Pages

Saturday, November 27, 2010

மெளனித்து............

கனவாகிப்போன
கனவான்களின்
கனவுகளுக்குமாய்

கருவாக்கி உருவாக்கிய
கருவாகி உருவான
கருத்தாகிப்போன
கருக்களுக்குமாய்

வேரைத்தேடி புறப்பட்ட
விருட்சங்களுக்குமாய்

காற்றாகிப்போன
புயல்களுக்குமாய்

சூரியனை வருவிக்க
ஐதரசன் சுவாலை தின்ற
நட்சத்திரங்களுக்குமாய்

மனமே ஒளிர்க
மெளனமாய்

(நன்றி கார்க்கி முகப்புத்தக படம்)

6 comments:

Chitra said...

நானும் மௌனித்து......

Jana said...

அருமை...புரிந்துகொண்டேன்.

யோ வொய்ஸ் (யோகா) said...

மௌனித்து....

ம.தி.சுதா said...

நான் வாயிருந்தும் மௌனாமாயழுகிறேன்...

என் வீட்டு பட அறையில் இன்று மட்டும் இரட்டை விளக்கு...

இங்கே தொடர்கிறேன்...

http://mathisutha.blogspot.com/2010/11/blog-post_27.html

Ramesh said...

அனைவருக்கும் நன்றிகள்....
விளக்கேற்றுவோம்
மெளனமாய்

ஹேமா said...

காலத்தையே வெல்வோம்.
காத்திருப்போம் ஆணடுகள் கடந்தாலும்.இழப்புகளின் ஈடுகளைச் சமப்படுத்துவோம்.நம்புவோம் !

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு