Pages

Thursday, November 15, 2012

இது ஸ்டேடஸ் - 27


எந்தவொரு தயக்கத்துக்கும் முடிவெடுக்க,
இன்னொருவருடன் கதைச்சா, நாம எடுத்த முடிவின் வலிமையை நுகரலாம்.
ஒரே அலைவரிசையில் இருப்பவர்களோடு இருத்தல் சிறப்பே...!!!## Got a decision ##
மெல்லிய தூறல்களாய் ஆரம்பிக்கிறாய்
துள்ளிய ஆடுபோல் நானும் உந்துருளியில் ஆரம்பிக்கிறேன்.
— at THETTATIVU
 
இயலாமையின் வெளிப்பாடு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும் ஒவ்வொரு ஒப்பீடுகளின் போது...
 
எந்தவொரு சகோதரனின் தந்தையின் உடல் புதைக்கப்படும் போதும், நெஞ்சமுருகி கண்கள் கலங்கி உயிரைப் தின்றுகொள்ளும் உணர்வால், அத்தனை கண்ணீாப்பூக்களை உதிர்த்துவிடுகிறேன்.... ##ஒவ்வொரு தந்தையும் எந்தந்தையாய்
 
ஒவ்வொரு இறப்பும் ஒவ்வொரு வலியைச் சொல்லிச் செல்கிறது.
இறப்பு பற்றிய விவாதங்களை விட இறப்பின் வலி அவனவன் குடும்பத்துக்குத்தான் தெரியும். 3, 8, 31, 41 என நாட்களை கடக்கும் வரை உறவுக்காறனுகள் தெரிஞ்சவங்க வந்து போவாங்க. இதுமட்டுமே எனக்கு பிடிச்சது. ஆனால் கடைசிவரை அந்த இறப்பின் துடிப்பு நெஞ்சுக்குள் அந்தந்த குடும்பத்தின் பாரங்கள், சுமைகள் என்பவற்றை சுமக்கும் குடும்பத்தவர்களுக்குத்தான் தெரியும்.
##மாரடைப்பில் உறவுக்காரர் ஒருவரின் மரணம்##மனதெங்கும் ரணம். ##வலி அனுபவிக்கையில்.
"இராமப்பா" உங்கள் நீண்ட நித்திரை நிம்மதியடையட்டும். உங்களது குடும்பத்தோடு துயர்ப்படுகிறேன்.
 
இண்டைக்கு ஒருமாணவனின் முறைப்பாடு
" டேய் நான் படிச்சவன், என்னால படிக்காதவன் போலவும் இருக்க ஏலும், நீ படிக்காதவன் முடிஞ்சா என்னப் போல படிச்சுப்பாரு"
எண்டு திட்டுறான் சேர் என்றான்....
நான் என்ன செய்யிற எண்டுதெரியாமல் முழிச்சேன்.##படிச்சவனுக்கு திமிர் அதிகம்தான்##இனியாவது படிக்காதவன் படிக்கட்டும்
 
சிலபேர் நீண்டதூரம் பயணிக்கக்கூடியவர்கள், சிலபேர் குறுகிய தூரம் பயணிக்ககூடியவர்கள். ஆனாலும் ஒரே அளவு தூரம் கடக்கக்கூடியவர்களும் உளர்.
இவர்கள் அனைவரும் 'நேரம்' என்பதை கொண்டே கண்டுபிடிக்கப்படுகின்றனர்.
திறமை, புத்திசாலித்தனம், சோம்பல், களைப்பு, எல்லாம் எல்லைப்படுத்தப்படுகாரணி நேரத்துக்கு பிறகுதான். ##முயலும் ஆமையும் கதை.#
 
ஒருவனின் எழுத்து அவன் கொண்ட சமூகத்தினரின் எழுத்து என்பதையும் அடயாளப்படுத்தப்படுகிறதே ! என்று எண்ணிக்கொள்ள மற்றவர்களின் கண்ணீர்த்துளிகள் போதும்.
மற்றவர்களின் கண்ணீரில், எனது கண்ணீர் கரைந்துதான் போகுமா எனது வலிதந்த மற்றவர்க்கு வலி என்றால் என்கண்ணீர் பன்னீராகுமா.?
##சமகாலப் பிரச்சனை என்பதால்
 
தோள்களில் மண் பெட்டிபெட்டியாய் சுமக்கும் போதுதான் தெரிகிறது கூலிக்காரனின் உடல் வலி. அவனுக்குரிய ஊதியம் சரியாக கொடுக்கப்படணும் என்பது சுமந்துபார்த்தாத்தான் புரியுது. #மண் சுமந்தேன்#கூலியின் வலி உணர்ந்தேன்.# முதலாளிகளின் கவனத்துக்கு. ## சிலபேரின் வலியுணர்தல் — at THETTATIVU
 
சில பேர் கதைச்சுச் சென்றபின்னும் அவர்களின் நல்லஎண்ணம் மனதுக்குள் மீண்டும் மீண்டும் கதைச்சுக்கொண்டிருக்கும். ##நல்லவர்களுடன் பழகுதல் நல்லது என்று படிச்சது ஞாபகத்து.
 
சிலநேரங்களில் அன்பைவிட ஆக்ரோசமான வார்த்தைப் பிரயோகங்களுக்கு வன்மை அதிகம் தான்.
ஆனால் அன்பினால் தான் நீண்டதூரம் பயணிக்கலாம்.
வாழ்க்கை அன்பினால் வாழப்படுவதற்கே!!!.
#அன்பே சிவம் ## வாழ்க்கை
 
எத்துணை வியர்வையிலும் காய்ந்துபோகும் கடதாசியாய்..
விரல்களை விட "நா" வுக்கு வலிமை அதிகம்
சு(டப்ப)ட்ட புண்களில் சுரணை இருந்தால் சுண்டியிழுக்கட்டும்
கவனித்துக்கொள்
வேர்களில் தான் கிளைகளில் தங்கிவாழும் கூடு
தலைகொண்டவன் தலைகவிழ்ந்தவன் இல்லையே
##Feeling to favorites
 
ஒரு துக்கம் ஒன்றே போதும் ஒரு நாளைக்கு வாழ்நாள் முழுதும் ஒருவன் துக்கப்பட்ட உணர்வொன்றைத் தருவதற்கு.## தோல்வி ##அதுபற்றிய எண்ணம் ## உளறல்
 
ஒவ்வொரு முறை சுடர் ஏற்றும் போதுதான் தெரிகிறது பலமுறை இருள்களுக்குள் என்று.
 
நட்சத்திரங்கள் பூத்துக்கொண்ட வானம்.
அப்படியே இருள்கொள்ள ஊர்கொண்ட மெளனத்திலே தான்
தெரிகிறது மின்சாரம் எவ்வளவு சத்தத்தை கொடுத்து மாசுபடுத்துகிறது என்று. ##Power Cut##
— at THETTATIVU
 
சில நேரங்களில் திட்டமிட்ட விடயங்களும் திட்டமிடப்படாத அன்புத் தொல்லைகளால் நழுவிப்போகின்றன. ##அன்புக்கு வலிமை அதிகம்தான்##
 
மழைக்கவில்லை இப்பொழுது
மங்கலாய் குளிர்கிறது. கனமான இதயங்களும் இதமாகும் தருணம் இது.
— at THETTATIVU
 
அன்று நனைந்துவிடுவேன் என்று தனது சட்டையை கழற்றி போர்த்திக்கொண்டார் அப்பா - நான் குழந்தையானேன்.
எனது மழைக்கவசத்தையும் தலைக்கவசத்தையும் கழற்றி போர்த்திவிட்டேன் அப்பாவுக்கு இன்று - அப்பா என்றும் உங்களுடன்.#Raining#
Please Respect and care your parents## Thank you appa am always with u, love u appa.##
  
வாழ்க்கை என்பது யாருக்காக. கடவுளுக்காக வாழ்கிறோமா நமக்காக வாழ்கிறோமா??? காமம், கோபம்.... கடக்கணும் ஆதம நிலைபெறணும் என்று சொல்லுவது எதற்காக,,,??? அதற்கு பதிலாக கடவுளாக கல்லாக இருக்கலாம் இல்லையா,,? அதைவிட அத்தகைய உணர்வுகளும் இல்லையெனில் மனித அடயாளம் இல்லாமல் போகும் இல்லையா?? அடுத்து குரு என்பது எதற்கு ஒழுங்காக நம்மை நாங்களே உணர்ந்தால் உணரமுடிந்தால் தான் கடவுள் என்பதன் அர்த்தம் விளங்கும்

எவனொருவன் கெட்டவனாக வாழ்கிறானோ அவனுக்கே நல்லது என்பதன் அர்த்தம் விளங்கும். நல்லவன் என்பது நடிப்புக்குரியவனே. நடிக்கும் வாழ்க்கையையே நாம் கொள்கிறோம் எங்களை உணர்ந்தால் புரியும். சற்று நமக்கு வெளியே நம்மளை உற்று நோக்குங்கள். வாழ்க்கையில் நாம் எப்படி எப்படியெல்லாம் நடிக்கிறோம் என்பதை நாங்களே உணராலாம்
நான் சொல்வதில் தவறிருக்கலாம். அதற்கும் நமக்கு சார்பான எண்ணப்பாங்குகள். மாற்றமுடியாத மாறாத ஒரு வழி எண்ணம் இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தும். (கடைசி வரிகளில் கூட நான் என்னை சரிப்படுத்துவதிலே இருக்கிறது)
அன்புகொண்டு அவ்வப்போது கோபமும் அத்தனை உணர்வுளுடன் வாழ்ந்தாலே போதும். ஏன் வாழ்கிறோம் என்று இல்லாமல் நாம் வாழ்ந்தோம் என்பது நல்லதே##சொல்லத் தோன்றியதை சொல்லிப்புட்டேன்##
 
எந்தன் நினைவை நீளவைக்கும்
அத்தனை கணங்களிலும் ஓரங்களில்
துளிர்த்துக்கொண்டு தூங்காமல் துடிக்கும்
உந்தன் பார்வை- அம்மா என்ற மந்திரமே என்னை ஆளாக்குதே..
##mother's feeling #
 
நீ வேண்டும் என்றே(றோ) தீர்மானிக்கும் கணத்தில்
நீயாகவோ கடவுள் என்கின்ற புள்ளியை உனக்குள்ளாகவோ தீர்மானிக்க முடிகிறது. #நான் கடவுள்# திட்டமிடலில் நான் என்கிற உணர்வு##
 
எப்பொழுதும் அப்புறாணியாக நடிச்சுக்கொண்டு இருப்பவர்கள் சிலவற்றையாவது சாதிப்பது குறைவுதான்.## சிலபேரைப் பார்த்தால் நடிப்பது எப்படி என கற்றுக்கொள்ள முடிகிறது.## Different Life pattern
 
வலிமிகு வாழ்க்கையில் வலிக்கும் மனசு நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் அதிகம் இருக்கும்.
நமக்காகவும் மற்றவர்களுக்காகவும் உழைப்பது குறைவுதான். ஏதோவொரு நொண்டிச்சாட்டு இருந்துக்கிட்டே இருக்கும்## Helping Mind is less than Kindness or Sympathy## True Life
 
மகிழ்ச்சி என்பது மறந்துபோகுது அடிக்கடி. தொலைவானில் நட்சத்திரங்கள் ஒளிர்வதை அவதானிப்பது குறைவுதான்.##வாழ்க்கை.
 
சில திருப்பங்களைப் பெறவேண்டுமெனில் நீ
உன் திரும்பல்களில்தான் பெறவேண்டும் ##மாத்தியோசி
 
இயல்பாக கதைக்க முடிவதில்லை. முகத்துக்கு முன் முகச்சட்டை போட்டுக்கொண்டவர்களால்..
 
மழைதலில் பூமி
நனைதலில் நான்
## Raining
— at THETTATIVU
 
 19 October
சேட்(shirt) போட்டு இருக்கும் போது அதன் மதிப்பு மற்றவர்களுக்குத்தான் தெரியும். அது கிழியும்போது எனக்குத்தான் அதன் மதிப்பு தெரியும்..## Feeling for others ## Feeling ##as well as me
 
சில நேரங்களில் எதிர்பாராத தொலைபேசி அழைப்புக்கள் தித்திக்கும். முகமறியா நபர்களுக்கும் முகவரியை எனது தமிழ் சொல்லிக்கொடுத்துவிடும் போது கொள்கின்ற மகிழ்ச்சிக்கு எல்லையேது.
 
எந்த நிகழ்வுக்கும் கொஞ்சம் முன்னமே திட்டமிட்டால் செவ்வனே சிறப்பாக செய்துமுடிக்கலாம். வேண்டாவெறுப்புடனோ கடைசிநேரத்திலோ சின்ன வேலைகள் செய்துமுடிக்கலாம். ஆனாலும் கூட்டுமுயற்சி எப்போதும் வெற்றிபெறும். திறமையானவர்களுடனும் வேலை செய்யும்போது. ##Done a fantastic work yesterday with short period of planning## Team work sprite##
 
வாங்கோ இருயுங்கோ, என்று வரவேற்று, ஆரம்பித்து சில சில பல என கதைகள் கதைச்சு கடைசில் போயிற்று வாரன் என்று சொல்லும் போதும் வாசல் கதவுவரை வந்து போயிற்று வாங்கோ என்று சொல்லி வழி அனுப்பி வைக்கும் பண்பு எப்போதும் பிடிச்சிருக்கு. கிராமத்து மண்ணின் அழகும் உபசரிப்பும் என்றைக்கும் நிலைச்சிருக்கணும். ###ஆசிரியர் ஒருவரைச் சந்திக்கபோனேன்.## Met one of Sir in his home##
 
வாழத்துக்கள் கரிபியன்களே.!..
இலங்கை ரசிகனாய் இருந்தும் இன்றைய போட்டியில் உங்களுக்கு எனது மனதார ஆதரவு. வெற்றிபெற்றதும் மகிழ்ச்சி. நீண்ட காலத்திற்குபிறகு ஒரு உலகிண்ணம் கிடைக்கவேண்டும் என்ற அவா. இனிவரும் காலங்களிலும் பிரகாசியுங்கள்.
எங்கள் சிங்கங்கள் மீண்டும் புதுப்பித்துக்கொள்வார்கள்.
 
சில தவறுகள் திருத்தப்படுவதற்கு
சில தண்டனைக்கு
தண்டனையால் தவறு திருத்ப்படுவது குறைவு.
தண்டனையின் பயத்தினால் அதிகம்##வாழ்க்கை
 
ஆசிரியர் (நான்) என்பது நான் மட்டுமல்ல
ஒரு சமூகமும் எதிர்காலமும் எங்களிடமே (என்னிடமே)
"ஆசிரியர் தினம் Oct 6." - (இலங்கை).
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்
 
 2 October
இன்று ஒரு கருத்தரங்கு ஒன்றில் " பென்சில் வாழ்க்கை"
"எப்பொழுதும் இலக்கு கூர்மையாக இருக்கவேண்டும்
கூர்மை குறையும் போது தீட்டிக்கொள்ளுங்கள்
வாழ்க்கையும் ஒரு குறிப்பிட்ட காலம்தான்
எதுவானாலும் நாம் சிறப்பாக வாழவேண்டும் மற்றவர்களுக்கும் இடங்கொடுக்க வேண்டும்."
  
சில நேரங்களில் கோபங்களுக்கு நியாயமே கிடைப்பதில்லை
 
மதம் அல்லது சமயம் என்னும் கடவுள் பெயரால் வாழ்க்கை நடத்துபவர்கள் ஏதோ ஒரு வகையில் தனது சுயமான தன்மையை வெளிக்காட்ட பயன்படுத்தும் ஒர் ஊடகமேயாகும். ஒரு வகையாக பொதுமக்களிடம் இருக்கும் பலமான "கடவுள் நம்பிக்கை" என்ற பலவீனத்தை தங்களது பலமாக எடுத்துக்கொண்டு கடவுள் வாதம் நடத்துக்கின்றதை பார்க்கும் போது அவர்களது திறமையை மட்டும் வியக்கமுடிகிறது.
 
அழகென்ற சொல்லுக்கு முருகா...
அடிக்கடி கேட்டுக்கொள்ளும் பாடல்
- பாலமுருகன் கோயில் திருவிழா நடக்குது..
 
இருக்கின்ற வரை
இயல் (பாக)
இசை (ந்துடு)
 
 26 September
விவேகானந்தரது நினைவுநாளாக பல விடயங்கள் கொண்டாடப்படுகிறது. ஆனாலும் சின்னவயசிலேயே பாதித்த வாசகம் இன்றும் இதுதான்
"நன்மை செய்யப்பிறந்தவன் நீ, நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிரு" - சுவாமி விவேகானந்தர்.
 
எனது உத்வேகத்தை வளர்க்கும் அந்த உள்ளங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.##நமக்காக நாம் ஆவோம்#
 
ஒருவர் நிலை அறியாமல் தீடீரென ஏதாச்சும் காரசாரமாய் கதைச்சுவிட்டால் அந்த ஒருவர் கொள்ளும் கோப தாபங்களை ஏற்றுக்கொள்ளவும் ஒரு மனசு வேணும். #இடம், பொருள், ஏவல் பார்க்கணும் என்று ஏற்கனவே தெரிஞ்சு வைச்சாலும் பிசகித்தான் போகுது
 
மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளும் அதற்கு இயைவான "மதம்" என்னும் கேடயப்பொருளும் கொண்டு வாதப்பிரதிவாதங்கொள்ள வேண்டியதில்லை. நமது பிறப்பு என்பது பெற்றோரின் உயிரணுக்களின் சேர்க்கைதான். அதற்கு பிறகு பெற்றோர் வழிநடத்த பரம்பரையான வழியான ஒரு உந்
துசக்தியான அவரவர் மதமும் கடவுளும். என்னைப்பொறுத்தவரையில் இல்லாத ஒன்றுக்காக முரண் ஆவதை விட முயல் என்பதை செய்க. படித்தவன் மேதாவி எல்லாம் கொள்வதும் மதமே படிக்காதவன் பாமரன் கொள்வதும் மதமே.
 
முகம்மது நபி அவர்களை சித்தரிக்கும் காட்சியாம் (தவறு சரி என்று தெரிவதற்கு நான் முகம்மது நபி அவர்களுக்கு முன்னமே பொறந்திருக்கணும் இல்லாட்டி வாழ்ந்திருக்கணும். ஆனாலும் என்னபடம் என்ற ஆவல் வந்து அப்படியே போகுது. ##மதம் கொண்டு மதம் கொள்ளத் தேவையில்லை##என்ற எண்ணத்தால் அதைப்பார்க்கவில்லை.
  தேசியமட்டத்தில் தமிழ்மொழித் தினப்போட்டியில் 2ஆம் இடத்தை கட்டுரையாக்கத்தில் பெற்று போர்வடுக்கள் ஆறாமல் இருக்க தனது திறமையை வெளிக்காட்டிய பெருமைக்குரிய மாணவியுடன் அதிபர், பிரதி அதிபர், ஆசிரியருடன் நான்.
குடிதண்ணீரே சிரமப்பட்டு கிடைக்கும் இந்த கிராமத்தில் இப்பாடசாலையில் ஒரு சில மணிநேரம் இருக்க கிடைத்ததற்கே மகிழ்சியாக இருந்தது
 
இசைவிழுவது காதினில்
எங்கிருந்தோ பெய்கிறது
சாரல்
மனதில்
இசை தவறி
இடம்நுழைகிறது
இங்கே உணர்வுகளும் உயிர்கொள்ளும்
சிறகு முளைக்கும்
காற்று சிலிர்க்கும்.## Loving music ##
 
யாரோ என்று தெரியாட்டியும் எதிர்க்க போகையில் கொஞ்சம் புன்னகை ததும்பினால் மனசுக்குள்ள வார ஆனந்தம் கணமளவில் எத்தனையோமடங்கு அப்போதும் பாவப்பட்ட மனசு இப்படியே எல்லாரும் இருக்கமாட்டாங்களா 'உம்' எண்டு தொங்கப்போட்ட முகங்களை உதைச்சுவிடணும் எண்டு ... ##Smile is Great ##
 
கட்டிவிடப்பார்த்தோம் தேன்கூடு
இங்கு தேனிக்களுக்கு பஞ்சமில்லை
தேனெடுக்க பூக்களில்லை
முட்களும் முலைசுரக்கும்
முத்தங்களும்
ஓ... பாலையில் எழுந்திருக்கிறது
ஒற்றை ரோஜா
 
பொத்தி வச்ச பூவாய் வாழ்க்கை
சுத்திதிரிந்த 'காக்கா' கொத்தி தின்னுது
எச்சில் துப்பிக்கொண்டு
 
இதுவரை நமக்குள்ளே பேசி விழுங்கிக்கொண்ட அரசியலில் அல்லது அரசியல் என்றாலே ஒதுங்குதலே என்கிற எண்ணம் இருந்த நிலைியிலிருந்து சில ஒருமித்த அலைவரிசையில் அனேகம் பேர் நிற்பதை எண்ணி "ஏன்" என்று ஒரு கேள்வி விரித்தாடுகிறது##விதைகொண்ட விருட்சம்போலே..##
 
சில நேரங்களில் பாரிய இடைவெளிகளை நிரப்புவதற்காகவே
ஒர் "ஆரம்பம்" அவசியமாகின்றது.. உன்னால் முடியும் என்று உள்மனம் உறுத்துகிறது. #am on track## On your Mark, Get set, Run##
 
 7 September
நீ கல்லைக் கட்டிப்பிடித்து
கடவுளைக் காணுகிறாய்
நீ கட்டிப்பிடித்து
உயிர்ப்பிக்கும்
"உணர்வில்"
கடவுளைக் காணுகிறேன் நான்
உனக்கு
உருவம்
எனக்கு
உணர்வு
 
 7 September
புத்திகெட்டு போனவன் நெஞ்சில்
பாலை வாத்தாலென்ன
பாலையாய் நிலமானாலென்ன
உன்வீட்டு வாசல் நான்
படியேறும்போது இன்னமும்
அந்த ஓலைக்குடிசையில்
நிலவை ரசிக்க விரும்புகிறேன்
அதற்காக காவல் காக்க
போராளியாய் நிற்பேன்
கவலைப்படாதே சகோதரா
நாளையும் விடியும்
நாளை மறுநாளும் விடியும்
நீ மறுத்தாலென்ன
சூரியன் என்ன சுக்கு நூறா போகும்


எப்போதும் ஏதோ ஒரு பயம் ஏதெதுக்கோ இருந்துகொண்டே இருக்கும். இல்லை என்று மறுப்பு பொய்யாக இருக்கும்.
துணிந்து நிமிர்ந்து எழுந்து என்பதெல்லாம் அதற்குபின்தான். ##Life##

அன்பும் ஒரு போதைவஸ்துதான்.
உயிர்க்கொல்லும் உயிர்கொடுக்கும் வஸ்து தான்

கண்ணீரின் திவலைகளை
துடைத்துவிடும் கைகள்
இசைதான்
நீ பாடு நான் கேட்டுக்கிறங்குகிறேன்
இசைவழியால் உயிர்கொள்கிறேன்.

சில நேரங்களில் சில கேள்விகள் பொருத்தமற்றவையாகிவிடும். அவசரங்களால்..


சில நேரங்களி்ல் அன்புகளால் வரும் தொல்லைகள் தவிர்க்கப்படலாகாது. அன்பும் வன்முறை செய்யும். அன்பினால் அந்த வன்முறையை வெல்லவும் முடியும். ##நேசி யாசிக்கப்படுவாய்.##


எது எதுவோ நேரடியாக கேட்கும்போது கஸ்டமாக அமைந்தாலும் "நம்பிக்கை" என்பது பக்தன் கடவுள் உறவு போலவே. வெற்றிபெற்றால் நான் பக்தனாகவும் அவன் கடவுளாகவும் இருக்கிறான். ##

வாழ்வதென்பது நமக்காக மட்டுமல்ல. பிறரை வாழ்விக்க அதிலுள்ள மகிழ்ச்சிக்கு எல்லை கிடையாது ## நிறமற்ற வானவில்##சுஜாதா# புத்தகத்தின் ஒற்றையில்#


சுவீங்கம் சப்பிக்கொண்டிருப்பதும் வாழ்ந்துகொண்டிருப்பதும் ஒன்றே போல..
முற்பருவம் (ஆரம்பத்தில்) இனிக்கும் தொடர்ந்துவர சுவையே இல்லாமல் சப்பிக்கொண்டே(வாழ்ந்கொண்டே) இருக்கிறோம்

வாய்தர்க்கம் அதிகமானால் முதலில் அந்த இடத்திலிருந்து விலகுதலே முதல் வேலை. நாக்கக்கு கொஞ்சம் அவசரம் அதிகமும் கோவமும் திமிரும் கூடத்தான் இருக்கும் இல்லையா.
 
எந்தப்பிரச்சனைக்கும் வெவ்வேறு தீர்வு இருக்கும்
நமது சிந்தனைதான் ஒரே தீர்வில் நிக்கிறது. கொஞ்சம் யோசித்தால் இன்னொரு வழி தெரியும்.
 
இன்றைய  படம்
 
என் மருமகள் சாரங்கி மாமாவோட நெஞ்சினில் நித்திரை கொள்ளும் அழகு.
இன்பம் என்பது நுகருகையில் தான் தெரியும்.
 
 
 
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு