Pages

Thursday, December 27, 2012

கடைசிப்பக்கம்


உமிழ்ந்து துடைத்து
உரசிச்சென்ற கண்கள்,
உதடுகள் சுருக்கி
உள்ளத்தை நெருக்கிவிடும்
புன்னகை,
கடந்துசெல்லும்போது
கரையும் நெஞ்சம்...

இரட்டைக்கதிரையில்
தோள்தடவி
'நாளையும் வரும்'
என்கிற
விடைபெறுதலில்
இருட்டை நச்சரித்து....

*'மண்டி'
கசக்கும்போது
கோப்பையில்
உதடுகள் மொய்க்கும்
தேனீர்...

இன்றைய பொழுது
கண்விழித்தபோது
நேற்றைய நாள்
கிழிக்கபட நாட்காட்டியில்
விரல்கள்...

ஒவ்வொரு கடைசிப்பக்கமும்
எழுதித்தீர்த்தபின்
முன்னெழுத்துக்களில் ஒரு
முரட்டுப்பார்வை...

வாசிக்கப்படும் போது....



*தேனீர்க்கோப்பையில் வடிக்கப்படாத எஞ்சிய தேயிலையின் அடையல்பகுதிகள்



2 comments:

Jana said...

*manndi - ya! Varuda kadaisiyil varum iruthi 5 naadkal kooda ithupolathaan pola! (uvamai kachchithamaaka porunthuthu :) )

Ramesh said...

ஜனா அண்ண இண்டைக்கு காலையில தேனீர் அருந்தும்போதுதான் நடந்தது.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு