Pages

Sunday, March 7, 2010

செல்லப்பா.... எம் இதய அஞ்சலி

எங்கள் அப்புச்சி இயற்கை எய்தியதையொட்டி அவருக்காக படைத்த இதய அஞ்சலி.....

செல்லப்பா எங்கள்
செல்வப்பா......
எங்கப்பா சென்றாயோ – எங்கள்
செல்லப்பா...

மாரிமுத்தம்மா அழுகிறாள்
மார்தட்டி உறவுகள்
கதறுகிறார்கள்
சுற்றி ஒருதரம் பாராயோ!

பெற்றெடுத்த பிள்ளைகள்
'அப்பா' என்றழுவது
கேட்கலியோ....
பேரப்பிள்ளைகள் 'தாத்தா'
என்றழுவது கேட்கலியோ....

வியர்வைகள் சுமந்து
பிள்ளைகள் வளர்த்தாய் - அந்த
செல்வக் கொழுந்துகள்
சுற்றி அழுவதைப் பாராயோ...

'மகன்'..'மக'.. என்று
சொல்வாயே... - இனி
அந்த செல்லக்குரலை
எங்கு கேட்போம்.

ஆழம் நீ போனதால்
ஆறாது உள்ளம்
உன்பிரிவைத் தாங்காது
துடிக்குது நெஞ்சம்......

'ம்ம்ம்; மக..' என்ற
சத்தம் எமக்கு போதும்
நீ இல்லை என்றதும்
தாங்கொணாது
தவிக்குது நெஞ்சம்
கண்ணீர் சொரியுது கண்கள்..
கண்ணீர் அஞ்சலி – எம்
இதய அஞ்சலி....

6 comments:

சாம்பசிவம் கஜன் said...

எனது ஆழ்ந்த அனுதாபங்கள் ரமேஸ்,அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

vasu balaji said...

உன் அப்புச்சியின் ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனையும். உனக்கு அன்பார்ந்த அநுதாபங்கள். வார்த்தை பயனில்லைதான்.:(

Kandumany Veluppillai Rudra said...

மறைவுக்கு எனது விழி நீர் அஞ்சலிகள்

Kala said...

ஆத்மா சாந்தியடைய... பிராத்திப்போம்.
நான் இவ்வரிகளால்......



மரணம் ஒரு
மந்திரக் கம்பளம்


அதனைப் போர்த்திக் கொண்டு
ஒவ்வொருவராக...
மறைந்து விடுகிறோம்







உங்கள் அப்புச்சிக்கும்
சமர்பிக்கின்றேன் என் கண்ணீர்
அஞ்சலியாய்....}

Bavan said...

ஆழ்ந்த அனுதாபங்கள் றமேஸ் அண்ணா, அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்...

Ramesh said...

நன்றி
* கஜன்
* பாலாஜி அய்யா
* உருத்திரா அண்ணே
* கலா
* பவன்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு