Pages

Thursday, January 10, 2013

கா... காதல்


அத்தனை
இடுக்கு முடக்குகளிலும்
லாவகமாக செல்லும்
வண்டிச் சக்கரங்களை
காணாத உன்னால்
எப்படி
காதலை கொண்டுசேர்க்க
நீ !
ஒற்றைச் சக்கரத்துடன்
நான் !!

ஆனாலும்
ஊர்தின்ற மழையிலும்
வெள்ளத்தில்
பள்ளக் குழிகளில்
விழுந்து நெழிந்து
அடித்து குதித்து
செல்லும்
ஒற்றை இலையால்
கடலை சென்றடைய
முடியும் என்கிற
முனைப்புடன்...

வெற்றுக்காகிதத்தில்
ஏதேதோ கிறிக்கிவிட்டு
உயிர்மெய் எழுத்துக்களை
அறிமுகம்செய்பவனாக...

விட்டுச்சென்ற
இடங்களில்
காலியானவைபற்றி
காலாவதியான உன்
காதல்
சொல்லிச்செல்கிறது




2 comments:

சசிகலா said...

உயிர்மெய் எழுத்துக்களை
அறிமுகம்செய்பவனாக...

அடடா உயிர்மெய் எழுத்து தெரியாதவங்களா அவங்க.

Ramesh said...

கா for காதல்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு