Pages

Friday, August 26, 2011

தழும்புகள்

மூச்சுக்காற்றில்
முதுகு வலித்த நாட்களை
இப்பொழுது மூச்சிரைக்கிறேன்

அழுகிய பழத்தில் நுரைக்கின்ற
புழுவாவேன் என்று
அப்பா அடித்த தழும்புகளை
தடவிப்பார்க்கிறேன்
அங்கு ஆழமாய்
எழுதப்பட்ட 'நீ'

முட்டித்தட்டி நாக்கு புரண்டு
இல்லை இல்லை
ஓம் ஓம் என்று
இல்லை என்பதற்கு ஓமும்
ஓம் என்பதற்கு இல்லையும்
மனக்கண்களின்
மெய்கண்ணைக் கண்டது
சிரிப்புச் சிரிப்பாய் இப்பொழுது

எந்த அவசரப்பொழுதுகளிலும்
நீ மறக்கலாம்
ஏன் யார் என்ற நினைவே
இல்லாமல் போகலாம்
ஆனாலும்
என் "முதல்" என்ற ஒன்றில்
நீ மட்டுமே இருப்பதால்
என்னுள்
நிரந்தரமாய் உயிர்ப்பித்திருப்பாய்

Tuesday, August 23, 2011

தாய்மை துறக்கவா.....

வில் வளை மேனி
தேடும் தேனீ

கொல்லை புறம் ஈரம்கூட
நனைக்க முடியாத
முள் தைக்கும் முகங்களில்
பறந்து பாய்ந்து போகும்
மோகினி

கைக்குழந்தை சரிந்திட
இடுப்பில் இறுகிட
கிறீஸ் தடவி போகிறான்
காவாலிப்பயல்
கைக்குழல் பிடித்தது
நினைந்து
இங்கு தாய்மை துறக்கவா
கண்ணீருக்கும் எல்லை உண்டு
கனமான மனம் வேகுது.

தொட்டுவிடாதே- இனி
மூச்சுக்காற்றும்
உன்னை மயக்கஞ்செய்யும்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு