கடைசிவரை
இரத்தச்சாயம் பூசிய
விரல்கள்
தமிழ்
வாழ்வுக்காகவா
வீழ்ச்சிக்காகவா???
ஒவ்வொரு தடவையும்
வீழ்ந்துதான்
சரித்திரம் எழுதப்படுமா???
தேசப்பற்று
தேசத்தின் பற்றை
வளர்க்குமா???
தேசத்தை
தீப்பற்ற வைக்குமா???
குரல் கொடுக்கும்
குரல்கள்
குமுறுகிறதா???
கூத்தடிக்கிறதா???
இன்றைய நிலையில்
நாம்
மதில்மேல் பூனை
மதில் யாருடையது
என்பதுதான் கேள்வி
இனி
விருத்தியாகி
தமிழ்வளர்ப்போம்
தளைகட்டட்டும்
தமிழ்ப் பிள்ளைகளின்
கல்வி
பொருளாதார
அபிவிருத்தி
போதும்
இரத்தக்கறைகள்
வடிந்த உடலும்
அதற்காக உருக
உள்ளத்தில்
இரத்தம்
இல்லை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment