Pages

Wednesday, November 18, 2009

காதல் காசுக்காக விற்கப்படுகிறது..

எனது கவிதை மீண்டும் ஒரு நாள் ஒரு கவிதை இணையத்தளத்தில்


புதன்கிழமை, 18 நவம்பர் 2009 00:00

நினைவுகள் எழுதிய
நிலவு
வெட்கித் தலைகுனிந்து
புருவம் உயர்த்தி
நீ பார்த்த அந்த
பார்வை முட்கள்
சிரிப்பு வரைந்த
குழி விழுந்த கன்னங்கள்
உன் புன்னகை உதடுகள்

ரசித்தது உண்மை

பருவம் படர்ந்த
முனைப்புகள்
நான் விழுந்த
அந்த தடங்கள்

வெளிச்சம் காட்டிய
உன் மனது
விழுந்துகொண்ட
என் மனது

நீ உடுத்திக்கொண்ட "சுடிதார்"
உன் "சோல்" லில் சுற்றிக்கொண்ட
நானும்....
என்னைப்பற்றிக் கொண்ட
நீயும்....

உன்னோடிருந்த அந்த நாட்கள்
நம்மை எழுதிக்கொண்டது
"காதல் பறவைகள்" என்று
இப்போது எழுதி்க்கொள்ளட்டும்
அது ஒரு நிலாக்காலமென்று

என்னை உடுத்திக்கொண்ட
என் குடும்பம்
என் காதலை விட
கரன்சியைப் பார்க்கிறது
என் தங்கச்சியின் சீதனத்துக்காய்

விட்டுவிடு என்னை
தொலைகிறேன் நான்...

என்மானம் விற்கப்படப்போகிறது
முடிந்தால்
கேள்விப்பத்திரத்துக்கு
விண்ணப்பித்துக்கொள்...

கிடைத்தால் மீண்டும்
துளிர்க்கும் நம் காதல்

வெடக்கப்படுகிறேன்
துக்கப்படுகிறேன்
முகம் புரியா யாருக்கோவாக
நான் அறியா எவளுக்கோவாக
என் காதல்
புதைக்கப்படப்போகிறது

என் காதல்
காசுக்காக
கரைக்கப்படப்போகிறது

காதல் தேவதையே
என்னை தூக்கிலிடு

அதற்கு முன்
என்னை காட்டிய
எனது குடும்பத்தை பற்றி
சற்றே .....
யோசித்துக்கொள்
என் குடும்பத்தின்
வாழ்க்கை புகையிரதம்
இந்த தண்டவாளத்தால் தான்
ஓட்டப்படுகிறது..

நீங்கள் சொல்லுங்கள்...

பாழாயப்போன என்
காதல்
நாசுக்காகவா?
என் வாழ்க்கை
காசுக்காகாகவா?

விட்டுவிடு என்னை
தொலைகிறேன் நான்...

2 comments:

Admin said...

நல்ல வரிகள் வாழ்த்துக்கள் தொடருங்கள்..

Ramesh said...

நன்றி சந்ரு

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு