Pages

Sunday, November 27, 2011

இது ஸ்டேடஸ் - 21


"அப்பாடா எப்பவோ செய்யவேண்டிய வேலையொன்று ஏதேதோ நொண்டிச் சாட்டுக்களால் விடுபட்டு இப்பதான் 90 வீதமாக முடித்திருக்கிறேன்.எதையும் ஆரம்பிச்சிடனும் முடிக்கணும் என்று எண்ணிக்கொண்டிருப்பதை விட களத்திள இறங்கிடணும் என்கிற என்பதை உணர்த்தியது. ##4 வருடத்துக்கு முன்னய வீட்டு வேலை##"

"உன்பார்வை உள்பார்வையா உதட்டுப்பார்வையா.."

"ஒவ்வொரு நிகழ்வும் மதிப்பீடு அல்லது அளவீடு செய்யப்படவேண்டும். அப்போதே நமது பலமும் பலவீனமும் வாய்ப்புகளும் எதிர்ப்பினைகளும் தெரியக்கூடும்"

"சுற்றியடிக்கும் காற்று சிதறடிக்கும் மழை. குளுகுளுவென்ற கூதல்.
இந்தப்போர்வை எதற்கு
நீ அணைக்கும் பொழுது."

"நீ விட்டுச்சென்றதுகளையும் தொட்டுதொட்டுப் பார்த்து களவு எண்ணம் வந்ததுவோ என்னவோ
நீ களவாடிப்போனது என்னை மட்டும் என்பது உண்மை...
ஏனோ இன்னுமின்னும் தொட்டுப்பார்த்துக்கொண்டிருக்கிறேன் உன் நினைவுகளை."

"அந்தக்கண்ணாடிக்குள் எத்தனை திமிருகளைக் கண்டேன்.
அங்கேதான் நான் என்னைக் கொன்றேன்.
குத்துமதிப்பாய் என்னைப் பார்த்ததும் நானும் குத்திக்குத்திக் கொன்றேன். ##அந்தநாள் ஞாபகம்##"

"அனுபவத்துக்காகவே உறவு என்று வைத்துக்கொள்க. பிழையான/எதிரான/எதிர்மறையான அனுபவங்களை நாம் ஏற்றுக்கொள்ள கஸ்டமாக இருப்பது இயல்பு. இருந்தாலும் இழப்புக்களை விட இருந்துகொண்டு அனுபவிப்பது மேல்....."

"நீண்ட காலமாக பல நண்பர்களுடன் மனம்விட்டு உறவாட முடியாதது என்னை ஏதோ செய்வதாய் உணர்கிறேன். அன்புகளை இழந்ததுபோல் உணர்வானது எனக்குள் மாறுதல்கள் இடியப்பச்சிக்கலான மனது.
பாவம் என்று என்னை நானே அடித்து அழுது ஆர்ப்பரிக்கின்றேன்.."

"விடிகின்றபொழுது இனிதாகட்டும்... எதிர்பார்ப்புகள் தவிர்த்து.."

"இன்றைய முதலாவது நற்சிந்தனை நிகழ்வு மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியனாய்.
"புன்சிரிப்புக் கொண்டு மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி நமது மனதையும் மகிழ்ச்சியுற செய்யுங்கள்" இதுவே இன்றைய சிந்தனையாய்.."16 November

"இசைவாக்கிக்கொள்ளல் தவிர்ப்பதை விட மேல். நானும் உங்களுடன் அல்லது நீங்கள் என்னுடன்"
(Adaptation is better than Avoiding... so be with me / am with u)


"சப்தங்களை வெறுக்கும்போதுதான் நிசப்தங்களை வாசிக்க முடிகிறது. வாழ்க்கையையும் சேர்த்து."

"இத்தனைநாள் எதற்கு?
கருக்கொண்ட மறுகணம் உருக்குலைந்தால் என்ன?
வெறுக்கின்ற வாழ்க்கை.
விதிமுடிக்கின்ற நாள் எதுவென தேடும் மனம்!
இன்பத்தை நுகரமறுக்கும் துன்பத்தில் உழன்றுதுடிக்கும்."


"இரவுகள் தீண்டும் கனவுகள் நான்
கனவுகள் வாழும் இரவும் நான்"


"நெருக்கங்களினால் பலநேரம் சொல்லவேண்டிய வேதனைகளையும் சிலநேரங்களில் பேசும் ஓரிரு வார்த்தையும் புன்சிரிப்பும் செய்துவிடும்"


"உன்னுடைய அழைப்புக்களை தவறியதால் உன்னைத் தவறவிடுகிறேன் என்றா அர்த்தம்.
##ஒற்றைத்தலைவலியும் அவஸ்தையும்.. ##
உன்னுடைய ஒவ்வொரு அழைப்பும் பெறுமதியானது. :)
(தயவுசெய்து என்னுடைய அழைப்புக்காக காத்திரு... )"

"தன்னம்பிக்கையீனம் சோம்பலுடன் வளர்கிறதே..."

"மஞ்சள் கலந்து வேப்பிலை கொத்தும் சேர்த்து அம்மா வைச்சித்தந்த அந்த சுடுநீர் குளியல்,
விழுந்த வலிகளைக் கண்டறிய முடிந்தது. அந்த வலிகளையும் உன் அன்பு பிசைந்த தன்மையையும் நுகருகிறேன் தாயே."

"என்னுடைய உந்துருளியின் முதலாவது விபத்து. ஆனாலும் பழைய உந்துருளிளைக்கொண்ட அந்த வயது முதிர்ந்தவரின் உயிரைக்காப்பாற்றும் அளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தேன். நன்றி உந்துருளியே."
"First accident with my mo-bike. But I managed to safe that old motorbike rider's life. Thnx my motorbike to control. Tnx god."
##22 October 2011 at 9:40 ##


"இன்னொருவன் உழைப்பில் வாழ்வதை விட நம்மட உழைப்பில் நாலுபேருக்கு சோறுபோடணும்டா அதுதான் ஆம்பிளையலுக்கு அழகும் திமிரும். ##இண்டைக்கு நண்பனொருவன் இன்னொருவனுக்கு ஒறைக்கவைச்சான்##"


"இந்த அரச(இலவச) பாடசாலைகள் தேவையில்லை என எண்ணத்தோன்றுகிறது. தேவைக்கில்லாத விடயங்களும் பிள்ளைகள் கரிசனையில்லாத கல்விச் சிந்தனையும் ஆசிரியர் தொழில்சார்முறைச் சிந்தனையுமாய் அமைகிறது. இதில் 1 - 5 % மான மாணவர்களே நன்மையடைகின்றனர். :("

"இந்த இரவுப்பாதைகளிலும் கனவுபாதைகளில் வரமாட்டேன் என்றுரைக்காதே
நான் கனவுப்பாதைகளிலும் ஏரோபிளேனில் போவதை விட
சைக்கிளில் போவதையே விரும்புகிறேன் எனக்குத் தெரியும்
எனது கால்களில் விசை அதிகம்"


"இந்த இரவுகளில் சில நேரம்
சிலுவைகளை சுமக்கமுடிகிறது
சிலநேரம் கண்ணீர்ப்பூக்கள் அர்ச்சிக்கப்படுகின்றன..."


"மீண்டும் இரவுகளை அலாறம் செய்யும்
அழுகைகள் தீண்டும் இரவுகள்
உனக்காக கண்முழிக்கும் உள்ளங்கள். #ஆராரிரோ.. ஆராரிரோ#"

"பூவொன்று பூமிபார்த்தது.
வீடு சிரிப்பு மழை பொழிந்தது."

"மற்றவர்களின் நலம் விசாரிப்பில் ஒரு திருப்தி இருக்கிறது. அரட்டையாயிருந்தாலும் அங்கே இதயம் பேசிக்கொள்ளமுடிகிறது. சில பேரின் முகத்திலே பெரும் புன்னகை மட்டும் தடவிக்கொள்ளும். இதயம் இரும்பாயிருக்கும். ஆனால் சிலபேரிடம் இரும்பும் இதயமாய் இருக்கும்.."

இன்றைய படம்

Saturday, November 26, 2011

சிதறும் சில்லறைகள் - 19 (மீண்டும் நான்.)

எழுத எழுத நினைத்து
எழுதாமல் போனேன். ஆனாலும் இன்றைய ஸ்டேடஸ்
"நீ இருந்தால் பிறந்தநாள் வாழ்த்துக்கள். இல்லை என்றால் உனது நேரான தலைமைத்துவ நினைவுகளுடன் நான்."

அதற்காக உன்னை முழுமையாக ஏற்கிறேன் என்று அர்த்தப்படவில்லை.

தலைமைத்துவம் என்பது எவ்வளவு கஸ்டம் என்பது அந்த இடத்திலிருந்து பார்த்தால் தான் தெரியும். 'தலையிடியும் காய்ச்சலும் தனக்குத்தனக்கு வந்தால் தான் தெரியும்' என்று சொல்வுவோமே. அதேபோலத்தான் தலைமைத்துவமும், தலைவர் பதவியும், பொறுப்புக்களும், கடமைகளும் அதனை ஏற்றுக்கொள்ளும்போதுதான் தெரியும் அந்தக் கஸ்டங்களும் நமது பலமும் (Strength), பலவீனமும்(Weakness), வளமும் வாய்ப்புக்களும் (Opportunity and resources), அச்சுறுத்தல்களும் (Threats). நீங்களும் அந்த இடங்களை இடம்பிடித்துப்பாருங்கள் எங்கே நாம் 'நரம்பில்லாத நாக்கால்' காசில்லாததால் வார்த்தைகளை உளறித்தான் விட்டமோ என்று பல ஏக்கங்களும் தப்பு அல்லது தவறுகளும் உணர்த்தப்படும் எதிர்மறையான சிந்தனையுடன். அதேபோல் பலமும் வெற்றி முனைப்புகளும் திறமைகளும் தெரிந்துகொள்ளப்படும் நேர்சிந்தனையாக.

நாளைய நாள்
எனது மெளனங்களுடன் கூடிய அஞ்சலி விளக்குகளை ஏந்திக்கொள்கிறேன் மனதிலும் காயப்பட்ட உள்ளங்களுடன் அழுதுகொள்ளும் நெஞ்சங்களுடன்.

1997/98 பருவகாலங்களில் எழுதியது. வாசியுங்கள் இம்மாதத்துக்கு பொருந்தும்.சில சொற்களை தவிர்த்து சில மாற்றங்களுடன்


வீழ வாழும்

மஞ்சமதில் வீரத் தாலாட்டு கேட்டுற்ற
நெஞ்சமிது வீழாது
நெஞ்சமதில் ஈரத் தமிழ்கேட்டு
வஞ்சஞ்கொண்ட மனது
வஞ்சகனை கண்டுற்று வாசனைகள்
கொண்டு போற்றுவது
பிஞ்சுகளிடமு மில்லை அஞ்சாத்
தமிழன் நெஞ்சுரமுடையான்

தமிழுக்குயிராகி உடல் போர்த்து
உளந்தமிழ்ப் பயிராகி
தமிழுக்குயிராகி உடல் விதைத்து
உடல் தமிழுறவாகி
தமிழுக்குடலாகி உயிர்பிணைத்து
எம்மை தமிழுறவாக்கி
தமிழுக்குறவாகி தமிழ் தளைகட்டி
தமிழான வீரர்களே வாழ்க

கழிபகலும் கங்குற் பொழுதும் களநில
வரம் கண்டு மனம் கறங்கும்
விழிக்கின்ற பொழுது போதும் அவன்
விதிமுடிக்கின்ற தின மின்றென
விடிகின்ற எந்த பொழுதும் தமிழ்
தாய் உதிக்கின்ற நிலமென
விரிகின்ற நிலம் போதும் இருளிடத்து
விடுவிக்க வீரர் மாழும்

கங்குல் மணி யடிக்க கசை யடி
கொடுக்க மனம் கடுவளியா
பொங்கும் மணி யடிக்க கடிது
பூங்குழலேந்தி தாக உளமாய்
வெங்கள மணியடிக்க எம்மின
வீறுசிறக்க வெற்றியென்று
வீழிகிடைக்க மங்கலம்
உலமறிய தமிழெழும்

காப்பிழந்த தாமரையாய் தமிழ்
கற்பிழக்க பொறுக்குமோ
காப்பாள் கொப்பிழக்கா தாமரையாய்
குழல்பிடித்து கடிமரம் நட்டதே
காவிழந்த பலமரமாய் தமிழ்போ
வதோ அவன் வீழவே
காப்பிழக்கா வீரம் வீழுமே
தமிழ் வாழுமே

அதிவேக நெடுஞ்சாலையும் அபிவிருத்திகளும் சில சோகங்கங்களும்

ஆனாலும் நாளைய தினம் 27-11-2011 இலங்கையின் புதிய பரிணாமங்களின் வளர்ச்சியாக 7000 கோடி ரூபாய்களின் செலவில் அதி(???) வேக பாதை கொட்டாவவிலிருந்து மாத்தறையின் கொட்டகம வரையான இலங்கையின் நீண்டதும் பெரியதுமான அதிவேக நெடுஞ்சாலை மாண்புமிகு ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்பட இருக்கிறது. வரவேற்கிறேன். வெவ்வேறாக பல்வேறு முன்னேற்றங்கள் அவசியம் தேவை மாற்றங்களுடன்.
ஆனாலும் நாளைய தினம் தமிழ்மக்களின் உயிர்நாள் அப்பேர்ப்பட்ட நாட்களில் அனேகமாக பல அபிவிருத்தித்திட்டங்களின் திறப்புவிழா நடைபெறுவது அண்மைய காலங்களில் நிகழ்வதன் மூலம் தமிழ்மக்களின் உணர்வுகளில் ஊசிஏற்றுவதாக உள்ளதாய் இருக்கிறதல்லவா.
ஆனபோதும் "எரிகின்ற காயத்துக்கு அமிலம் ஊற்றாமல் மருந்துகளும் ஆறுதல் வார்த்தைகளும் தந்தால் என்ன"....

மாண்புமிகு ஜனாதிபதியின் ஆட்சியில் என்னைப்பொறுத்தவரையில் சொல்லக்கூடிய உள்ளங்கை நெல்லிக்கனியாக இருப்பது பாதை/வீதிகளின் அபிவிருத்தி. முதல்ல கஸ்டப்பட்டு பல மணித்தியாலங்கள் செலவிட்டு அலுப்படைந்து போனபோது நேரங்களை மிச்சப்படுத்தியபோதும் வாகன விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுவதை தவிர்க்கமுடியாத நிலைகாணப்படுகிறது. இதற்காக கட்டாயம் மக்களுக்கு சரியான பாதை ஓட்டுதல் பற்றிய விளக்கப்பயிற்சி வழங்கப்பட வேண்டும். ஆனால் நீங்கள் கேட்கலாம் இவர்கள் என்ன கள்ள அனுமதிப்பத்திரங்களுடனா ஓட்டுனராகிறார்கள் என்று. என்னதான் ஊழல் ஒழியவேண்டும் என்று கத்தினாலும் அரசாங்க அலுவலகங்கள் அதிகாரிகள் மட்டத்தைப் பார்த்தால் அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் திணைக்களங்கள், பாதுகாப்புத் திணைக்களங்கள், அனர்த்த முகாமைத்துவ திணைக்களங்கள், நிவாரணப்பணிகளில் இலஞ்ச ஊழலை தவிர்க்க முடியாமல் இருப்பது கண்கூடு.

வரவேற்கிறோம்
நேற்றுமுதல் முன்னணி பத்திரிகையொன்று தனது விஸ்தரிப்புகளில் ஒன்றாக "டிஜிட்டல் யுகம்" எனும் பகுதியில் வலைப்பூக்களின் வலுவை அதிகரிக்கும் நோக்குடன் "வலைப்பூக்களோடு விளையாடுவோம்" என்று மிக நேர்த்தியாகவும் வெளிப்படையான பல்திறமையான ஊடகத்துக்கேற்ற மிகத் திறமையினராக தனது வலைப்பூவை எழுதுவதுபோல் வித்தியாசமான பாணியில் எழுத்துக்களை கையாண்டு பெருமிக்கிறார் நண்பர் மருதமூரான் (இவரது வலைப்பூவுக்கு இங்கு செல்க)இவரது இந்த முயற்சிக்கு ஆயிரம் கைதட்டல்கள் நெஞ்சுநிமிர்த்தி.வாழ்த்துக்கள் நண்பரே.


ஒரு பாடல்
ஒவ்வொரு பாடல்களில் ஒவ்வொரு சுவை. இந்தப்பாடலில் தவில் மற்றும் கிளரினட் அற்புதமாய் விளையாடியிருக்கிறது. வைரமுத்துவின் வரிகளும் அருமை. அதைவிட நான் ரசிக்கிறேன் ஏ.ஆர். ரஃமானின் அந்தக்கால இனிய படைப்பாய். புதியமன்னர்கள் படத்தில் மனோ மற்றும் குழுவினர்

வானில் ஏணி போட்டு
ஹோய் கட்டு கோடி கட்டு
சொர்க்கம் வந்ததென்று
ஹோய் தட்டு கை தட்டு
மின்னல் நமக்கு தங்க சங்கிலி
விண்மீனேல்லாம் சின்ன மின்மினி
வானவில்தான் நம்
வாலிப தேசிய கொடி



கடைசியாக

"கைகொடுங்கள் கையால் அடிக்காதீர்கள் கையாலாகாதவனில்லை.
தோள்கொடுங்கள் தலை கொடுப்பேன் தலையாலடிக்காதீர்கள்.
தலைக்கனமானவன்."

"உனக்குக் கீழே இருப்பவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு" என்று கண்ணதாசன் சொல்லிய வரிகள் நம்மட விதி அவ்வளவுதான் என்று ஏக்கப் பெருமூச்செறிய மட்டுமே உதவும். இவ்வசனம் எங்களை வளர்காது. "நமக்கு மேலே இருப்பவர் கோடி நினைத்துப்பார்த்து முன்னேறு" அதாவது முன்னேற்றத்தின் பாதையில் இருப்பவர்கள் நாம் எப்போதும் எங்களுக்கு இருப்பது அல்லது எங்களது தகமைகள் அல்லது திறமைகள் போதும் என்று எண்ணாமல் எங்களை விட உயர்வான நிலையில் உயர்வான பதவியில் உயர்வான இடத்தில் இருப்பவர்களைப் பார்த்தாவது முன்னேற்றத்தின் பாதையைத் திட்டமிட்டு வளர்ச்சியின் போக்கில் நாம் இருக்கவேண்டும். இதற்காக அவர்கள் எவ்வாறு கஸ்டப்பட்டு அந்த இடத்தை அடைந்தார்களோ அந்த கஸ்டங்களான அனுபவங்கள் எங்களை இன்னுமின்னும் வழிப்படுத்தி முன்னேற்றத்துக்குக் கொண்டுசெல்லும் இல்லையா?.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு