Pages

Sunday, November 27, 2011

இது ஸ்டேடஸ் - 21


"அப்பாடா எப்பவோ செய்யவேண்டிய வேலையொன்று ஏதேதோ நொண்டிச் சாட்டுக்களால் விடுபட்டு இப்பதான் 90 வீதமாக முடித்திருக்கிறேன்.எதையும் ஆரம்பிச்சிடனும் முடிக்கணும் என்று எண்ணிக்கொண்டிருப்பதை விட களத்திள இறங்கிடணும் என்கிற என்பதை உணர்த்தியது. ##4 வருடத்துக்கு முன்னய வீட்டு வேலை##"

"உன்பார்வை உள்பார்வையா உதட்டுப்பார்வையா.."

"ஒவ்வொரு நிகழ்வும் மதிப்பீடு அல்லது அளவீடு செய்யப்படவேண்டும். அப்போதே நமது பலமும் பலவீனமும் வாய்ப்புகளும் எதிர்ப்பினைகளும் தெரியக்கூடும்"

"சுற்றியடிக்கும் காற்று சிதறடிக்கும் மழை. குளுகுளுவென்ற கூதல்.
இந்தப்போர்வை எதற்கு
நீ அணைக்கும் பொழுது."

"நீ விட்டுச்சென்றதுகளையும் தொட்டுதொட்டுப் பார்த்து களவு எண்ணம் வந்ததுவோ என்னவோ
நீ களவாடிப்போனது என்னை மட்டும் என்பது உண்மை...
ஏனோ இன்னுமின்னும் தொட்டுப்பார்த்துக்கொண்டிருக்கிறேன் உன் நினைவுகளை."

"அந்தக்கண்ணாடிக்குள் எத்தனை திமிருகளைக் கண்டேன்.
அங்கேதான் நான் என்னைக் கொன்றேன்.
குத்துமதிப்பாய் என்னைப் பார்த்ததும் நானும் குத்திக்குத்திக் கொன்றேன். ##அந்தநாள் ஞாபகம்##"

"அனுபவத்துக்காகவே உறவு என்று வைத்துக்கொள்க. பிழையான/எதிரான/எதிர்மறையான அனுபவங்களை நாம் ஏற்றுக்கொள்ள கஸ்டமாக இருப்பது இயல்பு. இருந்தாலும் இழப்புக்களை விட இருந்துகொண்டு அனுபவிப்பது மேல்....."

"நீண்ட காலமாக பல நண்பர்களுடன் மனம்விட்டு உறவாட முடியாதது என்னை ஏதோ செய்வதாய் உணர்கிறேன். அன்புகளை இழந்ததுபோல் உணர்வானது எனக்குள் மாறுதல்கள் இடியப்பச்சிக்கலான மனது.
பாவம் என்று என்னை நானே அடித்து அழுது ஆர்ப்பரிக்கின்றேன்.."

"விடிகின்றபொழுது இனிதாகட்டும்... எதிர்பார்ப்புகள் தவிர்த்து.."

"இன்றைய முதலாவது நற்சிந்தனை நிகழ்வு மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியனாய்.
"புன்சிரிப்புக் கொண்டு மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தி நமது மனதையும் மகிழ்ச்சியுற செய்யுங்கள்" இதுவே இன்றைய சிந்தனையாய்.."16 November

"இசைவாக்கிக்கொள்ளல் தவிர்ப்பதை விட மேல். நானும் உங்களுடன் அல்லது நீங்கள் என்னுடன்"
(Adaptation is better than Avoiding... so be with me / am with u)


"சப்தங்களை வெறுக்கும்போதுதான் நிசப்தங்களை வாசிக்க முடிகிறது. வாழ்க்கையையும் சேர்த்து."

"இத்தனைநாள் எதற்கு?
கருக்கொண்ட மறுகணம் உருக்குலைந்தால் என்ன?
வெறுக்கின்ற வாழ்க்கை.
விதிமுடிக்கின்ற நாள் எதுவென தேடும் மனம்!
இன்பத்தை நுகரமறுக்கும் துன்பத்தில் உழன்றுதுடிக்கும்."


"இரவுகள் தீண்டும் கனவுகள் நான்
கனவுகள் வாழும் இரவும் நான்"


"நெருக்கங்களினால் பலநேரம் சொல்லவேண்டிய வேதனைகளையும் சிலநேரங்களில் பேசும் ஓரிரு வார்த்தையும் புன்சிரிப்பும் செய்துவிடும்"


"உன்னுடைய அழைப்புக்களை தவறியதால் உன்னைத் தவறவிடுகிறேன் என்றா அர்த்தம்.
##ஒற்றைத்தலைவலியும் அவஸ்தையும்.. ##
உன்னுடைய ஒவ்வொரு அழைப்பும் பெறுமதியானது. :)
(தயவுசெய்து என்னுடைய அழைப்புக்காக காத்திரு... )"

"தன்னம்பிக்கையீனம் சோம்பலுடன் வளர்கிறதே..."

"மஞ்சள் கலந்து வேப்பிலை கொத்தும் சேர்த்து அம்மா வைச்சித்தந்த அந்த சுடுநீர் குளியல்,
விழுந்த வலிகளைக் கண்டறிய முடிந்தது. அந்த வலிகளையும் உன் அன்பு பிசைந்த தன்மையையும் நுகருகிறேன் தாயே."

"என்னுடைய உந்துருளியின் முதலாவது விபத்து. ஆனாலும் பழைய உந்துருளிளைக்கொண்ட அந்த வயது முதிர்ந்தவரின் உயிரைக்காப்பாற்றும் அளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தேன். நன்றி உந்துருளியே."
"First accident with my mo-bike. But I managed to safe that old motorbike rider's life. Thnx my motorbike to control. Tnx god."
##22 October 2011 at 9:40 ##


"இன்னொருவன் உழைப்பில் வாழ்வதை விட நம்மட உழைப்பில் நாலுபேருக்கு சோறுபோடணும்டா அதுதான் ஆம்பிளையலுக்கு அழகும் திமிரும். ##இண்டைக்கு நண்பனொருவன் இன்னொருவனுக்கு ஒறைக்கவைச்சான்##"


"இந்த அரச(இலவச) பாடசாலைகள் தேவையில்லை என எண்ணத்தோன்றுகிறது. தேவைக்கில்லாத விடயங்களும் பிள்ளைகள் கரிசனையில்லாத கல்விச் சிந்தனையும் ஆசிரியர் தொழில்சார்முறைச் சிந்தனையுமாய் அமைகிறது. இதில் 1 - 5 % மான மாணவர்களே நன்மையடைகின்றனர். :("

"இந்த இரவுப்பாதைகளிலும் கனவுபாதைகளில் வரமாட்டேன் என்றுரைக்காதே
நான் கனவுப்பாதைகளிலும் ஏரோபிளேனில் போவதை விட
சைக்கிளில் போவதையே விரும்புகிறேன் எனக்குத் தெரியும்
எனது கால்களில் விசை அதிகம்"


"இந்த இரவுகளில் சில நேரம்
சிலுவைகளை சுமக்கமுடிகிறது
சிலநேரம் கண்ணீர்ப்பூக்கள் அர்ச்சிக்கப்படுகின்றன..."


"மீண்டும் இரவுகளை அலாறம் செய்யும்
அழுகைகள் தீண்டும் இரவுகள்
உனக்காக கண்முழிக்கும் உள்ளங்கள். #ஆராரிரோ.. ஆராரிரோ#"

"பூவொன்று பூமிபார்த்தது.
வீடு சிரிப்பு மழை பொழிந்தது."

"மற்றவர்களின் நலம் விசாரிப்பில் ஒரு திருப்தி இருக்கிறது. அரட்டையாயிருந்தாலும் அங்கே இதயம் பேசிக்கொள்ளமுடிகிறது. சில பேரின் முகத்திலே பெரும் புன்னகை மட்டும் தடவிக்கொள்ளும். இதயம் இரும்பாயிருக்கும். ஆனால் சிலபேரிடம் இரும்பும் இதயமாய் இருக்கும்.."

இன்றைய படம்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான அருமையான பதிவு. நன்றி நண்பரே! நம்ம தளத்தில்:
"மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன?

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு