Pages

Saturday, March 27, 2010

வியர்வை பயிர்கள் விதைக்கின்றேன்

நான்
ஒவ்வொரு முறையும்
விழுந்தபோதுதான்
பலமுறை
எழ முடிகிறது

என் விழிகளின்
ஓரத்தில்
அடிக்கடி
நீர்த்துளிகள்
துடைத்துக்கொள்ள
கை நீளுகையில்
மனசு மட்டும்
மெளனமாய்
கேட்டுக்கொள்ளும்
வியர்வையா
வேதனையா??? என்று

நானும் மீனும்
ஒரே ஜாதி
கண் கலங்கும் போது

இப்போது
என் வியர்வைகள்
நாளைய
விருட்சங்களின்
விதைகளாகட்டும்

அம்மா
கவலைப்படாதே
உன்
கண்ணீர் துடைக்கும்
விரல்கள்
என் வியர்வைகளே

பூமி தோண்டி
புதையல் எடுக்கவில்லை
நிலம் உழுது
விதை
விதைக்கிறேன்
நாளையப்பயிர்கள்
நமக்காககட்டும்.

12 comments:

vasu balaji said...

ஆகட்டும். நல்லாருக்கு றமேஸ்

Ramesh said...

நன்றி ஐயா

Bavan said...

//என் விழிகளின்
ஓரத்தில்
அடிக்கடி
நீர்த்துளிகள்
துடைத்துக்கொள்ள
கை நீளுகையில்
மனசு மட்டும்
மெளனமாய்
கேட்டுக்கொள்ளும்
வியர்வையா
வேதனையா??? என்று//

அட அட அட..

//நானும் மீனும்
ஒரே ஜாதி
கண் கலங்கும் போது//

கலக்கல்..;)

Ramesh said...

நன்றி பவன்

Paleo God said...

நல்ல தலைப்பு, அதற்கேற்ற கவிதை நல்லா இருக்கு றமேஸ்.

Ramesh said...

நன்றி ஷங்கர் நீண்ட நாளைக்குப்பிறகு. எப்படி இருக்கீங்க

Chitra said...

அம்மா
கவலைப்படாதே
உன்
கண்ணீர் துடைக்கும்
விரல்கள்
என் வியர்வைகளே

....அருமையான வரிகள்.

Unknown said...

'இப்போது
என் வியர்வைகள்
நாளைய
விருட்சங்களின்
விதைகளாகட்டும்'.

I like this ramesh. Good.

Ramesh said...

நன்றி சிதரா உண்மையில் அம்மாவுக்கு சொன்ன வார்த்தைகள்

Ramesh said...

நன்றி சுபா அக்கா

Dr. Srjith. said...

நன்கு நல்ல title

Ramesh said...

நன்றி டாக்டர்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு