைத்தான்
கடிகாரம் மறந்த
அந்த நாட்கள் அவனுக்கு
அவசியமில்லாமல்
அற்புதமாக


அவளை
அன்புத்தோழியாக
ஏற்றுக்கொண்டான்...

அவள் மனசுல சந்தேகம்
அன்றொருநாள் திடீரென்று

அவள்:
"நீ
என்னைக்
காதல் செய்கிறாயா..?"
என்றாள் மெளனமாக

மழைவெள்ளத்தில்
அகப்பட்ட குழந்தை போல
அவன்பட்ட கஸ்டம்
அவளுக்குத்தெரியுமா?
இருந்தாலும் மனசு
நந்தவனமாக...

அவன்:
"ஆம்
ஆனா
இல்லை"

என்று
இரண்டும் சேர்த்து
இரண்டுமில்லாமல்
அவன்
சனியன் பிடித்த
சகபாடியானான்

அப்போது அவள்:
"காதல் தவறி
நம்
வாழ்க்கையில்
விழுந்துவிட்டது
காதல் கொண்டு
வாழ்க்கை செய்வோம்
என்றாள்"


மறுக்க முடியாமல்
அவன்
நாடகள்
சதம் சதமாய் கழிய
இன்பச் சில்லறைகளைச்
சேமித்துக்கொள்ள முடியாமல்
தடுமாறினான்

அவளிடம் அவன்:
"ஐஸ்கிறீம் குடிக்கலாமே"

அவள்:
"சூடாக தேனீர்
வேண்டுமென்றாள்"

இப்படி
விவாத மேடை
அடிக்கடி
அரங்கேறியது
முடிவு எட்டப்படாமல்
காதல் தடுமாறியது.

அவனது
விட்டுக்கொடுப்புகள்
எல்லாம்
அவளுக்கு
ஒத்துழைப்புகளாயின

திட்டுக்கள் எல்லாம்
வாதிகளின்
வாதங்களாகின

இப்போது
காதல் தவறி
அவன்
வாழ்க்கை
விழுந்துவிட்டது.

யாகூ ஸ்க்கைப்
ஐடி மாத்தி
இன்னும் நீளும்
அவள்....
வேறொருத்தியாய்
அவளே...
அவனுக்கு
தொல்லை கொடுக்க

அவன்
வாழ்க்கை வெறுத்த
சக்கையாகிறான்...

இப்போது
அவன்
பேசா இளந்தை

இது என் நண்பன் ஒருவன் படும் அவஸ்த்தை அவனுக்காக அவன் கேட்டதற்காக..

Thursday, December 17, 2009

விடையில்லா விடைபெறும் வேளை...

எந்தப் பிரிவில்
இந்த உறவைச் சேர்ப்பது
அடிக்கடி கேட்டுகொண்டன
நம் மனசுகள்
நாமிருவரும்
வாய்விட்டுக் கேட்காமல்

உனக்கும் எனக்கும்
தெரியும்
இது
அதுவல்ல என்று
இருந்தாலும்
நமக்குள்ளே
விடைகாணா கேள்வி
இது மட்டும் தான்..

நான் கேட்ப்பேன்
நீ தருவாய்
ஒரு கோப்பையில்
உன்வீட்டுச் சமையல்
பசியாறும் நம்
இரு உள்ளங்கள்



வா என்பாய்
நண்பர்கள் அடர்ந்த
அந்தப்பகுதியில்
கைபிடித்து
நடைப்பயணம்
ஓ..
அது நிஜங்களில்
நம் நினைவுப்பயணங்கள்

தண்டனைகள் சில
குறும் பிரிவுகளுக்காக...
அடைமழையிலும்
ஐஸ்கிரீம் தந்து
அன்பு பரிசுகள்
ஆயிரம் ஆயிரம்

நீ
விடைபெறும் நேரம்
மனசில் பாரம்
கண்ணில் ஈரம்

இப்போது
புன்னகை உனக்கு..
துணைக்கு
என்நினைவுகள்

எப்போதும்
வாழ்த்துக்கள்
சொன்னபோதும்...
............
கடைசியில்..

இந்த உறவைச்
எந்த வகுப்பில்
சேர்ப்பது?

Thursday, November 12, 2009

மௌனம் கலையட்டும்

காதலர்களே
உங்கள் மௌனத்தைக்
கலைத்துவிடுங்கள்
காதுகளைக்
கூர்மையாக்குங்கள்



நீயாகிய நான்
நானாகிய நீ என்று
உங்கள் உணர்வுகளை
உங்களுக்குள்ளே
புதைத்துக்கொள்ளுங்கள்
உங்களை
இடம்மாறித்
தடம் மாறாமல்
தேடிக்கொள்ளுங்கள்



உறவுகள் உணர்வுகளாக
உரிமைகள்
தனிமைகளாகட்டும்

உள்ளக் குமுறல்கள்
எடுத்துச் சொல்லப்படட்டும்
கள்ளம் கலையட்டும்
கலைந்த காதலும்
துளிர்விட்டுக்கொள்ளும்

காத்திருப்புக்கள்
காதலின்
கதவடைப்புக்கள்
காத்திருந்தால்
காதலின் நீளம்
அளந்துகொள்ளுங்கள்



விட்டுக்கொடுப்புக்கள்
உள்ளப் புரிந்துணர்வுகள்
கள்ளமில்லா வார்த்தைகள்
காதலின் கவிதைகள்
காலத்தை வென்றவை



வெள்ளை மனதை
இன்னும் வெளிச்சமாக்குங்கள்
காதல் ஒளிரட்டும்
காதலோடு ......



Tuesday, September 22, 2009

காதல் காசுக்காக விற்கப்படுகிறது...



நினைவுகள் எழுதிய
நிலவு
வெட்கித் தலைகுனிந்து
புருவம் உயர்த்தி
நீ பார்த்த அந்த
பார்வை முட்கள்
சிரிப்பு வரைந்த
குழி விழுந்த கன்னங்கள்
உன் புன்னகை உதடுகள்

ரசித்தது உண்மை

பருவம் படர்ந்த
முனைப்புகள்
நான் விழுந்த
அந்த தடங்கள்

வெளிச்சம் காட்டிய
உன் மனது
விழுந்துகொண்ட
என் மனது

நீ உடுத்திக்கொண்ட "சுடிதார்"
உன் "சோல்" லில் சுற்றிக்கொண்ட
நானும்....
என்னைப்பற்றிக் கொண்ட
நீயும்....

உன்னோடிருந்த அந்த நாட்கள்
நம்மை எழுதிக்கொண்டது
"காதல் பறவைகள்" என்று
இப்போது எழுதி்க்கொள்ளட்டும்
அது ஒரு நிலாக்காலமென்று

என்னை உடுத்திக்கொண்ட
என் குடும்பம்
என் காதலை விட
கரன்சியைப் பார்க்கிறது
என் தங்கச்சியின் சீதனத்துக்காய்


விட்டுவிடு என்னை
தொலைகிறேன் நான்...

என்மானம் விற்கப்படப்போகிறது
முடிந்தால்
கேள்விப்பத்திரத்துக்கு
விண்ணப்பித்துக்கொள்...

கிடைத்தால் மீண்டும்
துளிர்க்கும் நம் காதல்

வெடக்கப்படுகிறேன்
துக்கப்படுகிறேன்
முகம் புரியா யாருக்கோவாக
நான் அறியா எவளுக்கோவாக
என் காதல்
புதைக்கப்படப்போகிறது

என் காதல்
காசுக்காக
கரைக்கப்படப்போகிறது



காதல் தேவதையே
என்னை தூக்கிலிடு

அதற்கு முன்
என்னை காட்டிய
எனது குடும்பத்தை பற்றி
சற்றே .....
யோசித்துக்கொள்
என் குடும்பத்தின்
வாழ்க்கை புகையிரதம்
இந்த தண்டவாளத்தால் தான்
ஓட்டப்படுகிறது..

நீங்கள் சொல்லுங்கள்........

பாழாயப்போன என்
காதல்
நாசுக்காகவா???
என் வாழ்க்கை
காசுக்காகாகவா????

விட்டுவிடு என்னை
தொலைகிறேன் நான்...

நீ வருவாய் என........


காதல் வானில்
நிலவு - உன்னை
முத்தமிட்ட மேகம்
நான்....
மரணத்தின் பின் துடிக்கும்
மனங்கள் போல
உன் ஞாபகத்தில்
சோகத்தின் தாரமாய்
குடித்தனம் நடத்தும்
இவன்
இன்னும் நீ வருவாய் என
காத்திருக்கிறேன் தனியே....

கவிதைக்கு அர்த்தம் சொல்ல வந்து
என் மேல் நீ விதைத்த
நாற்று
இதயத்தில் வீசும் காற்று
நாற்று
கிளைத்து வளர்வதற்கிடையில்
சிதைக்கப்பட்டு விட்டது
சிதைந்த துண்டுகளுடன்
இதயமும் துளிர் விடுமென
நானும்


மலர்க்கொத்துக்களாய்
உன் நினைவுகள்
மனதில்
இன்னும் நீ வருவாய் என....

Tuesday, September 15, 2009

காதல் வலி

நீயாக வீழ்ந்து கொள்ளவுமில்ல
நானாக மாட்டிக்கொள்ளவுமில்ல
தானாக நாமானோம்
இன்று
நீ நீயாக
நான் மட்டும்
யாரென்று தெரியல
ஏனென்றும் புரியல

இன்னும் உன்னிடம்
அடகுவைக்கப்பட்ட
என்மனது
வங்கியில்
மீட்கப்படாத என்வீட்டு
தங்கச்சங்கிலி போல

தொலைதூர தென்றலும்
என்மனசை
தொட்டுவிட்டுச் செல்லும்
உன் எஸ்எம் எஸ்
படிக்கையிலே

இந்த வேகார வெயிலிலும்
செருப்பிலாமல் நடக்கத்தோன்றுது
நீ விட்டுச் சென்றதாலே

ஆனாலும்
சுகம் காணும் காதலை விட
வலி பிடிச்சிருக்கு

Monday, September 14, 2009

வசிகரா .........

விழி விதைத்து
மொழி தடுத்து
உளி கொடுத்து
கவிதை செதுக்க வைத்து
உயிர் கொடுத்து
உறவுக்கு வழி வகுத்து
உணர்வுக்கு மொழி கொடுத்து
என்னை வசீகரித்தவனே
மலரின் மணமாய்
வாழத்துடிக்கும்
மனம் புதைத்து
எங்கே உன் பொன்மடிஎன
தேடும் தினம் உன்னை நினைத்து

மொட்டுவிட்ட நிலவு
தொட்டுவிட்டது இரவை
கட்டவிழ்ந்த விண் மீன்கள்
சட்டென்று எழுந்தன
புது உறவில்
கண்டுவிட்ட மேகம்
அட்சதை பொழிய
என் கண்களில் பட்டுவிட
உணர்வுகளைத் தொட்டுவிட
எங்கே உன் பொன்மடி என
மனம் தேட தினம் தூங்க

உனக்கென பிறந்தேன்

குலுங்கும் வளையல்
சிணுங்கும் கொலுசு
உன் பெயர் சொல்ல
விரும்பும் மனது
முத்தாக நீ மாற
மூடும் சிப்பியாக
என் உயிர்க்கொடி
பூத்ததென்ன........!!!

கண்நிறை அழகு
பொன்நிற மேனி
குளிர் நிறை விழிகள் கொண்டு
பெண்ணென உருவெடுத்தது
உனக்காகத்தான் அன்பே.......
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு