Pages

Monday, October 5, 2009

சக்தியின் சொதப்பல் இசை நிகழ்ச்சி

மீன் பாடும் தேனாட்டில் நம்ம மட்டக்களப்பில் இப்படி ஒரு இசை நிகழ்ச்சியா ? நந்தமிழ் மணம் பேசும் தமிழ் வளம் பெறு, மீன்களும் பாடும் தேனகத்தில் ஒரு குப்பை நிகழ்ச்சி. பல ஆண்டுகளின் பின் நடைபெறும் ஒரு இசை நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த சக்தி டிவி மற்றும் சக்தி FM பாராட்டத்தக்கது (ஆனா நம்மட சகோதரர்கள் கைதிகள் போல முகாம்களினுள் இருக்க இது ஒன்னு தேவையா என்பது கவலைகுரியதுங்க )

பெரிய அமளி துமளியாக விளம்பரம் போட்டு நிகழ்ச்சிய ஒழுங்கு செய்தவயலாம். வெபர் மைதானத்தில் நிக்க முடியா சனம். அம்பாறை மாவட்டத்திலிருந்தும் முஸ்லிம் சிங்கள சகோதரர்களும் வந்தாங்க, நம்ம காக்க காக்க காவல்துறை ஆங்கில்களுக்கே கட்டுப்படுத்த முடியாத சனம்கோ. அப்படி அலை அலையை வந்த சனம் எல்லாம் வந்த உடனேயே திரும்பி போனதுதான் இசை நிகழ்ச்சியின் சுவாரசியம்.

sound system பாடுன அவங்களுக்கே கேட்டிச்சோ தெரியலுங்கோ எனக்கு என்னா பெரிசா வெளியில வரலீங்கோ. light எல்லாம் போட்டாங்கோ ஆனா stageல நின்ற அவங்கள பாக்க தெரியலீங்க. நம்ம அண்ணா ஒருவர் சொன்னாரு "பூர் (poor) லைட் and சவுண்ட் செட்டிங்" எண்டு .
அதவிட பாட்டு படிச்சாங்க ஆனா மியுசிசியன் எல்லாம் சும்மா தாங்க இருந்தாங்க என்னனா கரோக்கியில பாடுரான்கலாம். சுனிதா சாரதி ஹரிசரண் நல்லா பாடுனாங்க.அதுகுள்ள ஏதோ ஒரு சீவியாம் (அவரு சூப்பர் ஸ்டார் ஆமே ) தமிழே நல்லா கதைக்க வராது அவரெல்லாம் பாடுறாரு. அங்க நிறைய தமிழ் சனம் நிக்கேக்க சிங்களத்தில பேசிராறு ஒரு காக்க காக்க அங்கிள் சவுண்ட் பொக்ஸ் கமெரா பக்கம் ஆடவேனாமாம் சுட்டக் போங்கோ... இதெல்லாம் கேட்க வேண்டியிருக்கு.. ம்ம்ம்ம்ம்ம்

மட்டக்களப்புல இசை நிகழ்ச்சி நடத்த வேணும் எண்டா நல்ல மெலடி சோங் பழைய மேல்லிசைகளை நிகழ்த்த வேணும். அத விடுத்து சிங்கள கலாச்சாரத்த புகுத்த நினைப்பது ரொம்ப வருந்த தக்க விடயம் , இது தலைநகர் மலையகம் போன்ற சிங்கள கலாசாரத்துக்குள் கலந்துள்ள மக்களுக்கு பொருந்தும். தேனகத்தில் கஷ்டம். நம்மட பொடியனுகள் குடிச்சு கூத்தாட போறதுக்காக இசை நிகழ்ச்சி நடத்தினா பிழைச்சு போயிடும், ரசிக்கத் தக்கதா இசை இருக்கணும்.

ஏற்கனவே சக்தி விழ்ந்து கிடக்கு இனியாவது யோசிக்கட்டும்.... இது ஒரு பரீட்சாத்த நிகழ்ச்சியாகட்டும் . ... நாங்க வெற்றியை தான் தேடிரோம்க .... தமிழை தமிழாய் ...

இதுக்கு Loshanயும் சந்த்ருவையும் shanthruகூப்பிடிறேனுங்க

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு