Pages

Thursday, April 14, 2011

டூயட் கவிதைகள் - 01

இன்றுமுதல் மற்றொரு ஆரம்பம் இது டூயட் கவிதைகள் என்று ஆரம்பிக்கிறது. அவ்வப்போது வந்துசேரும். பல்வேறுவிதமாக வரும். இன்று ஒரு வித்தியாசம்.

அவன்:

ஆயிரம் கனவுகளை
தின்றிருக்கிறாய்
அத்தனையையும்
மூழ்கடித்துவிடுகிறது
உன் புன்னகை

அவள்:

நண்பர்கள் போகின்ற வழியில்
நீ மட்டும்
'திரும்பிக்கொள்வது'
போதும் எனக்கு
நள்ளிரவு மணியை கடப்பதற்கு

அவன்:

நீ பேசாத தருணங்களில்
பேசிவிடும்
ஒரு 'எஸ்.எம்.எஸ்'

அவள்:

என் பிற்கொடுப்பனவு
'பில்லில்'
உனக்கான அழைப்பே
உன் பேச்சுக்களை
காட்டிக்கொடுக்கும்

அவன்:

ஒரு பூங்கொத்து
புன்னகை
ஒரு டயரி
எஸ்.எம்.எஸ்

அவள்:
உன் பார்வைகள்
நான் பார்வைவங்கி
அழைப்புக்கள்
காதல் வழி
வலி


6 comments:

Mohamed Faaique said...

சின்னதாகவும், அருமையாகவும் இருக்கு..... வாழ்த்துக்கள்

Chitra said...

சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!

கமலேஷ் said...

நல்ல டூயட் ரமேஷ்.

ஹேமா said...

ஏதாவது ஒரு மெட்டுப்போட்டுப் பாடிப் பாக்கலாமோ றமேஸ் !

Bavan said...

//என் பிற்கொடுப்பனவு
'பில்லில்'
உனக்கான அழைப்பே
உன் பேச்சுக்களை
காட்டிக்கொடுக்கும்//

ஓஹோ.. AIRTEL to DIALOG க்கு காரணம் இதுதானோ..:P

எல்லாக் கவிதைகளும் அருமை அண்ணா, இரசித்தேன்..:)

Ramesh said...

@@ நன்றி மொகமட்
@@ நன்றி சித்ரா
@@ நன்றி கமலேஷ்
@@ நன்றி ஹேமா..
@@ நன்றி பவன்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு