Pages

Thursday, December 8, 2011

பின் இருக்கையில் நான்


அழகிய புகைப்படங்கள்
நழுவி நழுவி
அழகிய ஓவியங்கள்
விலகி விலகி

பேருந்தில் நீ
யன்னல் ஓரம்
முன்னிருக்கையில்

எத்தனை அவஸ்தையிலும்
சிறதறடிக்கும்
அழகிய கூந்தல்

சிக்கிய தலைமுடி
கண்ணுக்குள்

அத்தனை வேகங்களை
விசிறியடிக்கும்
நான்
துள்ளி எழுந்து
இருந்துகொண்டு



அவளா நீ
அவளாய்த்தான் இருக்கணும்
நீ

உரசி உரசிக்கொள்ளும்
உதிரம் கொதித்துக்கொள்ளும்

ஒரு திரும்பல் வேண்டும்
தவநிலையின்
ஒற்றைக்காலில்
நான்
பின்னிருக்கையில்






2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
இதையும் படிக்கலாமே :
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

ஹேமா said...

நல்ல அவஸ்தைதான் றமேஸ் !

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு