Pages

Saturday, December 31, 2011

ஒன்று கழிய இரண்டு வருகிறது

இறுதிப்பொழுதுகளில்
மீதமிருக்கும்
மணித்தியால எண்ணங்கள்

நாசித்துடிப்பில்
சோகத்தளிம்புகளை மட்டும்
பார்க்குது
பாவப்பட்ட மனம்.

அத்தனை வேதனைகளை
விரட்டியடிக்குது
வெளிச்சப்படுத்திய
சில சந்தோசங்கள்
சில்லறைகளால் நான்..

ஒவ்வொரு புதிசும்
இருக்கை பற்றி நீளச்செய்கிறது
பழசு
வாழ்க்கையின் நிலையாமையாய்

தீர்ந்துபோனது என்ற
நினைப்பில் இருக்க
காராம்பசுவாய்
வருகிறது வாழ்க்கை
ஓ...
நாளை புதிதாய்
பிறக்கிறது புத்தாண்டு...

மாற்றங்கள் கொண்டு
மாற்றங்களால் வாழ்கை
மனக்குதிரை ஓட்டப்பட
இருக்கிறது
லாடங்களுடன் நான்..

ஒன்று கழிய
இரண்டு வருகிறது..
இன்னும் வரும்
இதயம் சுமக்கும் இனிமையும்
சுமையும் சுமையிறக்கும்
தனிமையும் வருகவே..

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்








5 comments:

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் நண்பா,

கடந்த வருடங்கள் கழிந்தது போலத் துயரங்கள் ஏதுமின்றி இவ் வருடமாவது இனிமையாகப் புலராதா எனும் ஏக்கத்தினைத் தாங்கி வந்திருக்கிறது இக் கவிதை,

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

ஹேமா said...

றமேஸ் பிறந்த 2012 இனிமையானதாக நிறைவானதாக அமைய வாழ்த்துகள் !

சசிகலா said...

அருமை
புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

Ramesh said...

@நன்றி நிரூபன்
@நன்றி ஹேமா
@நன்றி சசிகலா

vetha (kovaikkavi) said...

''...மாற்றங்கள் கொண்டு
மாற்றங்களால் வாழ்கை
மனக்குதிரை ஓட்டப்பட
இருக்கிறது
லாடங்களுடன் நான்..''
மிக நல்ல வரிகள் சகோதரா. வாழ்த்துகள்.இனிய பொங்கல் வாழ்த்துகளும்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு