Pages

Sunday, January 1, 2012

நான் இன்னமும் வாழ்கிறேன்


சில்லென்ற காற்றும்
என்வீட்டுச் சுவாசமும்

கடற்கரையினில்
நனைக்கும் என் கால்களும்

வயல்வெளியில்
படமெடுக்க கமெராவும்

காதுகளை துடை(ளை)த்துவிடும்
பாடல்களும்

குழந்தைகளின் அழுகுரலும்
ஏங்கி முனையும்
என் கைகளும்

சில புத்தகங்களும்
பத்திரிகைகளும்

தவறிவிட்டுப்போன
உன் நினைவுகளும்
நீ
தவறிவிட்ட
காதல் நினைவுகளும்

இன்னும்

முகநூலின் என்னிலை
சொல்லும்
நிலைச்செய்திகளும்
சில நண்பர்களும்
அவ்வப்போது
அரட்டைகளும்

விரல்நுனியால்
இதயம் கிழிய
உலகம் காட்டும்
கண்ணாடியாய்
ஒரு
வலைத்தளமும்
போதும்
இவ்வருசமும் வாழ்ந்துடுவேன்.

புதுவருடவாழ்த்துக்களுடன்.........


7 comments:

Kiruthigan said...

பதிவுலகத்தில் சந்தித்த இனிய பதிவர்கள் நண்பர்கள் இனிய உறவுகளாகியமையும் பின்நாளில் எம்மோடு கைகோர்த்து பல கனவுகளுக்கு செயல் கொடுக்கவும் பல்வேறு வெற்றிகளையும் பெற்று தந்த நினைவுகளோடு மீண்டும் இந்த வருடமும் பதிவுகள் பல இடுவதற்கு தி்டமிட்டுள்ளேன்.
இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்

http://tamilpp.blogspot.com

Yaathoramani.blogspot.com said...

புது வருடம் நிச்சயம் நல் வழிகாட்டும்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய புத்தாண்டு
நலவாழ்த்துக்கள்
த.ம 2

சசிகலா said...

மிகவும் அருமை

திண்டுக்கல் தனபாலன் said...

மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்! நன்றி!

KANA VARO said...

இது கவிதையாக எனக்கு படவில்லை., ஒவ்வொரு வரியிலும் நானும் இருப்பதாக உணர்கிறேன். வாழ்த்துக்கள் நண்பரே!

அன்புடன் நான் said...

கவிதையின் கோணத்தில் உங்க வெளிப்பாடு.... மிக சிறப்பு. வாழ்த்துக்கள்.

Hari said...

valthukal.niz

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு