Pages

Saturday, March 20, 2010

வருகிறாய் தொலைகிறேன்

காற்றுப்
பெருவழியில்
தூசு
அந்தக்
கண்விழியில்
காதல்
நான்
மூடவா
திறக்கவா??

நினைவுகள்
மணித்தியாலங்களில்
நிஜங்கள்
வினாடிகளில்
நீ மட்டும்
என்னோடு

என்
பயணங்களில்
முகமாலை
பனைமரமாய்
இப்போது
காதல்....

Friday, March 19, 2010

காதல் வேலைக்காகாது

வட்டமிட்டு
உன்னை
வட்ட மண்டபத்தில்
வட்டமிட்டு
உக்காந்து அந்த
சங்கீதப் பயணத்தில்..
என்
காதல்
மனசுக்குள்
ஸ்வரங்களில்.....

ஏழிஸ்வரம் தெரிந்த
உனக்கு என்
காதல் சுரம்
புரியவில்லை

நீ விடுதி தாண்டி
வருகையில்
நான்
வி்ண்ணைத்தாண்டுகிறேன்

நீ தகதிமி தாளமிட
மனசுக்குள்
ஜதிபாடும்
'காதல்'

நான்
கறுப்பன் தான்
காதல்
கிறுக்கனும் கூட...
காதல் நிறம்பார்க்கும்
என்று தெரிந்திருந்தால்
நான் கருப்பையில்
இருக்கும்போது
குங்குமப்பூ கொடுத்திருப்பேன்
என் அம்மாவுக்கு

என் உதடோரம்
சூடேற்றும்
நுரையீரலை புண்படுத்தும்
சிகரெட்டை நிறுத்திவிட்டேன்
என் "காதல்
வேலைக்காவாது" என்று
நீ
சொன்ன கணத்திலிருந்து....

காதல்
தூர்ந்து போயிற்று


(இது ஒரு சங்கீத நண்பனும் அவன் நடனக்காதலியும்.... யாழ் பயணத்தில் கிடைத்த தகவல்)

Thursday, March 11, 2010

இங்கு நீ இல்லை

காதல்
கவிதை

ஆல்
கு
இன்
அது
'நீ'தான்

கவிதையும்
நானும் ஒன்றென்று
சொல்லியதும்
நீ தான்

உயிர் சேராத
மெய் எழுத்தாய்
இப்பொழுது
கவிதை

நீ
விலகியதாலே.......
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு