புல்லாங்குழல், வயலின்
இவற்றை இவனிடம்
கொடுக்கத்தேவையில்லை
எஸ்.எம்.எஸ், தொலைபேசி போதும்
மனம் விரும்பும்
கானம் வரும்
இவன் ஒரு
அறிவிப்பாளன்
தமிழ்
வலைப்பதிவாளன்
தமிழ் சொல்லி
தமிழ் வளர்ப்பவன்
இவன் அடிக்கடி
அங்கிருந்தால்தான்
நமக்கு நல்ல
பாட்டுவரும்
காது குளிரும்
தொண்டு செய்பவன்
அனானிகள் கண்டு
தமிழ் முண்டி வருபவன்
ஒல்லிக்குச்சி உடம்புக்காரன்
சொல்லியடிக்கும் தமிழ்
'கில்லி'க்காரன்
ஒலிவாங்கி முன் இருப்பதால்
விவாதமேடைகள் இவனுக்கு
விபரீதமல்ல - நல்ல
வாதியும் இவனே
நாதியற்றவர்களுக்கு
நீதியும் இவனே....
நீங்கள்
கத்திகொண்டு கீறலாம்
இவன்
புத்தி மாறப்போதில்லை
வீரம் விளைந்த மண்ணில்
ஈரம் கொண்டு முளைத்தவன்
காரம் நிறைந்தவன்
ஆதலால்
இவன்
அவனேயாக
ஆனதால்
அனானிகளே!
சற்று அமரலாம்
பட்டுச்சேலைகளே...
வேட்டிகளே...
முட்களில் விழுந்தால்
உங்கள்
முகத்திரை கிழிவதுதான்
நிச்சயம்
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
பட்டுச்சேலைகளே...
வேட்டிகளே...
முட்களில் விழுந்தால்
உங்கள்
முகத்திரை கிழிவதுதான்
நிச்சயம் ............சரியா சொன்னீங்க.
நன்றி சித்ரா
உங்கள் பின்னூட்டங்கள் எல்லோரையும் போலவே என்னையும் ஊக்கப்படுத்துகிறது
உங்களின் கவிதைகள் மனதோடு நெருங்கி பேசுகிறது...
வாழ்த்துக்கள்..
கமலேஸ்
மிக்க நன்றி உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்
உங்கள் அன்புக்கு நன்றிகள். உங்கள் கவிதைகள் எல்லாமே அருமை தொடருங்கள். வாழ்த்துக்கள்.
ம்ம்ம்........
வருகை, வாழ்த்துக்கள்
நன்றி சொல்லத்தோன்றுது
பட்டுச்சேலைகளே...
வேட்டிகளே...
முட்களில் விழுந்தால்
உங்கள்
முகத்திரை கிழிவதுதான்
நிச்சயம் ............சரியா சொன்னீங்க//
அதேதான்.. சரி விடுங்க.. நார் நாரா கிழிஞ்சாலும் நாங்க பட்டுதான்னு பிட்டு போடுவாங்க..::))
//நார் நாரா கிழிஞ்சாலும் நாங்க பட்டுதான்னு பிட்டு போடுவாங்க..::))//
ஹாஹா...
நன்றி வருகைக்கும் பின்னூட்டலுக்கும்
ஒலிவாங்கி முன் இருப்பதால்
விவாதமேடைகள் இவனுக்கு
விபரீதமல்ல - நல்ல
வாதியும் இவனே
நாதியற்றவர்களுக்கு
நீதியும் இவனே....
நல்ல வரிகள் தலைவரே
ஸ்ரீதர்..நன்றி உங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்
அதெனன்னங்க தலைவரே....??
Post a Comment