Pages

Wednesday, November 25, 2009

மீண்டும் ஒரு நாள் ஒரு கவிதை இணையத்தளத்தில்

மீண்டும் ஒரு நாள் ஒரு கவிதை இணையத்தளத்தில் நம்ம கவிதை.. பெய்யென பெய்க..
பாருங்கள் பிடிக்குதா என்று

பெய்யென பெய்க...
புதன்கிழமை, 25 நவம்பர் 2009 00:00


பிள்ளைப்பூமிக்காய்
வானத்தாயின்
பாலமிர்தம்
இது
இளந்தைத் தூறல்
இன்பத்தின் சாரல்
உன்
ஒவ்வொரு துளியிலும்
உயிர் வளர்த்தேன்
கவிதைக்கு
தமிழ் சேர்த்தேன்

ஏர் உழுது எரு இட்டு
களை பிடுங்கி
விதை நட்டு
செழிக்கும் பயிர் கண்டு
சிரிக்கும் உழவர் கொண்டு
வாழ் உலகம் இன்பம்
வலை விரிக்க
உன் வரவு வேண்டும்
விதை நிலம்
கருத்தரிதுக்கொள்ள

இங்கு நிலவும்
உன் வரவு
பொங்கும் இன்பத்தின்
உறவு
கனவும் இனி
உன் உலகு

நனையும் உடல்
தேன் வார்த்த திடல்

வருவாய் தினம்
கண்குளிரும்
என் மனம்

- ரமேஷ் சிவஞானம்

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு