Pages

Thursday, August 23, 2012

மனசெல்லாம் மழையே


உயிர் கொண்ட இடமெல்லாம்
நீ பயிர்கொண்டாய்
படபடத்து படருகையில்
துளிதுளித்து ஈரம் தந்தாய்

இருக்கிறேனா
இல்லையா என்றவினா
இருக்கையில் இரண்டுமில்லா
இருப்பை
மனசெல்லாம் நிறைத்துவிட்டாய்

மழை நின்றதும்
உயிர்க்கொல்லும்
மரண அமைதியாய்
மனம்

நீ
மழையாகி
உன்நினைவு அலைகளில்
அலைகிறேன்

நான்கு கண்கள்
ஒருவழியில்
இருபார்வை
இலத்திரன்கள் பயணிக்கும்
இதயத்தில் இடமளிக்கும்

இலத்திரன் பாய்ச்சலில்
இடியும் மின்னலும் தான்
மழைதூவிச் செல்லும்
மனசெல்லாம்



No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு