Pages

Saturday, May 1, 2010

டாக்டர் அப்துல் கலாம் சிந்தனையிலிருந்து

என்னைக் கவர்ந்த உலகத்தலைவர்களில் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் முதன்மை பெறுகிறார்.. அவரைப்பற்றிய விடயங்கள் எங்கு கண்டாலும் வாசிக்கத்தவறுவதில்லை. இவரின் சிந்தனைகள் கனவுகள் பற்றி படித்தவற்றை உங்களுடன் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன். கடந்தநாட்களில் நான் கஸ்டப்படும்போதெல்லாம் என்னை ஊக்கப்படுத்திக்கொள்ளும் வாசகங்களைப் படிப்பது வழமை. அவ்வாறு படித்து பிடித்தவற்றை இடுகையிடுகிறேன். சிந்தனைகள் மனதை வளப்படுத்தும் என்ற நோக்கில் நீங்களும் வாசியுங்கள்...

இன்று சில சிந்தனைகள்..
"இதோ இந்த வார்த்தைகளை திரும்பத்திரும்பக் கூறுங்கள். இவற்றைத் தவறாமல் கடைப்பிடிப்பேன் என்று கூறுங்கள்"..


  • கல்வியில் சிறப்படைய நான் நன்றாக உழைத்துப் படிப்பேன்
  • என்னைச் சுற்றியிருப்பவர்களில் பத்துப்பேருக்கு எழுதப்படிக்கக் கற்றுக்கொடுப்பேன்.
  • என் சுற்றுப்புறத்தில் போதைப்பழக்கத்துக்கு ஆளானவர்களில் குறைந்தது ஐந்து பேரையாவது அக்கொடிய பழக்கத்திலிருந்து மீட்பேன்.
  • என்னுடைய வீட்டிலோ படிக்கிற இடத்திலோ பத்து மரக்கன்றுகளேனும் நட்டு அவை மரமாகும் வரை பாதுகாத்து வளர்ப்பேன்.
  • *துன்பப்படுகின்றவர்களில் சிலருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்களுடைய முகத்திலே மலர்ச்சியை ஏற்படுத்துவேன்.
  • நான் மதம்,சாதி, மொழி ஆகியவற்றின் பெயரால் நடக்கும் தீவிரவாதச் செயல்களுக்கு துணைபோக மாட்டேன்
  • நேர்மையான வழியில் நடப்பேன். மற்றவர்களும் நேர்மையாக நடந்துகொள்ள உதவுவேன்.
  • நான் நல்லவனாய் இருந்து நற்பணிகள் செய்து என் வாழ்வை மற்றவர்களுக்குச் சிறந்த உதாரணமாய்த் திகழச் செய்வேன்.
  • மனநோயாலும் பிற ஊனங்களாலும் துயர்ப்படும் சகோதர சகோதரிகளுக்கும் என்னாலான முயற்சிகளைச் செய்து அத்துயரிலிருந்து மீட்டு சாதாரண மனிதர்களாய் வாழச்செய்வேன்.
  • என் தாயத்திருநாட்டின் வெற்றியையும் என் நாட்டு மக்கள் பெறும் வெற்றியையும் நான் மகிழ்ச்சியோடு கொண்டாடுவேன்..

14 comments:

ஹேமா said...

அத்தனையும் பொன் மொழிகள் றமேஸ்.ஒரு மனிதன் இத்தனையையும் கடைப்பிடித்தாலே போதும் நாடும் வீடும் முன்னேற.

Chitra said...

/////என் தாயத்திருநாட்டின் வெற்றியையும் என் நாட்டு மக்கள் பெறும் வெற்றியையும் நான் மகிழ்ச்சியோடு கொண்டாடுவேன்..////


...... one royal salute for that!

Ramesh said...

ஹேமா said...
///அத்தனையும் பொன் மொழிகள் றமேஸ்.///
உண்மைதான் ஹேமா... கடந்த வாரம் எனக்கு கைகொடுத்த புத்தகம் இவரின் சிந்தனைகளே...
///ஒரு மனிதன் இத்தனையையும் கடைப்பிடித்தாலே போதும் நாடும் வீடும் முன்னேற.///
ம்ம்்ம்..

Ramesh said...

Chitra said...

///
...... one royal salute for that!
///
ம்ம் நன்றி சொல்லுவோம்

மதுரை சரவணன் said...

அத்தனை வரிகளையும் வாழ்வில் கடைபிடித்தால் நல்லது. நன்றி.

Ramesh said...

மதுரை சரவணன் said...
//அத்தனை வரிகளையும் வாழ்வில் கடைபிடித்தால் நல்லது. நன்றி.//
நன்றி சரவணன்...

vasu balaji said...

நன்று.

Ramesh said...

வானம்பாடிகள் said...
///நன்று.///
நன்றிங்க

balavasakan said...

றமேஸ் அதில ஒண்ணை பாதி கடைப்புடிச்சாலாவது உருப்பட்டிரலாம் ...;(

Ramesh said...

Balavasakan said...
///றமேஸ் அதில ஒண்ணை பாதி கடைப்புடிச்சாலாவது உருப்பட்டிரலாம் ...;(
///
ம்ம் உண்மைதான் பாலா இத அழுமூஞ்சியிலா சொல்லுறது

Kala said...

அத்தனை சிந்தனைத் துளிகளும்
அவரிடம் இருந்து சிந்திய தேன்
துளிகள்தான்!அதைப் பவித்திரமாய்
எத்தனை பேர்கள் பருகுவார்கள்!!??
தகவலுக்கு நன்றி றமேஸ்

அப்பா நலமா?வீட்டுக்கு
வந்துவிட்டாரா?

Ramesh said...

Kala said...
/// தகவலுக்கு நன்றி றமேஸ்
///
நன்றி கலா.
///

/// அப்பா நலமா?வீட்டுக்கு
வந்துவிட்டாரா?//

வீட்டுக்கு வந்து மீண்டும் விடுதியில் இப்போது இருக்கிறார் நாளை discharge pannuvanaka

kavina said...

கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல...உன்​னை தூங்கவிடாமல் பண்ணுவது எது​வோ அது​​வே இலட்சியக் கனவு.. ஆம் கனவு காணுங்கள்...
- டாக்டர் அப்துல் கலாம்

Ramesh said...

​செந்தில்​வேல்குமார் said...

///கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல...உன்​னை தூங்கவிடாமல் பண்ணுவது எது​வோ அது​​வே இலட்சியக் கனவு.. ஆம் கனவு காணுங்கள்...
- டாக்டர் அப்துல் கலாம்
///
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
கனவு காணுவோம்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு