Pages

Saturday, February 13, 2010

அவன் + அவள் + காதல்

அவன்:

காதல்
அவள் மனதில்
கர்ப்பம் தரிக்க
மறுத்துவிட்டது

இல்லை

என் காதல்
கருக்கலைப்பு
அவள் காதல்
கருப்பையில்

அவள்:

கண்ணால்
கவிதையால்
கனவாய்
காதல் தந்த காதலா
கற்பனையாய் மட்டும்
ஆகிவிட்டாய்

காதல்
அனாதையானது
கண்ணீர் மட்டும்
என்னைக்
கட்டிக்கொண்டது

காதல்:

என்னைக்
கட்டிக்கொள்ளுங்கள்
கடைசிவரை
காப்பாற்றிக்கொள்ளுங்கள்
என்னையல்ல
உங்கள்
மகுடம் கலையாமல்
பார்த்துக்கொள்ளுங்கள்

காகிதத்திலும்
கல்லறையிலும் மட்டும்
நான்
இன்னும்....

18 comments:

Bavan said...

///காகிதத்திலும்
கல்லறையிலும் மட்டும்
நான்
இன்னும்...///

தல கலக்கல் காதலர்களே புரிஞ்சுக்கோங்க..:)

காதலர் தின வாழ்த்துக்கள்..;)

Ramesh said...

Bavan said...
///
தல
கலக்கல் காதலர்களே புரிஞ்சுக்கோங்க..:)
///
உங்களுக்குப்புரிஞ்கா சரிதான் :)

///
காதலர் தின வாழ்த்துக்கள்..;)
////
உங்களுக்கும் உரித்தாகட்டும்

மதுரை சரவணன் said...

kavithai kalakkal. vaalththukkal

Ramesh said...

Madurai Saravanan said...
///
kavithai kalakkal. vaalththukkal
///
நன்றி சரவணா... வாழ்த்துக்கள் கவிதைக்கா? காதலர்தினத்துக்கா?? :)

vasu balaji said...

3,2,1. very nice rames

Ramesh said...

வானம்பாடிகள் said...
//3,2,1. very nice rames//
காதலின் அருமை உங்களுக்கு விளங்கும் தானே இதுக்குத்தான காதலித்து கல்யாணம் பண்ணணும் ம்ம்ம்

அண்ணாமலையான் said...

என்னப்பா இது? உன் ஊர் பேரே தேற்றாத்தீவுன்னு இருக்கு? சரி எது வந்தாலும் பாத்துக்கலாம், துனிஞ்சு சொல்லு.... (முன்னாடியே சொன்னீன்னா நான் சேஃப்டியாயிடுவேன்)

Ramesh said...

அண்ணாமலையான் said...
////
என்னப்பா இது? உன் ஊர் பேரே தேற்றாத்தீவுன்னு இருக்கு? சரி எது வந்தாலும் பாத்துக்கலாம், துனிஞ்சு சொல்லு.... (முன்னாடியே சொன்னீன்னா நான் சேஃப்டியாயிடுவேன்)
////

அண்ணாமலையான் இது உங்களுக்காகவே எழுதினது... நம்ம ஆளுக்கு பரிசு எல்லாம் வாங்கிட்டோமில ஹிஹீஹீ

Chitra said...

அருமையா இருக்குங்க.

ஹேமா said...

றமேஸ்...என்ன இது !காதலர் தினமும் அதுவுமா சந்தோஷமா கலக்குங்க.கவிதை நல்லாயிருக்கு.
வாழ்த்துக்களும்கூட.

Ramesh said...

Chitra said...
//
அருமையா இருக்குங்க.
//
நன்றி சித்ரா

Ramesh said...

ஹேமா said...
///
றமேஸ்...என்ன இது !காதலர் தினமும் அதுவுமா சந்தோஷமா கலக்குங்க.கவிதை நல்லாயிருக்கு.
வாழ்த்துக்களும்கூட.
///
ம்ம்ம் கலக்கிட்டா போச்சு. நன்றிம்மா

தர்ஷன் said...

//என் காதல்
கருக்கலைப்பு
அவள்
கருப்பையில்//

காதலை கருப்பையில் மட்டும் பதிய நினைத்தால் கலைக்காமல் என்ன செய்வது

balavasakan said...

அருமை றமேஸ்..

Ramesh said...

தர்ஷன் said...
//என் காதல்
கருக்கலைப்பு
அவள்
கருப்பையில்//

///காதலை கருப்பையில் மட்டும் பதிய நினைத்தால் கலைக்காமல் என்ன செய்வது///
உண்மையில் நான் எழுத நினைத்தது இவ்வாறு பிறகு இப்படி எழுதிட்டேன்
....
என்
காதல் கருக்கலைப்பு
அவள்
காதல் கருப்பையில்
...
நன்றி தர்ஷன்

Ramesh said...

Balavasakan said...

///அருமை றமேஸ்..///
நன்றி பாலா

Kala said...

\\\காதல்
அனாதையானது\\\

ஓஓ!! அதுதான் கேட்க யாரும் இல்லையென்று
ஆளையாள் ஓடியோடி அணைக்கிறார்களா?
பாவம்! காதல் படும் பாடு பெரும் திண்டாட்டம்
எங்கள் திரேஸா அம்மையார் இருந்தாலாவது
அநாதையைத் தத்தெடுக்கச் சொல்லலாம்!!


அவன்,அவள்,இல்லாமல்.....
காதல் உண்டு ரமேஸ்
அதுவும் இக் காலத்தில்....நன்றி

Ramesh said...

Kala said...
///
ஓஓ!! அதுதான் கேட்க யாரும் இல்லையென்று ஆளையாள் ஓடியோடி அணைக்கிறார்களா?
பாவம்! காதல் படும் பாடு பெரும் திண்டாட்டம்
எங்கள் திரேஸா அம்மையார் இருந்தாலாவது
அநாதையைத் தத்தெடுக்கச் சொல்லலாம்!!
///
ம்ம்ம் பாவம் தான் வேண்டாம் அம்மையார் மிக கஸ்டப்பட்டிருப்பார்

///
அவன்,அவள்,இல்லாமல்.....
காதல் உண்டு ரமேஸ்
அதுவும் இக் காலத்தில்....நன்றி
///
அப்படியா பார்க்கலாம்...
நன்றி கலா வருகைக்கும் கலக்கல் பின்னூட்டலுக்கும்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு