ஒவ்வொரு முறையும்
ஒவ்வொன்றாய் ஆனாய்
பூக்களாய்
சிரிப்புக்கள்
இலைகளாய்
சிலிர்ப்புக்கள்
தளைகளாய்
உயர்வுகள்
பழங்களாய்
வெற்றிகள்
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொன்றாய் உதிர்ந்தாய்
உதிர்ந்த பூக்களாய்
எண்ணங்கள்
இலையுதிர்வுகளாய்
தோல்விகள்
வாடிய தளைகளாய்
மனவெழுச்சிகள்
ஒவ்வொருமுறையும்
ஒவ்வொன்றாய்
உதித்துக்கொண்டன
உயிர்த்தெழுந்து கொண்டேன்
கிழிக்கப்பட்டன
உயிர்ப்பிழிந்து கொண்டேன்
நீ போகிறாய்
நான்
காத்திருக்கிறேன்
இருட்டிலும்
விண்மீன்களுகாய்
இதுவரை
ஆனதுக்காக
நன்றி சொல்லுக்கொண்டு
நீ
உதித்து
உதிர்ந்தாய்
நான்
உயிர்ப்பித்திருக்கிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
ஃஃஃஃநீ போகிறாய்
நான்
காத்திருக்கிறேன்ஃஃஃ
தொட்டுச் சென்று விட்டது...
போனாலும் மனதில் பதித்துச் செல்வது ஒரு பெரும் நினைவல்லவோ...
அருமையான பிரியாவிடை....வரவேற்புக் கவிதை....
அருமைமயான வரிகள்... தங்கள் பதிவிலும் எனது மனதிலும்...
ம்ம்ம்...
god bye 2010 and Welcome 2011
எல்லாரும் இந்த ஆண்டு முடியுது எண்டு கவலைப்பட்டா அடுத்த ஆண்டை யார் வரவேற்கிறது. வரிகள் மனதை தொட்டுச் செல்கிறது.
வார்த்தைகள் வரவில்லை றமேஸ்.அத்தனை அற்புதம்.நான் ஏதும் எழுதுவதாயில்லை.வருவதும் போவதும் இயல்பாகிவிட்டது.எங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் எதிர்பார்ப்புக்களும் அந்த இடத்திலேயேதான் !
அருமை தல!!
தங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
அழியா வடுக்கள்
@@ம.தி.சுதா
@@“நிலவின்” ஜனகன்
@@ஜனா அண்ண
@@வரோ
@@ஹேமா
@@மைந்தன் சிவா
@@சங்கவி - சங்கமகேஸ்
அனைவருக்கும் நன்றிகளும்
புத்தாண்டு வாழ்த்துக்களும்
Post a Comment