Pages

Wednesday, November 2, 2022

அவரும் நானும்

உண்மையில் அப்பாவின் ஆயிரம் சந்தோசங்களில் 40 வருடங்கள் பயணம் பெரும் சவால் தான். நீ பொிதா நான் பொிதா என்று நாங்கள் அன்பபைப் பகிர்ந்துகொள்ளுவோம். எனது எழுதுத்துக்களின் முதல் ரசிகன் தந்தையே!!
கண்ணதாசன் அழகாக சொல்லி இருக்கும் பாடல் அப்பாவுக்கு பிடித்த சிறினிவாஸ் பாடிய பாடல்!
”மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்” எவ்வளவு அற்புதமாகவும் எளிமையாகவும் வாிகளில் சொல்லி சென்றிருக்கிறார் கண்ணதாசன். பாடல் லிங் கீழே கேட்டுப்பாருங்கள் என்ன குறை இருக்கு இந்தபாடலில்.
ஆரம்பகாலத்தில் கோயில் குளம் என்பதற்கு சில வரையறைகளை வைத்திருந்தார் அப்பா. பகிடி கூட பண்ணுவார். பின்னர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின்னர் எனது வற்புறுத்தலில் ஆத்ம திருப்திக்காக கோயிலுக்கு சென்றார். கோயிலடியில் குழாமாக இவர் கதைச்சு சிாிப்பதை பார்க்க மனசு சந்தோசப்படும். இரவில் வந்து அந்தக் கதைகளின் நீட்சிகளைச் சொல்லுவார். ரசனையாக இருக்கும்..
காலையில் தண்ணீர் செம்பொன்றை கொளகொளவெனக் குடிப்பார். காலைச்சாப்பாடு அப்பாக்கும் அம்மாவுக்கும் எனக்கும் எப்போதும் தண்ணீச்சோறுதான். அதுவும் தயிர் குழைத்து தேங்காயப்பாலோடு பழஞ்சோறு தேவமிர்தமாக இருக்கும்.
சிலவேளைகளில் தயிர் இல்லாத போது புளியம்பழம் தான் எங்களுக்கு இருக்கும். அற்புத சுவை. மாம்பழங்களில் கறுத்தக்கொழும்பான் தான் எங்கள் இருவாின் விருப்பம். அம்மாவுக்கு மட்டுமே இந்த ரகசியம் புாியும். மூத்த மருமகன் வந்ததும் எங்கள் அத்தான் இந்தச்சாப்பாட்டைத்தான் விரும்பி இப்போது வரைக்கும் தொடர்கிறார்.
இலங்கை போக்குவரத்தில் பணியாற்றியதால் தனக்கு பென்சன் சம்பளம் தொடர்ச்சியாக கிடைக்கவில்லை என்ற குறை எப்போதும் அப்பாவுக்கு இருந்தது. நான் தன்னார்வ தொண்டு நிறுவனம், மற்றும் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்யும்போது தான் என்னிடம் சும்மா கொஞ்சமாவது பணம் தன்னுடைய கையில் இருக்கவேண்டும் என்று கேட்பார். ஆனால் மூத்த அக்கா தான் அப்பாவுக்கு பின்னர் எங்கள் குடுபம்பத்தை கொண்டு சென்றவர்.
முன்னர் பயிர்ச்செய்கைதான். கத்தாி, வெண்டி, பயற்றை என தொடர்ந்து செய்கை பண்ணினோம். பின்னர் வெற்றிலைத் தோட்டத்தை ஆரம்பித்தோம். அப்பா தான் எப்போதும் முதலில் நடுதலை செய்வார். அவர் நட்டால் சிறப்பாக இருக்கும் என்பது எங்கள் அம்மாவின் நம்பிக்கை.
வெற்றிலைச் செய்கையில் அனைத்து தொழில்முறைகளையும் செய்வார், கொழுந்து இறக்குதல், பதித்தல், வெற்றிலை பறித்தல், கொழுந்து கட்டுதல், மண்போடுதல்.. என்று எல்லாவகையறாக்களிலும் தேர்ந்தவர். என்னைத்தான் அத செய்தாத இத செய்யாத என்று சொல்லுவார். நான் தான் பிடிவாதமாக வெற்றிலைச் செய்கையில் ஈடுபடுவேன்.
வெற்றிலைச் செய்கை பற்றிய எனது பழைய பதிவு
தனியார் நிறுவனத்திலிருந்து விடுபடு. அரச உத்தியோகம் எடு எடு என்று பலமுறை என்னை வற்புறுத்தினார். நான் அவரை பலதடவைகள் சமாதனப்படுத்த வேண்டி இருந்தது. ஆனால் 2010 இல் இவா் இறப்பின்நுனி வரை சென்று திரும்பியதால் கட்டாயம் ஆசிாியர் தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை. மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம் கிடைத்தது போட்டிப் பரீட்சையில். ஆக இவருக்கு பெருத்த சந்தோசம் பின்னர் அப்பாவை நான் இழக்கக்கூடா என்று அவர் ஆசைப்படியே ஆசிாியராக வேண்டி இப்போதும் தொடர்கிறேன்.
மாணவர்களிடம் சொல்லியிருக்கிறேன், அப்பா சாகும் வரையும் தான் நான் ஆசிாியராக இருப்பேன் என்று. எப்படியோ வேறு தொழில்முயற்சியை ஆரம்பிக்கவேண்டும் என்று இருந்தேன். ஆனாலும் இப்போது அவர் ஆசைப்படியே இருந்திடவேண்டும் என்று இருக்கு.
கண்மூடினாலும், அவரை பார்ப்பது, கதைப்பது போன்றே தோன்றுகிறது.
உண்மையில் என்னுயிர் தோழன் தான். இழந்துவிட்டேன் அப்பா.
ஒவ்வொருநாளும் எனது வருகைக்காக காத்திருப்பார். நடுநிசி கடந்தாலும் ”தம்பி” என்று குரழெப்பித்தான் நித்திரை கொள்ளுவார். எப்படித்தான் நான் அவர் நித்திரையை குழப்பக்கூடா என்று மெதுவாக வந்து கதவைத் திறந்தாலும் அவர் கண்விளித்து கூப்பிடுவார்.
அதேபோல் நான் காலையில் வெளிக்கிட்டால் ஓடி வந்து எனக்கு முன்னால் நின்று என்னை பார்க்க நானும் அவரைப் பார்த்து சிாித்த பின்னரே செல்லவேண்டும் என்பது எழுதாமறை. வழியனுப்புதல் என்பது இதுதான் என்று சொல்லித் தந்தார். நான்ஏதும் அவரை பார்க்காமல் சென்றால் , நான் வீடு வந்ததும் முதல் கேள்வியாக இது இருக்கும் என்ன பிரச்சனை என்று. இதை சமாளிக்க நாம் ஆயிரம் பொய்களாவது தேவைப்படும்.
அப்பாக்கள் வாழ்தல் இப்படியாக இருக்கவேண்டும். அப்பாக்கள் மாிப்பதில்லை. மனதோடு!!
அவரும் நானும்
அன்பும் நட்பும்
அவரும் நானும்
அருளும் தவமும்
அவரும் நானும்
ஒளியும் நிழலும்
அவரும் நானும்
குழலும் இசையும்
அவரும் நானும்
ஊணும் உறக்கமும்
May be an image of one or more people and outdoors

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு