Pages

Wednesday, November 11, 2009

மட்டக்களப்பு மாங்காடு மகா விஷ்ணு ஆலய கும்பாபிஷேக நிறைவும் சங்காபிஷகேம்

எங்கு எங்கு தமிழ் கலாசாரம் என்றோரை இங்கு நிறைவாக உண்டு என்று சொல்லும் மீன்பாடும் தேனாட்டின் எழில்மிகு மாங்காடு என்னும் ஊரில் இந்த அதிசயங்கள்...(நம்மட ஊருக்கு பக்கத்தில தான் )
ஆம் இறைவன் இல்லை என்றோருக்கு என்ன சொல்ல நான்??? பாருங்க இதைக் கேளுங்கள்.சென்ற வருடம் தான் இந்த அதிச நிகழ்வுகள். என்ன விசயத்த சொல்லாமல் சொதப்புரன் என்று நினைக்கிறீங்களா. சரி சரி ...

திரு. இராமசாமி இராமச்சத்திரன் என்பவர் தாம் வழக்கம் போல தமது கடற்கரை வளவுக்குள் ஒரு மரத்தடியில் சிறு கல்லை வைத்து விஷ்ணு பகவானையும் நாகதம்பிரானையும் மனதில் நினைத்து (உண்மையில் நிறுத்தி) வழிபட்டு வந்தார். இதுதான் கண்கண்ட தெய்வ வழிபாடு நம்ம ஊருல இது சிறப்பு.அவிசாவளையில் பிறந்த இராமசாமி இராமச்சத்திரன் என்பவர் ஒரு விஷ்ணு பக்தர். மாங்காட்டையே வசிப்பிடமாக கொண்டவர்
அன்று வழமை போல தனது ஆலய சுற்றுப் புறங்களை கூடிப் பெருக்கும் போது ஏதோ ஒன்று தன் கண்களுக்கு "பளீச்" என்று பட்டது. என்னடா அது என்று பார்க்க அங்கே ஐந்து தலை நாக சிலை தென்படவே நெஞ்சம் எல்லாம் படபடக்க பயபக்க்தியுடன் ஓடினாரு கட்டுப் பிள்ளையார் ஆலய பிரதம குரு குணேந்திரன் ஐயாவிடம்.... அன்று வியாழக்கிழமை ஆதலால் ஆலய குரு நான் நாளை வெள்ளிகிழமை வாறன் என்று சொல்ல,அடுத்த நாள் எப்ப உதிக்கும் என்று அவருக்குள் தெய்வ படபடப்பு அவசரமும் கூட நித்திரையும் இல்ல அன்றிரவு அவருக்கு.இருக்காதா பின்ன.
வெள்ளிக்கிழமையும் வந்தது ஓடிப்போய் சிவாச்சாரியார கூட்டிக்கொண்டு வந்து சமயப் பிரமாணங்களுக்கு ஏற்ப (மடை)வைத்து பூசை வழிபாட்டுடன் அந்த சின்னங்களை எடுத்துப் பார்க்க இன்னும் ஏதோ ஒன்று மேலும் தெரிய உடனே அதை தோண்டிப்பார்க்க அங்கே அற்புத லிங்கமும் அழகிய சங்கு ஒன்றும் வாமருக்மணி சமேத ஐம்பொன்னால் ஆன ஹரிகர வடிவ விஷ்ணு சிலையும் கண்டெடுக்கப்பட்டன
'அதிசயம் அதிசயம்'... என்று நினைத்து நம்ம ஊரு(மாங்காடு மற்றும் அயல் கிராம மக்களும்) மக்களும் தினமும் சென்று நம்பிக்கை கொண்டு வழிபட குருந்த மரம்,இத்தி மரம் அதோடு அரச மரமும் அதிசயமாய் ஒருங்கே வளர்ந்த அந்த அழகிய மர நிழலிலே மகா விஷ்ணு பெருமான் பள்ளி கொண்டான் நம்ம மக்களுக்கு அருள் பாலிக்க
இவர் தான் இராமசாமி இராமச்சந்திரன் ஐயா. அந்த மர நிழலின் குடிசையில் ஆலயம்


அங்கே அழகான நம்ம மச்சான் பேராழன் கும்புடுறான் பாருங்க 



ஆலய வழிபாடு தொடரவே மக்கள் சிந்தனையில் இந்த குடிசை ஆலயம் கோபுரமாகாதா என்ற கவலை... பின்னர் மக்கள் இதை தமக்குளே அடிக்கடி பேசிக்கொள்ள. பெருமான் வழியமைத்தார். மக்கள் கூட்டம் கூடினர் ஒரு வலுவான நிருவாக சபையை உருவாக்கினர்.
திரு.கந்தப்பெருமாள் - குணசேகரம் தலைவரானார் (இவர் மட்டக்களப்பு கல்வி வலய ஆசிரிய ஆலோசரும் கூட) செயலாளராக திரு.கணபதிப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களும் பொருளாளராக திரு.சிவபாலன் சிவாகரன் அவர்களோடு 13 பேர் உறுப்பினர்களாகக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. அப்படா ஒரு மாதிரி நிர்வாகசபை அமைத்தாயிற்று.
(இடமிருந்து வலமாக தலைவர் திரு.க. குணசேகரம், ஐயா இ.இராமச்சந்திரன்,பொருளாளர் திரு.சி. சிவாகரன்)


இனிஎன்ன என்று நினைக்க எப்படி ஆலயம் கட்டுவது எங்கு கட்டுவது என்று மனதில் ஒரே குழப்பம் இவர்களுக்கு. இராமசாமி இராமச்சந்திரன் (ஆலயத்துக்கு வழியானவர்) அவர்களே தமது இரண்டு ஏக்கர் நிலத்தை இலவசமாகத் தர, மக்கள் திரண்டனர் ஆலய வளவு சுத்தம் செய்யப்பட்டது.. ஆலய கட்டடத்துக்கான சாஸ்த்திர அடிப்படையில் 11.03.2009அன்று நிலையம் எடுக்கப்பட்டது.பின்னர் 23.03.2009 அன்று அடிக்கல் நடப்பட்டது.மெய்யடியார்கள் இலவசமாக கட்டடப் பொருட்களை வாரி வழங்கினர். பெருமான் சந்நிதிக்கு மக்களே தமது உடலுழைப்பை நல்கினர். நாள் நாளாய் கோயில் கட்டடம் வளர்ந்தது. மூலஸ்த்தானம் மகாமண்டபம் மற்றும் கோவில் கிணறுடன் தீர்த்தக் கிணறும் கட்டி முடிக்கப்பட்டன..

 
 


ஒருவாறு கோவில் அங்கே அழகாக உருப்பெற்றது (கட்டடம் கட்ட்ப்பட்டதைச் சொல்லுறன்).
ஆலயத்தின் அழகிய முழுத்தோற்றம்





30.10.2009 அன்று கும்பாபிஷேகம் இனிதே நடந்தேறியது. மண்டலாபிஷேகம் தொடர உருத்திராபிஷேகம் நடைபெற்றது. நம்ம ஊருப்பக்கம் பல மாதங்களாக கடும் வரட்சி ஆனா என்ன அதிசயம் தெரியுமா கும்பாபிஷேகம் நிறைவுற்ற உடனே தொடங்கியது அடைமழை... (கடவுள் நம்பிக்கை)
இன்று(10.11.2009)மாங்காடு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து பால்குட பவனியுடன் பெருமான் மகா விஷ்ணுவுக்கு பாலாபிஷேகமும் நிறைவுற தொடர்ந்து சங்காபிஷேகம் பின்னர் கிணற்று நீர்த் தீர்த்தோற்சவத்துடன் நிறைவுக்கு வந்தது கும்பாபிஷேகம்.


சரி ஆலய சங்காபிஷேக நிறைவு நாள் நிகழ்வுகளில் சில பாருங்கள்



2 comments:

S.T.Seelan (S.Thanigaseelan) said...

I am wondering that you are Ramesh or Ramakirisnar? I am unluky because you are " Vaiyaththul Valvanku Valureenka"...God Bless you and Appreciate your Valuable Services....

Ramesh said...

////I am wondering that you are Ramesh or Ramakirisnar?//

ha ha haa...

and thanks my dear

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு