Pages

Thursday, October 6, 2011

இது ஸ்டேடஸ் - 20

"நான் எழுதவும் பழக்கிட்டேனடி. நீ இன்னுமின்னும் எழுதிக்கொள். உன்னால் உலகம் எழுதப்படவேணும். ஆனா என்று சொல்ல நீ மாமா என்றே சொல்லி நானா என்றாய். இன்று உன் பொறுமையும் எழுதவேண்டுமென்ற முனைப்பும் போதுமடி. எனக்கு அகரம் எழுதிய உன் தாத்தா முன் உனக்கு எழுதியது இன்னுமின்னும் எனக்கு வலிமை சேர்த்துவிட்டதடி. மொத்தத்தில் இன்றைய நாள் இரட்டிப்பு மகிழ்ச்சி."


""மிகவும் சிறப்பான நாளாக இந்நாளையும் தேக்கிக்கொண்டது மனது. நன்றி என்னருமை ஆசிரியர்களே! என்னையும் ஓர் ஆசிரியனாக்கிய என்னருமை மாணாக்கர்களே... எனது ஆசிர்வாதங்களையும் கடவுள் நல்லாசியுடன் என்றும் உங்களோடு நான் இருப்பேன்""##ஆசிரியர் தினம்##

"நாளைய நாளும் 'அ' எழுதப்போறன் .. மருகளே உனது வாழ்விலும் மற்றோர் வாழ்விற்கும் எழுந்து நில் எழுத்துக்களால் துணிந்து நில்.. நாளை உனக்காக அகரம் முதலாய் கொணர்கிறேன்...
##ஏடு தொடங்கல்##"

"UNESCO வினால் உலக ஆசிரியர் தினம் ஒக்டோபர் 5 ஆக இருந்தாலும் ஒக்டோபர் 6 தான் இலங்கையில் கொண்டாடப்படுகிறது. எனது வாழ்விலும் ஒளியேற்றிய அத்தனை ஆசிரியர்களுக்கும் நன்றியும் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி ஆசான்களே. நாம் என்றும் உங்களோடு."

"இந்தநாளும் தொலைக்கிறது.. வேண்டாதவை வந்து ஏற்றுக்கொள் என்றும் வேண்டியது தேடாமலும் போகிறது.."

"ஏதாவதொன்று பிடித்துவிட்டவுடனே அதுபற்றிய தேடல் அதிகரிக்கும் போதுதான் அந்தஒன்று பற்றிய தெளிவும் கிடைக்கிறது. விருப்பமும் விரும்பாமையும் தான்.."

"தவறுதலாகக்கூட நீ அனுப்பும்
உன் வெறுமையான sms கிடைக்கும் போதும்
உன் மனதை எண்ணிக்கொள்ள முடியுது
நீ என்னை தவறுதலாகக்கூட நினைக்கிறாய் என்று""

"சில அழுகைகள் கூடிய(ஆழ்ந்த) அன்பினாலும் வந்துதொலைக்கிறது. ஆனால் அப்பொழுதும் சிரிக்கமுடிவது நம்மளப்பற்றியே சிந்திக்கிறது குறைவு என்று. ##ஒரு பரிசுப்பொருளும் நானும் படும்பாடு##"

"பரிசு கிடைக்கும் என்று யோசியக்காரன் சொல்லுவதில்லை எனக்கு.
ஆனால் அன்பானவர்கள் இருக்கிறார்கள் என்பதில் கடவுள் இல்லை என்று நான் எண்ணுவதுமில்லை. அவர்கள் என்னோடு எனக்காக.. நன்றி அந்த உள்ளங்களுக்கு."


"நேற்று, தம்பியொருவன் தனது தாய் தான் செய்துவந்த இடியப்பம் விற்று உழைத்த தொழிலை விடச் சொன்னால் விடுவதாக இல்லை என்று கவலைப்பட்டுக்கொண்டான். தான் பயிர்ச்செய்கையை ஆரம்பித்திருப்பதாகவும் அதனால்தான் தனது குடும்பம் இற்றைக்கு ஒரு வருடத்துக்குமேல் சாப்பிட்டு வருவதாகவும் சொன்னது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தனது தந்தை போரினால் இறந்தும் குடும்பத்தை தாங்கும் இவன், மனதை என்னமோ செய்தான்.""25 September at 21:03"

"ஒரு முடிவெடுத்தால் மாற்றாமல் தொடர்ந்திடணும் நாளை என்பதை விட இப்பொழுது என்று சென்றால் முடிந்துவிடும். #பதிவு எழுதியாச்சு##"

""பெரிய கனவுகளால் திருப்தியளிக்க முடிவதில்லை. ஒரு சிறிய சொற்களே பெரும் வெற்றிகளுக்கா ஆரம்பிக்கும். சிறியவிடயத்திலிருந்தே உரிய வெற்றியடைய முயற்சியுங்கள்""

இன்றைய படங்கள் இரண்டு

ஏடுதொடங்கல் மருமகளுக்கு எனது மாமாவுடன் நானும்








வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு