Pages

Thursday, August 23, 2012

மனசெல்லாம் மழையே


உயிர் கொண்ட இடமெல்லாம்
நீ பயிர்கொண்டாய்
படபடத்து படருகையில்
துளிதுளித்து ஈரம் தந்தாய்

இருக்கிறேனா
இல்லையா என்றவினா
இருக்கையில் இரண்டுமில்லா
இருப்பை
மனசெல்லாம் நிறைத்துவிட்டாய்

மழை நின்றதும்
உயிர்க்கொல்லும்
மரண அமைதியாய்
மனம்

நீ
மழையாகி
உன்நினைவு அலைகளில்
அலைகிறேன்

நான்கு கண்கள்
ஒருவழியில்
இருபார்வை
இலத்திரன்கள் பயணிக்கும்
இதயத்தில் இடமளிக்கும்

இலத்திரன் பாய்ச்சலில்
இடியும் மின்னலும் தான்
மழைதூவிச் செல்லும்
மனசெல்லாம்



Wednesday, August 22, 2012

இது ஸ்டேடஸ் -26

Aug 7, 2012
எத்தனை அறிவுரையும் கேட்கும்போது விளங்கிறதே இல்லை நாம் இன்னொருவருக்கு சொல்லும் வரை.##அனுபவம்##அறிவுரை

என் தந்தை, தாய் எழுதிய கடைசி எழுத்து, முதன் முதலாய் வளிமண்டல காற்றை சுவாசித்த நாள் கடக்கும்போதுதான் நிழல்களில் எந்தனை நிஜங்களில் சந்தோச ஸ்பரசங்கள்.. கண்ணீரின் தூறல்கள்.. எண்ணிக்கொள்ளப்படுகின்றன..##remembering Life##

இனிய பொழுதொன்றாய் ஆகட்டும்..##குழந்தையாகிறேன்

Aug 6,2012
அத்தனை சோகத்தையும் துவம்சம் செய்யும் வல்லமை இரண்டிடம் மட்டுமே
இசையும், குழந்தையும்

Aug 5, 2012
மனதார ஆரத்தழுவல் அவசியம். அன்பிற்கு மட்டுமே வேலி இல்லை.


4 August,2012
ஒவ்வொன்றாய் ஒவ்வொரு நாளாய் தோற்றுக்கொண்டே நகர்கிறது - வாழ்க்கை ,
வெற்றிபெறலாமென்ற எண்ணக்கிடக்கையில்.

4 August
உயிர்க்கொல்லும் நஞ்சு
உணர்வு
உயிர்கொடுக்கும் உணவு

11 July
வாழுமிதயத்தின் சுவரில் சில ஓவியங்கள் ஈரப்படுத்திக்கொண்டுதான் இருக்கும் கிழிந்த இருக்கையில்

9 July
கடவுள் அன்பு தந்தால் கடவுளுக்கு அன்பாகவும் இருங்கள்.
ஒருவர் உதவி செய்தால் அதே உதவியை அவருக்கு மாறாக செய்யாமல் உதவி தேவைப்படுகிற வேறொருவருக்கு செய்க

6 July
இன்னமும் மரண ஊர்வலம் நடத்திக்கொண்டிருக்கிறேன்.
புதைக்கவும் வழியில்லை புத்தாக்கவும் தெரியல. ##வாழ்க்கை##
நரகம் வாழ்தலில்## சொர்க்கம் கனவினில்

4 July
டேய் சத்தம் போடாதங்கடா எண்டு நான் சொல்ல "ஓகே சேர் எண்டு ஒருத்தன் சொல்ல, டேய் சத்தம் போடாதடா எண்டு இன்னொருத்தன் அவனுக்கு சொல்ல இப்படியே சத்தம் போட்டு கொண்டிருந்தானுகள். ##நானும் வகுப்பறையும்## வாழ்க்கையும்##ஈழ தமிழரும்##

17 June
அன்புள்ள 'அப்பா' உங்களுடைய சில கடமைகளை என்றோ நான் பொறுப்பெடுத்துவிட்டேன்.அவற்றில் சிலவற்றை செய்துமுடித்தும் விட்டேன். இன்னமும் உங்கள் அன்பு எனக்கு இருந்தால் போதும். விரல் பிடித்து நடந்துவர என்னால் முடியும்.##HAPPY FATHERS day##

30 June
எந்தன் கண்ணீர் துடைக்கும் விரல்கள் விரதம் இருக்கின்றனவா.... ##

19 June
உடல் தின்ற இசையா நீ
உயிர் கொல்லும் கவியா நீ
உணர்வுகள் மெய்ப்படும்போது.

17 June
கடவுள் மீது நம்பிக்கை என்பது எங்கோ ஒரு புள்ளியில் கட்டாயப்படுத்தப்படும் மற்றவர்களுக்காகவாவது. சாத்திரங்கள் கடவுளை நம்பித்தான் வாழ்கின்றன.

2 June
எந்ததேவதை ஆசிர்வதித்ததோ தெரியல ஆனா இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்குது இந்த ஹார்மோனியம்.
இன்று இசைராஜா கொண்டாடுது பிறந்தநாளை அது இளை இசையாகி##happy birthday to Ilayaraja

28 May
சில நேரம் சில மனிதர்கள் பட்டியல் என்பது நீண்டதுதான்.... அனேகமானவர்கள் அழகிய பொழுதுகளை கடக்கிறார்கள்.

26 May
எப்போதும் மற்றவர்களின் சோகம் கவலை என்பது கடுமையாகத்தான் தாக்கிக்கொள்கிறது. அதே நேரம் மற்றவர்களின் சந்தோசத்திலே ஒரு திருப்தி. முன்னயதில் கண்கள் கலங்குகிறது பின்னயதில் புன்னகை ததும்புகிறது.## Feelings for others##

29 April
ஒரே அலைவரிசையில் இருப்பவர்கள் ஒரே இரத்தமாக எண்ணப்படுவர்,தமக்குள் இன்ப துன்பங்களை பகிர்ந்து வேதனையும் சோதனையும் சாதனையையும் கடந்து

29 April
சில அழுத்தங்கள் இருக்கும்பட்சத்தில் தேவையான கட்டாய வேலைகள் கூட செய்வதற்கு இயலாமல் போகின்றன. பிரச்சனை என்ன என்பதை கண்டுபிடிப்பதற்கே பல மணித்தியாலங்கள் கடக்கின்றன. அதற்குள் தீர்வு பற்றி யோசிப்பதா. ##வாழ்க்கைப்பிழை##

28 April
உன் அழைப்புமணியின் கணங்களை கடக்கும் வரை தவிதவித்துக்கொள்ளும் மனசு
##வன்முறை செய்யும் காத்திருப்புக்கள்##

27 April
கண்கள் உகுக்கும் கண்ணீர் அத்தனை அன்புகளையும் சொல்லிவிடுமா என்று தெரியவில்லை. இன்றுமுதல் இன்னும் ஓரிரு வருட ங்களுக்கு நீ இங்கு இல்லை எனக்குள் என்றும் இருக்கிறாய் என்று துடைத்துவிடுகிறது கண்ணீரை பாவப்பட்ட மனசு.#குடும்ப சுமைதாங்கியே சென்றுவா நண்பா#

27 April
பிரிகின்றபோது அழுகையும் நினைவுகளும் வந்துவிடுகிறன. எவ்வள வுதான் மறைக்க நினைத்தாலும் முடிவதில்லை. நட்புக்கு வலிமையே அன்பின் ஆரத்தழுவலும் உயிரோட்டமான உணர்வுகளும்தான். #
சென்றுவா நண்பனே. உனதுபயணம் பாதுகாப்பாகட்டும்#

26 April
சில நேரங்களில் தொலைந்து போகிறேன். சில நேரங்களில் தொலைவாகிப் போகிறேன். உன் தேடல்களில் தான் கண்டுபிடிக்கப்படுகிறேன்

21 April
சில விடயங்களில் சிலபேருக்கு முன்னோடியாக அவர்களுக்கு புதிய விடயங்களை அறிமுகப்படுத்துபவனாக இருப்பதில் மகிழ்ச்சி.
##தன்னிலை பெருமைப்படுத்தல்##

17 April
சில நேரங்களில் ஏதோ ஒரு வகையில் அன்பினால் அதிக பாதிப்புத்தான். ஓடுகிற நீரில் எதிர் நீச்சலைப் பற்றியே எண்ணிக்கொள்ளுது பாவப்பட்ட மனசு. நழுவிற மீனாய் ஆகு என்பது சேர்ந்து வாழும் உறவுகள் சொல்லுது. நான் தரையில் துடிக்கின்ற மீனாய்.
##வெறுப்பான உலக வாழ்க்கை.##

10 April
சிலபேர் திடீரென பிடித்துப்போகின்றனர். அவர்கள் இன்னமும் இணைந்திருக்கின்றனர். சிலபேர் திடீரென விலகிவிடுகின்றனர். அவர்களும் இணைந்திருக்கின்றனர். இரண்டிலும் பெரும் வித்தியாசம்

10 April
எந்த மனக்கஸ்டத்தையும் எந்தவொரு சந்தோசத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலே நகர்கிறது #முகநூலும் நண்பர்களும்#

9 April
புரிந்தும் புரியாமலும் தெரிந்தும் தெரியாமலும் என்றாலும் இருந்தும் இல்லாமல் என்பதை மட்டும் ஏற்க மறுக்குது

8 April
உன் சிரிப்பின் சப்தங்களில் எத்தனை ஈரங்களை - நான் உலர்த்திக்கொள்வது. ##சிரிப்பும் காயம் செய்யும்##

இன்றைய படம்
ஊரிலிருந்து ஒரு பின்னேரப்பொழுதொன்றில்


வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு