Pages

Wednesday, April 27, 2011

இது ஸ்டேடஸ் - 13

"கேட்காமலே கொட்டிவிட்டுச் சென்றது மழை
இடையிடையே கேலிச்சிரிப்பு மின்னல்களாய்
இடிந்துகொண்டிது வானம்
இடி இடித்தது நெஞ்சுக்குள்
மயான அமைதி இப்பொழுது..."

"நானும் நாணயமும் ஒன்று தான்.
தலையாயும் பூவாயும்.
யாருக்கும் தலைவனாயும், வாலாகாவும் இருக்க பிடிப்பதில்லை...
நாணயம் வெளிப்படும்போது
நான்
பூவாயும்
தலையாயும்..."

"ஆயிரம் மின்னல்கள்
மழையா இல்ல
வானம் இடிந்து விழுதா
மின்வெட்டு
கும் இருட்டு
இதமான சுவாத்தியம்
..... சற்று மழை ஓய்கிறது
மின்னல், மின்வெட்டு தொடர்கிறது."

"இன்றை நாள் மிகவும் மோசமாகவே விடிந்திருக்கு.
மகிழ்ச்சிப்படுத்த முயற்சிக்கிறேன்."

"ஒரு கடவுள் இறக்கும் பொழுதுகளை கடக்கும் நேரம் இன்னொரு கடவுள் உயிர்பித்த நாளும் நினைவுபடுத்தப்படுகிறது.
கடவுளும் மனிதனும் ஒன்று என்பது நிரூபணமாகும் தருணமா இது
இல்லை. இன்னொரு கடவுள் என யாராவது உதமாகும் நிலையா???""

"பூசப்படும் சீமெந்தில்
சுவர் சிரிக்கும்.
எனது வியர்வையின்
வெப்பத்தில் குடும்பம் வெளிக்கும்.
- சாந்துப்பூச்சுக்காரர்-"

"ஆயிரம் கனவான வெற்றி எண்ணங்களைவிட ஒரு சில நிஜமான தோல்விகளில் வாழ்க்கை வாழப்படும்."

இன்றைய படங்கள்

இந்துக்கல்லூரி கலையரங்கில் பேராசிரியர் மெளனகுரு அவர்களின் நெறியாள்கையில், நாடக அரங்கியல் பாடசாலை ஆசிரியர்களும், கிழக்குப்பல்கலைக்கழக விபுலாநந்தா நிறுவகமும், GTZ தொண்டர் நிறுவனத்தின் அனுசரணையோடு அரங்கேற்றிய மனம் மாறிய மன்னர்கள் என்ற வடமோடிக் கூத்தின் சில நிழல்படங்கள். அற்புதமான நிகழ்வு. நல்லதொரு நிகழ்வாக அரங்கேறிது மகிழ்ச்சி. அத்துணை விற்பன்னர்களுக்கும் நன்றி.
"வாழ்க கூத்து மரபு"

3 comments:

ம.தி.சுதா said...

மிகவும் ஆழமான வரிகள் அண்ணா அருமை...

Mohamed Faaique said...

கவிதை நல்லா இருக்கு....

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள் றமேஸ்
.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு