Pages

Thursday, December 1, 2011

வேலைத்தளங்களும் மாற்றங்களும்

ஒவ்வொரு மாற்றம் எப்பொழுதும் வந்துகொண்டே இருக்கும். இருக்கவேண்டும்.
வாழ்க்கையின் ஒவ்வொரு படிகளும் கற்றுத்தரும் இந்த மாற்றங்கள் வாழ்வில் மாற்றங்கள் தேவை என்பதை உணர்த்தும்.

மாற்றங்கள் சிலவேளை சந்தோசச் சாரல்களைத் தூவிச்செல்லும். சிலநேரம் கண்ணீர்ப்பூக்களால் அர்ச்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்.

ஒரு ஸ்டேடஸ்,
"ஒவ்வொரு கூலியாளும் கவனமான படிப்பினைகள் மூலம் என்றோ ஒரு நாள் முதலாளியாகணும். மாற்றங்கள் எப்பொழுதும் தேவை."
ஒரு நிறுவனத்தில் அல்லது ஒரு வேலைத்தளத்தில் வேலைசெய்யும்போது ஒரு முதலாளி அல்லது முகாமையாளர் போன்ற ஒருவர் மூலமே அதிக கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு பலவேலையாட்களால் அந்நிறுவனம் அல்லது வேலைத்தளம் இயங்கிக்கொண்டிருக்கும். பல்வேறானவர்களின் மனிதஉழைப்பு அதாவது அடிமட்ட வேலையாட்களாலே உயர்மட்ட முகாமைத்துவம் சிறக்க நிறுவனம் திறனாக இயங்கும்.
இங்கு மூளையைச் சலைவை செய்து தொழில்வாண்மைமிகு அனுபவமுள்ள முகாமையாளராலேயே நிறுவனத்தை மிகச்சிறப்பாக கொண்டுசெல்ல முற்படமுடிகிறது. ஆனால் பல்வேறு அடிமட்டங்களில் சிந்தும் வியர்வை உண்மையில் சிவப்பு இரத்தங்களாலே இயங்கப்படுகிறது என்பதை ஏற்றுக்கொண்டும் ஏற்றுக்கொள்ளாததன்மையால் நகர்கிறது.

இதற்காகவேண்டி மாறங்கள் அவசியம். அந்த வேலைத்தளத்தின் அடிமட்டத்தில் வேலைசெய்பவன் அல்லது அவனது பிள்ளை உயர்மட்டம்வரை செல்லவேண்டிய அவசியமும் தேவையும் இருக்கிறது. இங்கே மாற்றங்கள் ஒரு வஞ்சனையோடு அல்லது வாஞ்சியோடு வளரவேண்டியதில்லை. மாற்றங்கள் உணர்ந்து சிறப்பான சேவையாற்றி பல்வேறு திறமைகளை வெளிக்காட்டுவதன் மூலம் கொண்டுவரப்படவேண்டியதே.

ஏனெனில்,
'அரசசேவையில் 20 வருட சேர்விஸ் 30 வருட சேர்விஸ் என்றெல்லாம் பலர் சொல்லுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இஙகு அவர்சொல்லிய அந்த வருடங்களில் உழைத்த உழைப்பு வினைத்திறனாய் அமைந்திருக்காது. திறனாக இருக்கலாம். அதற்காக அதற்காக முழுமையானவர்களாக அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் மிகத்திறமைசாலிகள் என்றும் தம்பட்டமடிக்க முடியாது.


எந்தவொரு வேலையிலும் மாற்றங்கள் தேவை. ஆக அந்த மாற்றம் தான்வேலைசெய்யும் தளத்தில் உயர்வடையச் செய்யும் மாற்றங்கள் வரவேற்கப்படவேண்டிதும், அவர்களை அதே வேலைத்தளத்தில் சிறப்பான முன்னெடுப்புகளையும் முயற்சிகளையும் சிறப்பாக மேற்கொள்ளத்தூண்டும்.

ஆனாலும் ஏறத்தாழ 5 - 8 வருடங்கள் வரையே ஏதாவது ஒரு துறையில் இருத்தல் சிறப்பாக, நமது வேலைகளையும் நமது திறமைளையும் வினைத்திறனாகவும் (Efficiency), விளைதிறனாகவும் (Productivity) வெளிக்காட்டமுடியும்.

இதன்பின்னர் வேறுதுறையில் அல்லது முன்னேற்றகரமான நிலையில் வேலையைச் செய்வோமானால் இதோ வினைத்திறனையும் விளைதிறனையும் பெற்றுக்கொள்ள முடியும் நல்ல படிப்பினைகள் (Lesson Learning) மூலம்,
இதனால் எந்நவொரு வேலையிலும் கூடியகாலம் இருந்து அலுப்பறைகளைக் நமக்கும் மற்றவர்களுக்கும் கூட்டிக்கொள்ளாமல் நாங்கள் களைப்படையாமல் மகிழ்ச்சியான சிந்தனையுடன் மிகச்சிறப்பாக பணியாற்றலாம் இல்லையா? ஒரே வேலைத்தளத்தில் தொடர்ந்திருக்கும் போது பல்வேறு மனஉழைச்சலுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக வேண்டியேற்படும். இதனைத்தவிர்ப்தற்கு மிகச்சிறந்த மருந்தே "மாற்றங்கள் உணரப்படவேண்டும்"(Feel the change) என்பதாகும்.


இதற்காக 'இத்தின வருச சேர்விர்ஸ்' என்று மொக்கை போடாம இந்தக்காலம் என்னுடைய காலம் என்று சொல்லக்கூடியவாறு செயலாற்றல் சாலச்சிறந்தது எனக்கருதுகிறேன்.
மாற்றங்கள் அவசியம் தேவையல்லவா,??




4 comments:

anuthinan said...

:)

தேடி கொண்டு இருந்தவைக்கு இங்கு பதில் இருக்கு!

நன்றி அண்ணா!

சென்னை பித்தன் said...

த.ம.2
சரியாச் சொல்லியிருக்கீங்க.

திண்டுக்கல் தனபாலன் said...

மாற்றம் தானே வாழ்க்கை.பகிர்விற்கு நன்றி நண்பரே! நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

Hari said...

supper article..விளங்குகிறது Ramesh anna.... இந்த மாற்றம் எல்லாத்துக்கும் பொருந்தும் தானே............

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு