Pages

Tuesday, August 23, 2011

தாய்மை துறக்கவா.....

வில் வளை மேனி
தேடும் தேனீ

கொல்லை புறம் ஈரம்கூட
நனைக்க முடியாத
முள் தைக்கும் முகங்களில்
பறந்து பாய்ந்து போகும்
மோகினி

கைக்குழந்தை சரிந்திட
இடுப்பில் இறுகிட
கிறீஸ் தடவி போகிறான்
காவாலிப்பயல்
கைக்குழல் பிடித்தது
நினைந்து
இங்கு தாய்மை துறக்கவா
கண்ணீருக்கும் எல்லை உண்டு
கனமான மனம் வேகுது.

தொட்டுவிடாதே- இனி
மூச்சுக்காற்றும்
உன்னை மயக்கஞ்செய்யும்

2 comments:

மதுரை சரவணன் said...

super..vaalththukkal

Mohamed Faaique said...

கைல மாட்னான்னா சட்னி பண்ணிடுங்க பாஸ்.. இந்த கிரீஸ் கள்ளன் இம்ச தாங்க முடியல..

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு