Pages

Thursday, October 6, 2011

இது ஸ்டேடஸ் - 20

"நான் எழுதவும் பழக்கிட்டேனடி. நீ இன்னுமின்னும் எழுதிக்கொள். உன்னால் உலகம் எழுதப்படவேணும். ஆனா என்று சொல்ல நீ மாமா என்றே சொல்லி நானா என்றாய். இன்று உன் பொறுமையும் எழுதவேண்டுமென்ற முனைப்பும் போதுமடி. எனக்கு அகரம் எழுதிய உன் தாத்தா முன் உனக்கு எழுதியது இன்னுமின்னும் எனக்கு வலிமை சேர்த்துவிட்டதடி. மொத்தத்தில் இன்றைய நாள் இரட்டிப்பு மகிழ்ச்சி."


""மிகவும் சிறப்பான நாளாக இந்நாளையும் தேக்கிக்கொண்டது மனது. நன்றி என்னருமை ஆசிரியர்களே! என்னையும் ஓர் ஆசிரியனாக்கிய என்னருமை மாணாக்கர்களே... எனது ஆசிர்வாதங்களையும் கடவுள் நல்லாசியுடன் என்றும் உங்களோடு நான் இருப்பேன்""##ஆசிரியர் தினம்##

"நாளைய நாளும் 'அ' எழுதப்போறன் .. மருகளே உனது வாழ்விலும் மற்றோர் வாழ்விற்கும் எழுந்து நில் எழுத்துக்களால் துணிந்து நில்.. நாளை உனக்காக அகரம் முதலாய் கொணர்கிறேன்...
##ஏடு தொடங்கல்##"

"UNESCO வினால் உலக ஆசிரியர் தினம் ஒக்டோபர் 5 ஆக இருந்தாலும் ஒக்டோபர் 6 தான் இலங்கையில் கொண்டாடப்படுகிறது. எனது வாழ்விலும் ஒளியேற்றிய அத்தனை ஆசிரியர்களுக்கும் நன்றியும் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி ஆசான்களே. நாம் என்றும் உங்களோடு."

"இந்தநாளும் தொலைக்கிறது.. வேண்டாதவை வந்து ஏற்றுக்கொள் என்றும் வேண்டியது தேடாமலும் போகிறது.."

"ஏதாவதொன்று பிடித்துவிட்டவுடனே அதுபற்றிய தேடல் அதிகரிக்கும் போதுதான் அந்தஒன்று பற்றிய தெளிவும் கிடைக்கிறது. விருப்பமும் விரும்பாமையும் தான்.."

"தவறுதலாகக்கூட நீ அனுப்பும்
உன் வெறுமையான sms கிடைக்கும் போதும்
உன் மனதை எண்ணிக்கொள்ள முடியுது
நீ என்னை தவறுதலாகக்கூட நினைக்கிறாய் என்று""

"சில அழுகைகள் கூடிய(ஆழ்ந்த) அன்பினாலும் வந்துதொலைக்கிறது. ஆனால் அப்பொழுதும் சிரிக்கமுடிவது நம்மளப்பற்றியே சிந்திக்கிறது குறைவு என்று. ##ஒரு பரிசுப்பொருளும் நானும் படும்பாடு##"

"பரிசு கிடைக்கும் என்று யோசியக்காரன் சொல்லுவதில்லை எனக்கு.
ஆனால் அன்பானவர்கள் இருக்கிறார்கள் என்பதில் கடவுள் இல்லை என்று நான் எண்ணுவதுமில்லை. அவர்கள் என்னோடு எனக்காக.. நன்றி அந்த உள்ளங்களுக்கு."


"நேற்று, தம்பியொருவன் தனது தாய் தான் செய்துவந்த இடியப்பம் விற்று உழைத்த தொழிலை விடச் சொன்னால் விடுவதாக இல்லை என்று கவலைப்பட்டுக்கொண்டான். தான் பயிர்ச்செய்கையை ஆரம்பித்திருப்பதாகவும் அதனால்தான் தனது குடும்பம் இற்றைக்கு ஒரு வருடத்துக்குமேல் சாப்பிட்டு வருவதாகவும் சொன்னது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. தனது தந்தை போரினால் இறந்தும் குடும்பத்தை தாங்கும் இவன், மனதை என்னமோ செய்தான்.""25 September at 21:03"

"ஒரு முடிவெடுத்தால் மாற்றாமல் தொடர்ந்திடணும் நாளை என்பதை விட இப்பொழுது என்று சென்றால் முடிந்துவிடும். #பதிவு எழுதியாச்சு##"

""பெரிய கனவுகளால் திருப்தியளிக்க முடிவதில்லை. ஒரு சிறிய சொற்களே பெரும் வெற்றிகளுக்கா ஆரம்பிக்கும். சிறியவிடயத்திலிருந்தே உரிய வெற்றியடைய முயற்சியுங்கள்""

இன்றைய படங்கள் இரண்டு

ஏடுதொடங்கல் மருமகளுக்கு எனது மாமாவுடன் நானும்








Saturday, September 24, 2011

சிதறும் சில்லறைகள் - 18


நேற்றைய நாள்
2003 ஆம் ஆண்டு ஆரம்பித்து 2008 ஆம் ஆண்டு நிலத்துக்கடியில் கட்டிமுடிக்கப்பட்ட நியுத்திரன் அலைவுகளுக்கான ஒபேரா (OPERA) பரிசோதனையில் தகவல் சேகரிப்பு நடைபெற்று பரிசோதனையின் ஒரு முடிவாக " அணுவின் உபதுணிக்கைகளில் ஒன்றான நியுத்திரன் (Neutron) கற்றைகளின் வேகம் ஒளியின் வேகத்திலும் (3x10^8 m/s) அதிகமாய் இருப்பதாக" உறுதிசெய்த நாள்.
இங்கு செல்க மேலும் விபரங்களுக்கு
1
2

பாடலும் காட்சியும்
இது நண்பரொருவர் முகப்புத்தகத்தில் பகிர்ந்ததுதான். ஏனோ இத்தனைதூரம் என்னைக் கொண்டுசெல்லுது என்று தெரியல. அற்புதமாய் அத்தனையுமாய் சிறப்பாக இருக்குது. பாருங்க.

வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்
வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்




ஏழாம் அறிவு.
அண்மையில் வெளிவந்த பாடலில் ஏழாம் அறிவுப்பாடலும் மொக்கையாய் ஹரிஸின் அதே சொதப்பலாக அமைந்தாலும். இந்தப்பாடல் "இன்னும் என்ன தோழா என்று பால்ராம் ஆரம்பிக்கும்

யாருமில்லை தடைபோட உன்னைமெல்ல எடைபோட
நம்பிக்கையில் நடைபோட சம்மதமே..
என்ன இல்லை உன்னோடு ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே.
வந்தால் அலையாய் வருவோம்
வீழ்ந்தால் விதையாய் விழுவோம்..
மீண்டும் மீண்டும் எழுவோம்
....

பனிமூட்டம் வந்து படுத்தென்ன சுடும் பகலவன் மறையுமா...
அந்த
பகை மூட்டம் படியாமல் எங்கள் இருவிழி உறங்குமா.

தெரிந்த பழகிய வரிகளாய் அமைந்தாலும் இதயத்தில் இணைந்திருக்கும் இசையாய் வரிகள் துவம்சம் செய்யுது.
அப்படியே கேட்டுப்பாருங்கள்.



கவிதை

எந்த அவசரப்பொழுதுகளிலும்
நீ மறக்கலாம்
ஏன் யார் என்ற நினைவே
இல்லாமல்போகலாம்.
ஆனாலும் என் "முதல்" என்ற ஒன்றில்
நீ மட்டுமே இருப்பதால்
நீ என்னுள் நிரந்தரமாய்
உயிர்ப்பித்திருப்பாய்.

ஸ்டேடஸ்
தவறிய என்னுடைய ஸ்டேடஸ்கள் சில .......

"எந்தமனக்குழப்பமான பிரச்சனைகளையும் இன்பமாக பேசி அலசுவதால் குறைத்துவிடலாம். பேசாமல் இருப்பதால் என்னபயன்? உன்னையும் இழக்க நான் தயாரில்லை. விதண்டாவாதங்களால் ஏற்படும் விரிசல்களை விட புன்னகைக்கு ஆயிரமாயிரம் மடங்கு வலிமை அதிகம்."

"யார் யாரோ எல்லாம் நன்றி சொல்லிக்கொண்டு
நானும் யாருக்கோவெல்லாம் நன்றி சொல்லிக்கொண்டு..
இப்படியே நீளுகிறது அன்பென்னும் அட்சயம்"

"உன் பேனா முனையிலே
நீ எழுதப்படுவாய்
உன் எழுத்துக்களால் உன்
பெற்றோர் ஆசிரியர்களினது
பெயர்கள் எழுதப்படும்.
வாழ்த்துக்கள் ஆசிர்வாதங்களுடன்... Wish u all the best for AL Students"

"ஆயிரம் மாற்றங்களை செய்திடணும் என்று எண்ணிக்கொண்டிருப்பதை விட ஒரு மாற்றத்தையாவது ஆரம்பித்துவிடுவதும் வெற்றி தான்
##எண்ணியகருமமாற்றல்##"

"நீ (நீங்கள்) நேசிக்க மறந்தாலும் உன்னை (உங்களை) நினைக்கத் தவறுவதேயில்லை.
நினைவுகளும் கனவுகளும் சேர்ந்த கலவையில் நான் அருட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறேன்.
ஓ... நான் சுயாதீனமானவன்.."

"உங்கள் இறந்தகாலம் இழந்தகாலம் என்பது உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் அல்ல! அல்ல!! ##அண்மையில் வானொலியொன்றில் கேட்டது## பிடித்தது"

"பேர் கேட்கும் இடங்களிலே கால் வைத்து சிரிக்கும் தலைகள் வளர்ந்துகொண்டே இருக்கும்... அந்தப் "பெயரில்" ஒட்டிக்கொண்டு... ##பிறநம்பிகள் = தன்னம்பிக்கையிலிகள்##"

"அத்தனை உயரங்களையும் தாண்டுவேன், நீ என் ஊன்றுகோலை வெட்டிவிடலாம். உணர்வுகளை களவாட முடியாது
அவை எனக்குச் சொந்தமானவை."

"சில கனவுகள் காணவேண்டுமென்றே பல கனவுகள் காணாமல் போகின்றன. மொத்தத்தில் எல்லாமே கனவு வாழ்க்கையடா இது"
"மற்றவர்களினதும் எனதுமான கடினவேலைகளால் அன்பான பல உறவுகளின் அழைப்பைக்கூட மதிப்பளித்து கதைத்துக்கொள்ள முடியாத நிலமை கொஞ்சம் கஸ்டமானதுதான். ##தவறிய தொலைபேசி அழைப்புக்கள்##

ஒரு படம்

மாமா என்று சொன்னவள் "மாம்" என்று அழைக்கிறாளே.. ஒருவேளை இவளை நான் 'மருகள்' என அழைப்பதாலா?
ஆனாலும் இவளின் ஆள்காட்டி விரலில் இருப்பது நான்.
அந்த புன்சிரிப்பில் விழுந்துவிடுவது எல்லோரும்.
நீ தேவதை தான்.


Friday, August 26, 2011

தழும்புகள்

மூச்சுக்காற்றில்
முதுகு வலித்த நாட்களை
இப்பொழுது மூச்சிரைக்கிறேன்

அழுகிய பழத்தில் நுரைக்கின்ற
புழுவாவேன் என்று
அப்பா அடித்த தழும்புகளை
தடவிப்பார்க்கிறேன்
அங்கு ஆழமாய்
எழுதப்பட்ட 'நீ'

முட்டித்தட்டி நாக்கு புரண்டு
இல்லை இல்லை
ஓம் ஓம் என்று
இல்லை என்பதற்கு ஓமும்
ஓம் என்பதற்கு இல்லையும்
மனக்கண்களின்
மெய்கண்ணைக் கண்டது
சிரிப்புச் சிரிப்பாய் இப்பொழுது

எந்த அவசரப்பொழுதுகளிலும்
நீ மறக்கலாம்
ஏன் யார் என்ற நினைவே
இல்லாமல் போகலாம்
ஆனாலும்
என் "முதல்" என்ற ஒன்றில்
நீ மட்டுமே இருப்பதால்
என்னுள்
நிரந்தரமாய் உயிர்ப்பித்திருப்பாய்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு