Pages

Friday, January 10, 2014

தோள் மீது வளர்ந்தபோதும்
உன்
தோள்கொண்டு வளர்ந்தபோதும்
என்னோடு ஒன்றாக வளர்ந்தது
உங்கள் பாசம்

உன் உடற்பொலிவில்
ஒருசொட்டுக் குறைவு
என்றாலும்
என் உயிர்த்துடிப்பின்
இடைவெளி கூடுகிறது
தந்தையே....

ஒவ்வடிாரு இருமலுக்கும்
உன் அவஸ்த்தைகள்
என் விலா
எலும்புகளைத்தானே
நோகடிக்கிறது

இருமலின் எச்சிலில்
இரத்தம் வருவதாய்
சொல்லுகிறீர்கள்
உண்மையில்
இரத்தக்கசிவு
என்நெஞ்சிலிருந்து
நிமிருங்கள் தந்தையே
நான் உங்களோடு....

எதையும் தாங்கும் இதயம்
என்னிடம்- இப்போது
உங்கள் கவலைகளால்
தைரியத்தின் வேர்களுக்கு
தைரியம் இல்லை

நடுநிசி கடந்தாலும்
ஒவ்வொரு இரவும்
என் நித்திரைக்குப் பின்னே
உங்கள் உறக்கம்
இன்று இருவரும்
தூக்கம்கொள்ளவில்லை
இருமிக்கொண்ட காய்ச்சலால்.....

தைரியம் ஊட்டி வளர்த்த
தந்தையே
இப்போது தைரியமாய் இருங்கள்
நாளைய விடியல்
நமக்காக உதிக்கும்
கவலைகளால் துருப்பட்டு
கலாங்காதிருங்கள்
உங்கள்
கண்ணீர் துடைக்கும்
விரல்கள் எப்போதும்
என் வேர்வைகளு
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு