Pages

Tuesday, September 8, 2009

போய் வா

சில நினைவுகள்
நெஞ்சை அழுத்திய போது
கண்ணீரில் நீந்துவேன் - உன்னுடன்
போன் பண்ணி கதைக்கும் போது
உள்ளத்தின் கனம் குறைந்து
இதயம் இலேசாகும்
சந்தோசப்படுவேன் .......

உன்னைப் பிரியப்போகிறேன் என்ற
எண்ணத்தைக்கண்டு
இதையத்தின் வலி உணர்ந்து
கவிதை எழுதும் பேனாவை விட
கண்ணீர் முந்திக்கொள்கிறது
கனவுகளை நச்சரித்துக்கொண்டு ............
நினைவுகளை சுமந்துகொண்டு

இனி
நான் கஷ்டப்படும் போது
இங்கு நீ இல்ல
ஆறுதல் சொல்ல எனக்கு.........

எனது நினைவுகளுக்கு
நீந்தத்தெரியுமானால்
எப்பொழுதும்
உன் வாசல் வரும்
அன்புள்ள நட்புக்களை சேர்த்துக்கொண்டு

சந்தோசம் வரும் போது
உனக்குள்ளே புன்னகைத்துக்கொள்

சோகம் வரும் போது மட்டும்
போன் பண்ணிவிடு எனக்கு
ஆறுதல் மொழிகள்
ஆயிரம் ஆயிரம் என்னிடம்
இப்பொழுது
எல்லாம் உன்னிடம்
கற்றுக்கொண்டது தான்

உன் திருமுகம் என் கண்களில்
அழகிய புகைப்படமாய்
உன் புன்னகை என் நெஞ்சினில்
ஓர் இணையத்தளமாய்....

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு