Pages

Tuesday, March 9, 2010

பெயர்மாற்றம்

எனக்கு
நீ
உனக்கு
நான்

தேவைகள்
தீரும் வரை
"வாழ்க்கை"

தேடல்கள்
தீர்ந்த பிறகு
உயிர்
உடல்

Sunday, March 7, 2010

செல்லப்பா.... எம் இதய அஞ்சலி

எங்கள் அப்புச்சி இயற்கை எய்தியதையொட்டி அவருக்காக படைத்த இதய அஞ்சலி.....

செல்லப்பா எங்கள்
செல்வப்பா......
எங்கப்பா சென்றாயோ – எங்கள்
செல்லப்பா...

மாரிமுத்தம்மா அழுகிறாள்
மார்தட்டி உறவுகள்
கதறுகிறார்கள்
சுற்றி ஒருதரம் பாராயோ!

பெற்றெடுத்த பிள்ளைகள்
'அப்பா' என்றழுவது
கேட்கலியோ....
பேரப்பிள்ளைகள் 'தாத்தா'
என்றழுவது கேட்கலியோ....

வியர்வைகள் சுமந்து
பிள்ளைகள் வளர்த்தாய் - அந்த
செல்வக் கொழுந்துகள்
சுற்றி அழுவதைப் பாராயோ...

'மகன்'..'மக'.. என்று
சொல்வாயே... - இனி
அந்த செல்லக்குரலை
எங்கு கேட்போம்.

ஆழம் நீ போனதால்
ஆறாது உள்ளம்
உன்பிரிவைத் தாங்காது
துடிக்குது நெஞ்சம்......

'ம்ம்ம்; மக..' என்ற
சத்தம் எமக்கு போதும்
நீ இல்லை என்றதும்
தாங்கொணாது
தவிக்குது நெஞ்சம்
கண்ணீர் சொரியுது கண்கள்..
கண்ணீர் அஞ்சலி – எம்
இதய அஞ்சலி....

Tuesday, March 2, 2010

படம் பார்க்கலாம் மனம் சலிக்குமா

பல நாட்களாக தோட்ட வேலைகள் காரணமாக பதிவெழுதுவதற்கு கடினமாக இருந்தது. அதால நம்ம ஊரின் சில காட்சிகள் ரசனையாக இருக்குதா எண்டு பாருங்க..... வாங்க பார்க்கலாம் ரசிக்கலாம்

இது கரைவலை மீன் பிடிக்கும் அழகு
 
 கோயில் வாசலில் அரட்டையில் ...................................
 
தண்ணீரில் தவித்த வெள்ளாமை வெயிலில் காயுது நமக்கு நெல்மணிகள் தருவதற்கு

 
இது மனித வலுவுக்கு பதிலாக அருவி வெட்டும் இயந்திம் (சிறியது )
  
அழகாக  கதிர் எடுத்து புதிர் உண்ணவிருக்கும் இவர் .....
 


அந்தி மாலைப்பொழுதின் சில வினாடிகள்
 

   

  
குளத்தில் தூண்டில் போடும் சிறுவன்
  
 இந்தப்பூவின் பெயர் தெரியவில்லை பிடிச்சிருக்கு
  
 நெற்குருவியின் அழகிய கூடு இரு முட்டைகள் (மன்னிக்க குருவியே.... )
  

வேலைப்பளு காரணத்தால் சிந்தனை சிறைவைக்கப்பட்டுள்ளது .................
வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு