Pages

Saturday, April 16, 2011

இது ஸ்டேடஸ் - 12

"சாமிபடத்து பூக்களைவிட பூக்களை
பூட்டிக்கொண்டிருக்கும் மரமும் பூக்களும் அழகு.
அதிகநேரம் துளிர்த்துக்கொண்டிருக்கும்
பூக்களும் நமது மனமும்."

"ஒருமுறை எடுக்கும் முடிவு கூட தெளிவாக இருந்தால் திருப்தியும் நிம்மதியுமாய் இருக்கும். எடுத்தேன் நிம்மதிக்கிறேன்."

"கருப்பு நாட்களை கடந்துபோகிறேன்..
வெள்ளிக்காசுகள் தான் வாழ்க்கையா
அன்புக்கொலுசுகள் தான் ஆராதனையா"

"ஒவ்வொரு முறை தவறிவிழும்போதுதான் தெரிகிறது எத்தனை முறைகள் எத்தனித்திருக்கிறேன் என்று"

"ஆயிரம் வேதனைகள் சுழட்டி அடித்தாலும் ஆறுதல் சொல்லும் குரல்கள் கழுவிவிட்டுச்செல்லும் அழுக்குகளையும் அடுக்கிவிட்டுச்செல்லும் அன்புகளையும்"

படித்தது பிடித்தது

"தியாகத்தில் விளைவது கசப்பான மன உணர்வும் விரக்தியான மனநிலையும்"

"மற்றவர்கள் உங்களை விட சிறப்பாகச் செயல்ப்படுதாக எண்ணாதீர்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் பழைய சாதனைகளை மிஞ்சுங்கள், நீங்கள் கண்டிப்பாய் வெற்றி பெறுவீர்கள். காரணம் வெற்றி என்பது நீங்கள் உங்களுடன் நடத்தும் போராட்டம்"

"நட்பின் நேர்த்தி பேசுவதும் பேசுவதைக் கேட்பதும் மட்டுமல்ல.
மெளனத்தைப் பகிர்ந்து கொள்வதும் கூட"

"உரையாடலில் அறிவைப் பகிர்ந்துகொள்கிறீர்கள்
வாதத்தில் அறியாமையைப் பகிர்ந்துகொள்கிறீர்கள்"

ஒரு படம் சீரழிக்கிறோம்
எமது கடற்கரையோரத்தில் கரையோரக்கம்பளமாக இப்பொழுது சவுக்கு மரக்கரன்றுகள் தடுப்புமரங்களாக இருக்கின்றன. ஆனால் இவற்றை பல்வேறு தீயவொழுக்க விடயங்களுக்காகவும் பயன்படுத்துவது வேதனையான விடயம் அதைவிட அதை வெட்டி வெறுமையாக்குவது அதைவிடக் கொடுமையான விடயம். தண்டனைகளைவிட இம்மரங்களின் தேவைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுதல் வேண்டுமென்பதே நமது விருப்பம்.
சில படங்கள் பார்வைக்கு



5 comments:

Yaathoramani.blogspot.com said...

மூன்றுமே முத்தான சமூக அக்கறையுள்ள பதிவுகள்
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

Rathnavel Natarajan said...

"மற்றவர்கள் உங்களை விட சிறப்பாகச் செயல்ப்படுதாக எண்ணாதீர்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் பழைய சாதனைகளை மிஞ்சுங்கள், நீங்கள் கண்டிப்பாய் வெற்றி பெறுவீர்கள். காரணம் வெற்றி என்பது நீங்கள் உங்களுடன் நடத்தும் போராட்டம்"

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

தர்ஷன் said...

அருமையான சிந்தனையயை தூண்டும் பதிவு

ஹேமா said...

எல்லாமே தேவையான விஷயங்கள்தான் றமேஸ் !

Ramesh said...

நன்றி ரமணி ஐயா, ரத்தனவேல் ஐயா, மற்றும் தர்ஷன், ஹேமா வருகைக்கும் கருத்துக்கும்.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு