Pages

Thursday, September 2, 2010

இது ஸ்டேடஸ் - 01

பல நாட்களாய் எழுதவேண்டுமென்று எழுதாமல் போனவைகளுக்காக ....
பதிவுலகம் வந்து ஒரு வருடம் கடந்த 27 ஆந்திகதி ஆனதற்காக.....
முகநூலில் இடப்பட்ட எனது தகுநிலையை (status -சரியாக இருக்கும் என நினைக்கிறேன்)இங்கு பதிவிடுகிறேன். பிடித்திருக்கா பாருங்க.. தொடர்ந்து எழுதணும் என்ற நினைப்பில் தொடருகிறேன்....


"என்னிடம் தோற்றவர்கள் எல்லாம் என்னை எதிரியாக பார்ப்பதனால்
என்னிடம் வென்றவர்கள் எல்லாம் என்னை அன்பால் தின்றதனால்"
........... தபூசங்கரும் நானும்.........

"எனது அன்புகளை சேமித்து வைத்திருக்கிறேன்.
நீங்கள் பயன்படுத்திக்கொள்ள.
கவனம் மனதை காயப்படுத்தாமல் கையாளுங்கள்."

‎"தலைவர்களுக்காகக் காத்திருக்காதீர்கள். தனிமையாகவே செய்யுங்கள், தனி மனிதனாக தனிமனிதனுக்கு செய்யத் தொடங்குங்கள்" - அன்னை தெரேசா

"எவன் ஒருவன் தனது இன்பங்களை (பிரியங்களை) தெரிவிக்காமல் இருப்பானோ அவனுக்கு அதை தெரியப்படுத்தி மற்றவர்களுக்கு சொல்லுங்கள்"

"கண்களின் கலக்கத்தை
ஒத்தடம் கொடுத்து
என் மனதை ஈரப்படுத்த
உங்கள் அன்பினால் மட்டுமே முடியும்......"


"கடவுள் பற்றிய ஆராய்ச்சியை இப்பொழுது ஒதுக்கி வைக்கிறேன்
மனிதனை தேடிக்கொண்டு
எனக்குள்ளும் உங்களுக்குள்ளும்...."


"எத்தனை கண்ணீரின் ஈரங்களை துடைக்க உங்கள் கரங்கள்
எத்தனை தடவை நீட்டப்படுகிறதோ
அப்போதுதான் உங்கள் கண்ணீர் கழுவப்படும்....."

"நீ
யாராவாவது
இருந்துட்டுப் போ
நான் உனக்கு நானாக இருக்கிறன்....."

"எனது இருட்டுக்களிலும்
உனக்கு
ஒளி கிடைக்கவே விரும்புகிறேன்"

"நீ என்னை நண்பனாக பார்க்கும் போது நண்பனாகிறேன்.
எதிரியாய் எண்ணுகையில்
நான் என்ன பண்ண எனக்கு நீயும் எதிரியே சொற்களில் மட்டும்"

"எதிரிகளே உங்களாலே தான் நான் முன்னேறுகிறேன்.... இல்லாவிடில் நான் என்பாதைகளை சீர் செய்ய முடியாமல் போய்விடும்.."

"பார்வை அவஸ்தைகளில்
உலர்த்திக்கொள்கிறது மனது.....
அவள்(ன்) போகிறாளே(னே)"

"உன் கடமையைச் செய் இல்லயேல் உனக்கான கடமை தவறிவிடும்"

"எங்கெல்லாம் மனம் காயப்படுகிறதோ
அங்கெல்லாம் பூக்கவேண்டும்
எம்மனப்பூக்கள் தடைகளைத்தாண்டி"

"நான் கடந்துவந்த பாதை முட்களானாலும்
உனக்கு பூக்களையே பரப்புகிறேன்..."

11 comments:

Bavan said...

வாழ்த்துக்கள் தல ஒரு வருட பூர்த்திக்கு..:)
(ட்ரீட் எப்ப..:P)

//பார்வை அவஸ்தைகளில்
உலர்த்திக்கொள்கிறது மனது.....
அவள்(ன்) போகிறாளே(னே)//

ஓஹோ.. ம்ம்..:D

anuthinan said...

வாழ்த்துக்கள் ரமேஷ் அண்ணா!!!

கொஞ்சம் முதலே சொல்லி இருந்தா ஒங்க ஊருக்கு வந்தப்பவே ட்ரீட் கேட்டு வாங்கி இருப்பேன்!!!

//"எதிரிகளே உங்களாலே தான் நான் முன்னேறுகிறேன்.... இல்லாவிடில் நான் என்பாதைகளை சீர் செய்ய முடியாமல் போய்விடும்..//

எனுக்கு பிடித்தது

Chitra said...

"நீ
யாராவாவது
இருந்துட்டுப் போ
நான் உனக்கு நானாக இருக்கிறன்....."


.... இது, முத்தான மொழி. எல்லாமே நன்றாக உள்ளன.

Atchuthan Srirangan said...

வாழ்த்துக்கள் ரமேஷ் அண்ணா......

யோ வொய்ஸ் (யோகா) said...

////எனது அன்புகளை சேமித்து வைத்திருக்கிறேன்.
நீங்கள் பயன்படுத்திக்கொள்ள.
கவனம் மனதை காயப்படுத்தாமல் கையாளுங்கள்."////

like that status dude....

Jana said...

வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்

Subankan said...

வாழ்த்துகள் :)

Vathees Varunan said...

Congrats Ramesh...:)

Ramesh said...

@Bavan said...

///வாழ்த்துக்கள் தல ஒரு வருட பூர்த்திக்கு..:)
ட்ரீட் எப்ப..:P)///

நன்றி
நான் கேட்டேன் நீ மறுத்தாய் ஹீஹீஹீ..

@Anuthinan S said...

///வாழ்த்துக்கள் ரமேஷ் அண்ணா!!!

//கொஞ்சம் முதலே சொல்லி இருந்தா ஒங்க ஊருக்கு வந்தப்பவே ட்ரீட் கேட்டு வாங்கி இருப்பேன்!!!///

நன்றி அனு
ஊருக்கா வந்த நீயா சொல்லவே இல்ல..

@ Chitra said...

//.... இது, முத்தான மொழி. எல்லாமே நன்றாக உள்ளன.///

நன்றி சித்ரா..

@Atchu said...

//வாழ்த்துக்கள் ரமேஷ் அண்ணா..///

நன்றி அச்சு

@யோ வொய்ஸ் (யோகா) said...
///like that status dude....///
நன்றி யோகா..
நானும் நொந்து நூடில்ஸ்ஸாகிட்டேனே......


@Jana said...

//வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்///
நன்றி அண்ணா

@Subankan said...

//வாழ்த்துகள் :)///

:)))

@வதீஸ்-Vathees said...

/// Congrats Ramesh...:)///
நன்றி வதீஸ்

Mohamed Faaique said...

"நீ
யாராவாவது
இருந்துட்டுப் போ
நான் உனக்கு நானாக இருக்கிறன்....."

Superb......

ம.தி.சுதா said...

சகோதரா தங்களின் ஒருவருடம் கடந்திருக்கும் வெற்றிப்பயணம் தொடர இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்...

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு