Pages

Friday, December 23, 2011

அடைமழையும் அவியலும்

எங்களுக்கு வடகீழ்ப்பருவப் பெயர்ச்சிக்காலம் என்றாலே மாரிகாலம் தான். மாரிகாலம் வரும் என்று பலர் முன்னாயத்தங்களை மேற்கொள்ளுவது மாரிகாலத்தைப்பற்றி பயம் அதற்காக எவ்வாறு செலவு செய்வது, எப்படி வருமானமற்ற நிலையில் வாழ்வது என்ற எண்ணப்பெருங்கடல்களுக்கு மத்தியில் வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

வறுமை என்ற நிலமை, வருமானம் குறைந்த வாழ்வாதார தன்மை, உலர்காலங்களில் அன்றாடத் தொழில் செய்து தினம்வருமானம் ஈட்டும் தன்மை போன்றவற்றில் இருப்பவர்களாலே தான் இம்மாரிகாலத்தின் வேதனைகளை முற்றாக அனுபவிக்கமுடிகின்றதாக இருக்கின்றது. ஆயினும் ஏனையவர்ளாலும் கஸ்டப்பட்டே கடந்து செல்லவேண்டிய காலம் இது.

சாப்பாடு என்பது மூன்றுவேளையும் சோறும் கறிகளுமாய் ஆன கிராமத்து நரகத்து வழக்கம். ஆனால் கிராமத்திலே எரிபொருள் தட்டுப்பாடான நிலமை தொடரும் காலம் இது. விறகு (கொள்ளி என்றும் அழைப்பர்) அடுப்பிலே எரிப்பதற்கு எடுத்துக்கொள்ள முடியாத தொடர்மழைக்காலம். ஆதலால் மூன்றுவேளைக்குரிய சாப்பாடுகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டிய நிலமை.
இக்காலத்திலே தான் அந்த வட்டமேசைகளும் பக்கத்துவீட்டு உறவுகளும் சேர்ந்த ஒரு பானை "அவியல்". என்னடா இது என்று வியக்காதீங்க. சோளன் Zea mays, மற்றும் கச்சான் (நிலக்கடலை)Arachis hypogaea போன்றவைகளின் காலமும் இதுதான். இவற்றினை அவித்து அனைவரும் சுவைத்து பசிபோக்குவது வழமை.



அத்தோடு மட்டுமில்லாமல் மாரிகாலத்திலே தான் உப்புக்கருவாடும் பழஞ்சோறும் (தண்ணிச்சோறும்) தின்னும் அருமைவிளங்கும். அதைவிட மத்தியானப்பசியை கோதுமைமாப் பிட்டு, கோதுமைமா ரொட்டித்துண்டுகள் மிளகாய் தேங்காய்ப்பூ சேர்த்து குழைத்து உண்ணல் அற்புதமான சுவையும் சுமைஇறக்கிய வாழ்வுமாய் மாரிகாலப்பொழுது வீட்டுக்குள்ளே கரைந்தோடும்....

என்னதான் ஆனாலும் பஞ்சம் என்பது தளைகட்டும் காலம் இதுதான் என்பதால் பிடிக்காமையும் தான்.
மாரி வந்தாலே கூட பஞ்சம் வரும்.

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு