”அப்பா” சென்றனன் தான்.  
ஜனனமும் பூமியில்
மரணத்தைப் போல் ஒரு
பழையதும் இல்லை” .. கவிஞா் வைரமுத்து அவர்களின் ஜென்மம் நிறைந்தவர் கவிதை அழகாக சித்தரிக்கும். 
ஆன்ம ஈடேற்றம் வேண்டி இன்று எட்டாம் நாள் கடமைகள்.
காலையில் மீண்டும் சுடலையில் அவர் வித்துடல் மண்ணுக்கு பாலாபிஸேகம். கண்ணீர் காணிக்கை. 
”அவன் அருளால் அவன் தாழ் பணிந்து” பாடல்கள்
மதியம் சாப்பாடு- மச்ச சாப்பாடுதான்.
இறுதிக் கடமைகளில் பங்கேற்றவர்களுக்கும் அவருக்கான குழி வெட்டியவர்கள் பிரதானமாக அழைக்கப்பட்டார்கள். அவர்களுக்கான சந்தோச பானங்கள், சாப்பாடு இதர மகிழ்ச்சி நன்றிக்கடன் நிமித்தம் செய்யப்பட்டது.
பின்நேரம் மீண்டும் ஏழு மரக்கறிகள் கொண்டு ஒரு சமையல், பலகாரம், கூழ், வாரப்பம்... என்று சில தின்பண்டங்கள்.
உண்மையில் கூழ் என்றால் எங்கள் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். வாரப்பம் ருசிச்சி உண்பார்.
பழமைவாதியான அவருக்கு பண்பாட்டு கலாசாரம் பேணுவது பிடிக்கும். 
அன்பானவர் இரக்கம் நிறைந்தவர் இழந்துவிட்டோம்....
ஒவ்வொரு உறவினர், தொிந்தவர்கள், பழகியவர்கள், என்று பலபேர் இந்த இக்கட்டான சூழலிலும் வருகை தருவது சந்தோசப்படுவதா வேதனைப்படுவதா.... பெரும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அப்பாவின் ஆத்மா சாந்திபெறும். நிச்சயம் அவரோடு வாழ்தல் பிடிக்கும் என்போம். கடந்துவிடலாம், காலங்களில் அவர் வாழ்வதால் நினைவுப்படுக்கைளின் ஆழத்திலிருந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது ” தம்பி தம்பி ”... என்று எனது தந்தை அழைப்பது. இது வலி! பேரன்பின் வலி!! 
நிச்சயமாகச் சொல்லப்போனால் வாழ்தல் அறம் என்பேன்.
தந்தையின் பிரிவுத்துயாில் ஆயிரமாயிரம் வயற்றுப்பசி போக்குகின்றோம். யாா் யாரோ யாரோ என்று சாப்பாடு மழை என்பதா இதை எந்த காலத்தில் அல்லது வகுதிக்குள் சேர்ப்பது என்றே விளங்களவில்லை.. தொடர்ந்து கொண்டு வருகிறாா்கள். 
அக்காமாாின் வேலைத்தள நண்பர்கள், சகோதர்கள், அத்தான்மாாின் உறவுகள், வேலைத்தள அன்பர்கள்.. எனது அத்தனை அன்புகள் பெரிது..
ஓ.. அப்பா நீங்கள் வாழ்கிறீர்கள்...
இன்றிரவு மடைவைத்து அவருக்கு விருப்பமான தின்பண்டங்கள் மற்றும் பண்பாட்டு தின்பண்டங்கள் என்று படைக்கின்றோம்.
எட்டாம் நாளின் பின்னரே எமது அம்மா தலைவாாிக் கட்ட முடியும். இதன் பின்னரே நாங்கள் இயல்பு நிலைக்கு மீள ஆரம்பிக்கவேண்டும்.... 



No comments:
Post a Comment