Pages

Saturday, April 17, 2010

பாட்டு - நானும் அவனும் பட்டபாடு...

(பல்கலைக்கழக கனாகாலங்களில்.. ஹொஸ்டலில்)

நான்: "வாடா அவன் ரூமுக்கு போவோம்... "
"ஓகே..." - அவன்.

"என்ன மச்சான் radio எல்லாம் களைகட்டுது.... "
ரூம் நண்பன் "ஹிஹிஹி அது அந்த சீனியர் ரூமில சுட்டதுடா'

"ஓஓஓஓ பாட்டு மட்டும் கேக்குது ரேடியோ எங்க டா இருக்கு"

"அது உனக்கு வேவையா பாட்டு கேட்டா போச்சு.... பாட்டை மட்டும் கேளு...."
"ஓகே ஓகே.."
ஆகா... நல்ல மெலோடிடா.....
ஹரீஸ் ஹிட் என... மம்ம்்ம். சுப்பரா இருக்கு..."

மீண்டும் அதே இரவு அந்த ரூமுக்கு போனேன்.... அதே பாட்டு..

அந்த ரூமுக்கு மீண்டும் போனேன்.... அதே பாட்டு ரிப்பீட்டு பண்ணி போட்டான். எனக்கு சிரிப்பு..
"ஏண்டா இப்படி அதே பாட்டை திரும்பித்திரும்பி போடுற... அது மட்டும்தான் கெஸட் இருக்கா" எண்டு அந்த ரூம விட்டு போக நினைக்கையில்

"றமேஸ்..."
"என்னடா'
"நீ வந்தா மட்டும் தான் இந்தப்பாட்ட போட்டுக்கிட்டு இருக்கான் என்ன இளவோ புரியல...ஹாஹாஹாஹ"
என்று மற்றைய நண்பன் சொல்ல எனக்கு உள்ளுக்குள்ள ஏதோ ஒண்டு தட்டுப்பட்டது அப்பதான். "இவன் ஏன் இதே பாட்ட மீண்டும் மீண்டும் அதுவும் நான் வரும்போது ஏன் போடணும் கேட்டா தப்பாகிடுமோ.. இல்ல.. என்ன பண்ணுறது.... எதுவாச்சாலும் அவன் சொன்னாத்தானே புரியும்.. ஓகே அவன் சொல்லுவான் தானே விடுவோம்" மைண்ட்வொயிஸ்...

அடுத்தநாள் அவன் ரூமெட்டுகிட்ட (நம்ம நண்பன் தான்) "ஏன்டா இவன் இப்படி நான் வந்தா அந்தப் பாட்ட போடணும்"..
"ஓ அதுவா...நீ அவள் கிட்ட போய் கேட்டியே அவள் என்ன சொன்னாள்"
"முடியாது எண்டாள் அதுவும் எப்படி றமேஸ் நீங்களே சொல்லுங்க இது சரிவருமா எண்டு" "நான் எவ்வளவோ நல்லதா சொன்னபோதும் அவள் விரும்பவில்ல."..
'இப்ப எதுக்கு அது...'

"அவள் பிரண்டு "கவி"யோட லவ்வர் தானே"
"ம்ம்.."
"கவியும் இவனும் நல்ல 'கூல்'டா.. ஓகே டா பிறகு சந்திப்போம்.."
(மண்டைக்குள் கொடஞ்சிக்கிட்டே இருந்திட்டு என்ன எண்டு தெரியல இவனும் முழுசா சொல்லல்ல....)

மீண்டும் பின்னேரம் அதே பாட்டு நண்பன்
"றமேஸ் கூல்பாருக்கு போவோமா..."

" சரி பொக்கட்ல இல்ல உன்ட பேர்ஸ் கொஞ்சம் பெரிசா இருக்குதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் சொல்லுது...."

"வந்து வந்து...டேய்!வரப்போறியா இல்லயா.. முதல்ல அத சொல்லு.சும்மா பேர்ஸ்சு பொக்கட் எண்டு..நீ என்ன வெறுக்கிறியா"

"சரிடா ஏன் கோவிக்கிற நான் என்ன வராமலா போகப்போறன்....எடு சைக்கிள அது சரி நான் ஏன் உன்ன வெறுக்கணும் நீ என்ர பிரண்டுடா"

சைக்கிள் சவாரி
ஏஹே ஓஹோ..... லாலலா....
'என்னடி பாட்டுவாத்தியாரு சைக்கிளில போராரு...'

"திட்டு பாட்டுக்குடா... பார்த்துடா பள்ளம் மேல ரைட்டா ஓடு"..

கூல்பார் வந்துட்டு:....
"றமேஸ் எனக்கு ஒரு உண்ம தெரியணும்"
"என்னடா சீரியசாவா கேக்குற... சொல்லு சொல்லு சீ சீி சீ கேளு கேளு... என்ன"
"நீ அவள்கிட்ட பேசினியா இல்லயா??"
"பேசினேன் அத அப்படியே வந்து அண்டைக்கே சொன்னேனேடா உன்னிட்ட.."

"கவி சொன்னான் அவள் உன்னத்தானாம் விரும்புறாளாம் நீயும் அவளும் லவ் பண்ணுறேயலாம்... எண்டு சொல்லி... நம்மட சீனியர்மாரிடமும் சொல்லி..."

"டேய் முதல்ல நிறுத்து நீ என் பிரண்டு உனக்கு ஏண்டா நான் இப்படி நடக்கணும் அத விட உனக்கு நம்ம குடும்ப நிலைமை எல்லாம் தெரியும் அப்படி இருக்க நீ ஏண்டா சந்தேகப்படணும்......... சீ போடா.... நான் அப்படிப்பட்ட ஆள் இல்லடா"
'சரி இத நீ ஏன் முதல்ல என்னட்ட கேக்கல அதவிட்டுட்டு அவன் சொன்னான் இவன் சொன்னான் எண்டு என்னட்ட மட்டும் சொல்லாம பாட்ட மட்டும் போட்டுத் தாக்கிட்டடேயே மச்சான்.."
"நீ தான் கவிதை எழுதுறவனாச்சே அப்படி அடிச்சாத்தான் உறைக்கும்"

ம்ம்ம் இவனுக்கெல்லாம் லவ் கவிதை எழுதி எழுதி பாவப்பட்டது நான்தான்.. பரவாயில்ல கவிதையாவது என்னிடம் எப்போதும் என்னோடு...

இவ்வளவுக்கும் அந்தப்பாட்டு இந்த வெண்மதிதான்

6 comments:

vasu balaji said...

:)). இது வேறயா

Ramesh said...

வானம்பாடிகள் said...
//:)). இது வேறயா///
என்ன பண்ணுறது இதக்கூட செய்யாவிட்டால்.......

balavasakan said...

ஆமாம் றமேஸ் எப்போதும் இறந்த காலங்களை மீட்டிப்பார்ப்பது ஒரு தனி சுகம்..!!

Ramesh said...

Balavasakan said...

நன்றி பாலா. ம்ம் இந்தப்பாட்டை இன்று வெ. வானொலியில் கேட்டேன் அதான் எப்போதும் இந்தஞாபகம் வந்துடுது

Chitra said...

"ஏதோ ஒரு பாட்டு, காதில் கேக்கும். கேக்கும் போதெல்லாம், உன் ஞாபகம் பிறக்கும்."
நல்ல பகிர்வு, ரமேஷ்.

Ramesh said...

Chitra said...

ஹாஹாஹா.... உண்மை தான்
நன்றி சித்ரா

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு