அப்பாடா எப்படியோ சதம் அடிச்சாச்சு ( "ம்ம்ம் எங்கடா ... எண்டு யாரங்கே!)
இந்தப்பதிவுதான் நம்மட 100 வது பதிவு அதான் வெற்றிப்பதிவு...
சிதறலின் கதை.....
பதிவு பற்றி எப்பவோ ஒரு PC Times புத்தகத்துல படிச்சிருக்கன் அப்போ அதுபற்றி பெரிதா அலட்டிக்கவில்லை. இணையம் என்பது நமக்கு இடைஞ்சலாக இருந்ததால். ஆனாலும் ஊர் விடயங்கள் நிகழ்வுகள் என்பன இணயத்தரவேற்றம் செய்யப்பட வேண்டுமென்ற அவா மனசுக்குள்ள எப்போதும் இருந்தது. பிறகு இதுபற்றி நம்மட நண்பி தானும் தனது அண்ணாவும் பதிவெழுதுவதாகவும் தனது அண்ணா பல பதிவெழுதுவதாகவும் சொல்லி தனது
"ஜே பக்கங்கள்" என்ற பதிவின் சுட்டியை எனக்கு அனுப்பிருந்தாள். பிறகு தான் தெரிந்தது இந்தப்பதிவுலகம் உடனேயே யூ ரியுப்பில எவ்வாறு ஆரம்பிப்பது என்று பார்த்திட்டு ஆரம்பித்தேன் முதல் பதிவு என்வீட்டு முகப்பு படம் பின் எனது கவிதை
"தாலாட்டின் இசைச்சிற்பி என்தாய்"
பத்து திங்கள் உன் கருவில்
ஊன்றியதால்தான் இந்த
பிள்ளைத்தாவரம் பூமியில்
காலூன்றியது - இருந்தாலும்
உன் அன்புச்
சூரியகதிர்களால் தான்
இன்னமும்
"வாழ்க்கைச் சேர்க்கை " செய்கிறது
அம்மா ........
என்று முதல்பதிவு கவிதையில் அம்மாவுக்கு சமர்ப்பணமாக.. தொடர்ந்து டெம்பலேட்டுக்களை மாற்றுவது பற்றியும் நண்பியே சொல்ல எனது வலைப்பதிவை அழகுபடுத்தக்(...?) கற்றுக்கொண்டு அதன் அழகு பற்றி எனது மற்றொரு நண்பன்
"Wall papers" என்று அழகிய படங்களுக்காக தனது பதிவை வெளியிடும் ஜெயதீபனை அடிக்கடி தொல்லைகொடுத்து எப்படி இருக்குடா கொமண்ட் பண்ணு எண்டு மிகவும் கஸ்ட்ப்பட்டு தொல்லையிலும் இந்தப்பதிவு வளர ஆரம்பத்தில் நம்ம தம்பியானவர் சுரேனும் "இப்படி மாத்துங்க அப்படி எழுதுங்க.." எண்டு சொல்லச்சொல்ல ஒருமாதிரியா உருப்பெற்றது இந்தச் சிதறல்கள்... ஆனா சில மாதங்கள் கடந்த பிற்பாடுதான் தெரிந்தது இன்னுமொரு
சிதறல்கள் இருப்பது. ஆனாலும் எனுது பதிவின் பெயரை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை ஏனெனில் தற்செயலாகவும் அவசரமாகவும் பதிவொன்று ஆரம்பிக்கணும் என்ற முனைப்போடும் வந்த சிதறல்கள்... என்ற காரணத்தினால்..
சிதறலின் வெற்றி
சிதறல்களின் நோக்கமே நம்ம கிராமத்து விடயங்கள் இணையவலம் வரவேண்டும் என்பது இப்படி இருக்க கவிதையும் வெளியிடவேண்டும் ஏனெனில் பதிவு தொடர்ச்சியாக எழுதவேண்டும் என்பதால் நம்மளால முடிந்தளவு கவிதை மாதிரியாவது எழுதுகிறேன். இப்படி இருக்க நம்மட ஆரம்பப் பாடசாலையின் வேதனை கலந்த சாதனையை
வறுமையும் திறமையும் + எனது பாடசாலை என்ற தலைப்பில் எழுதியதும் நம்மட ஊரைச்சேர்ந்த புலம்பெயர் நம்மவர்கள் ஒன்றுசேர்ந்து எமது பாடசாலைக்கு உதவுவதற்கு முன்வந்தமை எனது வலைப்பதிவின் முதல் வெற்றி. நன்றி நம்மவர்களே விரைவில் உங்களுக்காக கலைவிழா வந்து சேரும்.
கால்கோள் கவியரங்கில் "களரி"யின் பொங்கல் படையல்
பின்னர் எனது பதிவை பார்த்து கவியரங்குக்கு என்னும் அழைத்து அழுவதா சொல்.. என்ற தலைப்பில் தைப்பொங்கல் விழாவில் கவியரங்கில் போராசிரியர் சி.மெளனகுரு அவர்களின் பார்வையில் பட்டது சிதறலின் கவிதை வெற்றியே..
இதைவிட எனது பக்கத்து ஊர்
சந்ரு போல் பல பதிவர்களை கடல்கடந்தும் பல பதிவர்களை நண்பர்களாக்க முடிந்ததும் அவர்களோடு அடிக்கடி அரட்டை அடிப்பதும்... (ஹிஹிஹி..
பங்குச்சந்தையும் கரவையின் ஓசையும்மனசுக்குள் சிரிக்குமே...ஹிஹிஹி....)
இதுவரை பல பதிவெழுதியதும் நம்ம ஊரு நிகழ்வுகளை அவ்வப்போது படம் பிடித்தும் எழுத்து வடிவில் கொடுக்கும் போதும் நிம்மதியடைகிறேன் ( கொஞ்ச நாளைக்கு புகைப்படம் எடுக்கமுடியாது நம்ம கமெரா உடைஞ்சுட்டு ம்ம்்்ம்ம்்்ம்்்)
பயனுறப்பதிவெழுதவேண்டும் என்ற எண்ணத்தோடு சில மொக்கைப்பதிவெழுதினாலும் மன்னிப்பீர்களாக.....
தொடர்ந்து எழுதுவதற்கு பின்னூட்டமிட்டு வரும் என் உறவுகளுக்கும் வோட்டுப்போட்டு உற்சாகப்படுத்தும் நெஞ்சங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் தொடர்ந்திருங்கள்.
எனது பதிவுகளை பார்த்துவிட்டு நம்ம நண்பர் ஒருவர் அனுப்பிய மடலின் சில பகுதி கீழே.... ஆனால் தமிழுக்காக தவறுவிட்டுவிட்டேனோ என்ற உணர்வும் எனக்குள்ளே... எமது தமிழர் தமது காலாசார விழுமியங்களை எத்தனை இடர்கள் தடைகள் வந்தாலும் செய்வார்கள் என்பதை அறிவீர்கள் தானே.. இது வாழ்க்கையின் நிலையாமையே...
நன்றி ஜெயமார்த்தாண்டன்
வெற்றிப்பதிவு என்னோட பதிவுலகம் அடுத்த வெற்றிக்காக காத்திருப்பு அதான் "தேனலை" இணையவானொலி விரைவில்....
பதிவு பற்றி வைரமுத்துவின் காதலித்துப்பார் பாணியில்
2ஆம் மைல்கல்லும் பதிவெழுதிப்பாரும்....
பதிவெழுதிப்பார்....
உன்னைச் சுற்றி
ரசிகர் வட்டம் தோன்றும்
உன் எழுத்துக்களால்
உலகம் எழுதப்படும்