வார்த்தை கருவறையிலிருந்து
எழும்
வற்றாத ஊற்று ...
உடல் தனில் உயிர்
கவிதை
கடல்தனை
ஒரு துளியாக்கும்
துளி ஒன்றை
கடலாக்கும்
இருளை நீக்கும் ஒளி
கவிதை
ஒளியிழந்த ஆகாயத்தில்
எழும் நிலவு
நிலவிழந்த இரவில்
வெளிச்சமூட்டும்
விண்மீன்கள் நல்ல
கவிதைகள்
விதைக்கப்பட்ட நாற்று
மனதில்
வார்த்தைகளால்
கிளைவிட்ட விருட்சம்
விருட்சத்தையும் சிதைக்கும்
கவிதை
சிதைக்கப்பட்ட இதயங்களை
இணைக்கும்
கவிதை வரிகளின்
உதயம் கண்டு
மடல் விரியும் காதல்
கருக்கொண்ட மேகம்
கவிதை
வரிகளால் உருக்குலைந்துவிடும்
தென்றல் தரும் சுகமென்ன
அவளுக்காக
என் கவிதை போதும்
எனக்கு .........
சுற்றும் பூமி
கடலலைகள்
கவிதைகள்
ஓய்வதில்லை ....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment