Pages

Tuesday, June 7, 2011

நான் காதலிக்கப்படுகிறேன்


ஒருமுறை தொலைந்த கணம்
நீ மட்டும் தான்

அன்புக்கும் பாசத்துக்கும் சேர்த்த
உறவு
வெல்லும் தோற்கும் எண்ணம்
முதல்முதலானது

கண்சொன்ன வார்த்தைகளில்
நீ
சுளித்துக்கொண்ட தருணங்களில்
தெரிந்தவைகள் எல்லாம்
இல்லாதபோது கொல்லும்
காட்சிகளாகுமென்பது சொல்லும்
மனசு அழுது கட்டியாகி
விழ எத்தனித்த அந்த
கண்ணீர்

உன்னைப் பிரிந்ததைப் பற்றிய வருத்தம்
இன்னும் எத்தனை நாட்களுக்கு
கொண்டு செல்லப்போகிறேன் என்ற
ஏக்கத்தாலே போகிறது

கண்ட போது
மீண்டும்
துளிர்த்துக்கொண்ட
நகல் சிரிப்பில்
சாயமா இரத்தமா
ஆழமா ஏக்கமா

நானும் நீயும் சேர்ந்திருந்தால்
இத்தனை நீளம் போகுமா




9 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அருமையான கவிதைய வாசித்தேன்..
நன்று...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

"நான் காதலிக்கப்படுகிறேன்"


அப்படியா..?

Ashwin-WIN said...

அருமை அருமை. காதலிங்க பாஸ் காதலிங்க. ஆனா கண்ணீர் வேணாம்.

Unknown said...

ம்ம் ...........

கார்த்தி said...

காதல் காதல் ??

கடம்பவன குயில் said...

கவிதை அருமை. ஆனால் காதல் என்றாலே கண்ணீர்தானா ?

கடம்பவன குயில் said...

கவிதை அருமை. ஆனால் காதல் என்றாலே கண்ணீர்தானா ?

Mohamed Faaique said...

வர.. வர..காதல்............... என்னமோ பண்ணுதையா.....

Ramesh said...

@@ நன்றி சௌந்தர்: கவிதை மட்டுமே..
@@ நன்றி அஷ்வின் : ம்ம்
@@ நன்றி மைந்தன் : :)
@@ நன்றி கார்த்தி: காதலே
@@ நன்றி மொகமட் : காதல் பண்ணும்.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு