Pages

Monday, December 14, 2009

இன்பத்தூறல்.........



விழிகள் உயர்த்தி
மனதில் பொழியும்
உதடுகளின்
இன்பத்தூறல்

விழிகளால் மொழிய முடியாத
கவிதைக்கு வழியான
அழகு வரிகள்

மனம் விதைத்த
கவிதையில் தித்திக்கும்
வழுக்கிய நினைவு

வேதனையை விலக்கி
அவள்
நினைவுகளைக் கூட்டும்
இன்பக்கதவின்
திறவுகோல்


மலர்கொண்ட
பெண்மையின்
உள்ளத்தின் வழு
மனம் கொண்ட
உண்மையின்
புன்னகை

இதயத்தில்
மலரும் நினைவுகளை
வெளிச்சம் போடும்
தூரிகை உதடுகளால்
தீட்டிய ஓவியம்

8 comments:

balavasakan said...

கவுதை அருமை ...

மலர்கொண்ட
பெண்மையின்
உள்ளத்தின் வழு
மனம் கொண்ட
உண்மையின்
புன்னகை

ரசித்தேன்.. நண்பா..!

Ramesh said...

நன்றி பாலா...

Jeya said...

அருமை ...
றமேஸ்..!

Ramesh said...

நன்றி ஜெயகெளரி

Paleo God said...

வந்தேன் ரசித்தேன் ஓட்டும் போட்டுவிட்டேன்... வாழ்த்துக்கள் றமேஸ்

Ramesh said...

வருகை
ரசிப்பு
பின்னூட்டல்
வாழ்த்துக்கள்
அனைத்துக்கும்
நன்றி பாலா....

geevanathy said...

உங்கள் வலைப்பூ அழகாக இருக்கிறது
வாழ்த்துக்கள் நண்பரே

Ramesh said...

///உங்கள் வலைப்பூ அழகாக இருக்கிறது
வாழ்த்துக்கள் நண்பரே///

நன்றி அண்ணா..

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு