Pages

Thursday, December 15, 2011

காதல் கடந்துசெல்கிறது

காற்று நுரைக்கும்
ஈரப்பொழுதுகள்
காதல் தடவும்
பார்வைவீச்சுகள்

உயரக்குடை பிடித்த
நீ
தேகம் நனைத்த
சாரல்

நேர்கோட்டு வீதியில்
பயணித்தேன்
குறுக்கு கோடுகளில்
நிறுத்திவிட்டாய்

கரடுமுரடான தார்வீதியை
கார்பட் விரித்த
தளமாக்கிவிட்டாய்

நீ சாலையைக் கடக்கும்
பாதசாரி
நான் நிறுத்திய
சைக்கிளோட்டி

பச்சைவிளக்கு
எரிகிறது

காதல்
கடந்துசெல்கிறது




5 comments:

KANA VARO said...

வணக்கம் சகோ நலமா?

Ramesh said...

@Kana varo
நலமே நலமே. தாங்கள் நலமா?

மாலதி said...

மிகசிறந்த வர்ணனை இகசிறந்த ஆக்கம் காதல் ஏழை பணக்காரன் என பார்த்து வருவதில்லை வெல்லட்டும் வெல்லட்டும் இரமேசின் காதல் வெல்லட்டும் ...

நகரம் said...

நல்ல கவிதை....

Ramesh said...

@மாலதி
நன்றி மாலதி

@john danu
நன்றி டனு

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு