Pages

Tuesday, October 20, 2009

என் இதய அஞ்சலி

இன்று எனது நண்பனின் அப்பா இறந்த செய்தி கேட்டு எழுதப்பட்ட அஞ்சலிக்கவிதை அவன் தந்தையின் ஆத்மா சாந்திக்காக

உன் இரத்த துளிகளின்
வேர்வைகளில்
பிறந்து
வளர்ந்தோம் - இனி
"அப்பா" என்றழைக்க
யார் இருக்கா??
சொல்லாயோ....
எம்மை விட்டு
எங்கு சென்றாயோ ???

மங்கல நிறமாம் மஞ்சள்
ஆனால்
காலனாய் வந்தது
உன் உடலில்
காய்ச்சலாய்...
சிதைந்தது உன் பொலிவு
இன்று
உடைந்தது எம் எதிர்வு

அழகான செல்வங்கள்
ரெண்டும்
அழுவதைப் பாராயோ
அகத்தினில் உனைத்தேக்கி
அம்மா - கண்ணீர்
பொழிவதை பாராயோ.....

வாழ்க்கைச் சக்கரத்தில்
இது நிகழ்வதுண்டு
ஆனாலும்
ஆழமாய் உள்ள உன்னை
இழந்தது பொறுக்கல்ல
வலிக்குது நெஞ்சம்
கண்ணீர் கனக்குது

ஆண்டவனுக்கே
அழுகை வருவதென்றால்
உன்
மரணத்துக்கு மட்டுமே
கண்ணீர் சிந்துவான்

கண்ணீர் அஞ்சலி
எம் இதய
அஞ்சலி

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு