Pages

Sunday, December 4, 2011

வெட்டப்படுகிறது.


நானாய் உருவிவந்து
உரமிட்டதில்லை
நீயாய் கேட்டு
உயரமிட
மறுத்ததுமில்லை

ஏதோ ஒரு பறவையின்
எச்சில் துப்பி
தப்பித்தவறி
வந்து விழுந்து
விட்ட அந்த பழமும்
விதையும்

இன்று
நீ
விருட்சம்

நீ வெறும் சப்பையாக
இருந்திருந்தால்
இவ்வளவுகாலம்
இருந்திக்கமாட்டாய்
எப்பவோ
குப்பையாகியிருப்பாய்

உன்னை வெட்டியே நாம்
வாழணும் என்று உணரவேண்டி

அங்கே காகங்கூட கூடு கட்டிவாழுது
அதற்கும் உலைவைச்சி
வீட்டின் கூரையைப் பிய்துவிடுமென்று
பாவம்
வேம்பு வெட்டப்படுகிறது


இனி எங்கே அந்தப்பட்டை
எங்கே அந்த கொட்டைகள்
மருந்துக்கு அரைத்தெடுக்க

அந்த துளிர்கொண்ட பசுமை எங்கே
இலை உரசி வருடும் காற்று எங்கே

கூடுகட்டிய காகங்கள் எங்கே
சல்லாரி இசை இசைக்கும்
இலைகள் எங்கே


1 comment:

ஹேமா said...

மனம் பதறும் கவிதை !

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு