Pages

Monday, December 12, 2011

சிதறும் சில்லறைகள் - 20 (பாரதியும் ரஜனியும்)


டிசெம்பர் 11
எட்டயபுர விற்பன்னன். தமிழ்மொழியின் சிற்பி. பெண்விடுதலைக் கவி என்றெல்லாம் ஆன மகாகவி சுப்பிரமணியபாரதியாரின் ஜனன தினம். எட்டயபுரத்திலே  1882 ஆம் ஆண்டு பிறந்து எத்தனையோ தமிழிலக்கியத்தின் இலேசுத்தன்மையையும் தமிழ்வீரத்தின் திறனையும் ஒரு முழுமையான மொழியில் இருக்கவேண்டிய பண்புகளையும் சொல்லிச்சென்றார் சுப்பிரமணியபாரதியார்.
"ஓடி விளையாடு பாப்பா நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா."
என்ற பாப்பா பாட்டே நான் கற்றுக்கொண்ட முதல் பாடல் என நினைக்கிறேன். அதற்குப்பிறகு "சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா" என்றும் பிறகு "நல்லதோர் வீணை செய்தே என்ற பாடலை எனது நண்பனின் அண்ணன் புனிதன் அண்ணா(போர்களவீரனானான்) பாடிய பின்னர் உதடுகள் உச்சரிப்பில் எழுந்தது.
சில பாடல்கள் கேட்கும்போது பிடித்துவிடும் பின்னர் யார் எழுதியது என்று பார்க்க பாரதியார் என்றதும் இன்னுமின்னும் உள்ளுர இனிக்கும். ஆனாலும் கடந்தவருடமே சொந்தமாக 13-12-2010 அன்றுதான் சொந்தமாக பாரதியார் கவிதைகள் என்ற புத்தகம் வாங்க என்னால் முடிஞ்சது. அதற்குமுன் இரவலாய் பெற்று வாசித்திருக்கிறேன். ஆயினும் சொந்தமாக வந்தபின்பு வாசிப்பது குறைவாகத்தான் இருக்கிறது. இவரது புதுமையும் எழுத்து வன்மையும் தன்மையும் ஈர்த்துக்கொண்டே இருக்கும்.
பாரதியார் பற்றி விக்கிப்பீடியாவில் இங்கு காண்க.

கார்த்திகைவிளக்கீடும் சந்திரகிரகணமும்
இவ்வருடத்தின் இறுதிசந்திரகிரணம் கார்த்திகை விளக்கீடு அன்று சேர்ந்து வந்தது. நான் எப்போதும் இந்நிகழ்வைக் கொண்டாட மறுப்பதில்லை. காரணம் அம்மா தயிர்,வாழைப்பழம், பால் என்பன சேர்த்து ஒன்றாக வெண்பொங்கலில் கலந்து பிசைந்துதரும் பாற்சோறு. அதனை அம்மாவே ஊட்டிவிடுவதும் எங்கவீட்டின் சிறப்பு. சின்னப்பருவத்தில் மெழுகுதிரி கொழுத்திக்கொண்டு வீதிகளில் குறிப்பிட்ட தூரங்கள் இரவுப்பொழுதை "கார்த்திகைக்காரோ பாலுஞ் சோறும் தின்னவாடோ" என்று கத்திக்கொண்டு திரிந்து கார்த்திகைக்காரனைக் கூப்பிடும் நிகழ்வு தித்திக்கும் உணர்வு.
இவ்வருட கார்த்திகை மற்றும் சந்திரகிரகணப்படங்கள் சில.

அம்மாவின் கார்த்திகை நிலாச்சோறு தின்ற திமிரில் மருகள்

நிலவைமறைத்த பூமி

வீட்டு சுற்றுமதில் சுவரில் கார்த்திகைத்தீபங்கள்.


டிசெம்பர் 12
தனது வித்தியாசமான சுப்பரான நடிப்பு. உதவும் நோக்குடன் செயல்படும் தன்மை என்றெல்லாம் தமிழ்சினிமாத்துறையில் என்றும் பதினாறாக "சுப்பர் ஸ்டார்" ரஜினிக்காந்தின் பிறந்தநாள். வாழ்த்துக்கள் தலைவா. ரஜினிகாந்தின் இணையத்தளம் இங்குகாண்க இவர்பற்றி விக்கிப்பீடியாவில் இங்கு செல்க

அண்மையில் வந்ததில் பிடித்த பாட்டு


ஆனாலும் இன்று இன்னொரு நண்பனின் ஸ்டேடஸ் முகநூலில் பாருங்க.


டிசெம்பர் 12 இல் ஓவியம்

"நாம் எமது வீட்டுச்சுவரில் தொங்குவதற்காக இயற்கையின் புகைப்படங்களை விட அழகான படங்கள் வண்ணப்பூச்சு ஓவியங்கள் வரையாமல் குறைந்தபட்சம் ஒரு கலையின் அடித்தளங்களை அமைத்து,நாம் உருவாக்க வேண்டும் ஒரு கலை மனிதநேயத்தையும் சொல்லும். ஓர் இதயத்தின் உட்புறத்தில் கலை உருவாக்கப்படும்."
இவ்வாறு சொன்னவர் தான் நோர்வே நாட்டைச் சேர்ந்த குணச்சித்திர ஓவியர் எட்வர்ட் மண்ச்.(Edvard Munch, டிசம்பர் 12, 1863 - ஜனவரி 23, 1944) இவரது படைப்புகள் அற்புதமானவை. இவருக்கான இணையத்தளத்தை உருவாக்கியவர் றோம் ஜெஷ்டர் (Roman Jaster)இங்குசென்று எட்வர்ட் மண்ச்சின் கைவணங்களைக் காண்க.

பிடித்த ஒரு ஸ்டேடஸ்
அண்மையில் முகநூலில் பிடித்தது.

டிசெம்பர் 13
நாளைய தினமும் 13-12-11 என வரும் ஒரு தினமே.

4 comments:

ஹேமா said...

சந்திரகிரகணமும் கார்த்திகைத்தீபமும் அழகான படங்களோடு நினைவு படுத்தினீர்கள் றமேஸ்.எங்களுக்கு இங்கு நினைவு மட்டுமே !

லிங் தந்த ஓவியங்கள் ரசித்தேன் !

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"

தர்ஷன் said...

இப்போதெல்லாம் சில எதிர்கருத்துக்கள் இருந்தாலும், என்னை முற்போக்காக சிந்திக்க செய்த முதல் நபர் பாரதியே

Ramesh said...

@ஹேமா
நன்றி ஹேமா..

@திண்டுக்கல் தனபாலன்
நன்றி தனபால்

@தர்ஷன்
நன்றி தர்ஷன்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு